Mouna Ragam 2 Today Episode | 17.02.2022 | Vijaytv

Mouna Ragam 2.17.02.2022

Mouna Ragam 2.17.02.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா ஷிலாவிடம் இரவு கொடுக்கும் மாத்திரையை கேட்டார். இப்போதாவது தன் மீது நம்பிக்கை வைத்து அந்த மாத்திரையை தருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் ஷீலா அதை மறுத்துவிட்டார். நீ செய்த உதவி எல்லாம் போதும் என்று சத்யாவை திரும்ப அனுப்பினார். ஸ்ருதிக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தார். சத்யா சென்ற பின் என்ன மாத்திரை என்று கேட்டார். அதற்கு ஷீலா வருனுக்கு இருக்கும் பிரச்சனைக்கு கொடுக்க வேண்டிய மாத்திரை என்று கூறினார். இதனை வருஷமாக மாத்திரை போட்டும் எதற்காக இன்னும் சரி ஆகவில்லை என்று ஸ்ருதி கேட்டதற்கு, தான் தான் அந்த மாத்திரையை மாத்தி வெறும் தூக்க மாத்திரையை கொடுப்பதாக கூறினார். எதற்காக இதை எல்லாம் செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு. தனக்கு திருமணம் ஆன கதை. பின் மனோகர் ஆபீசில் நடந்தவை, இதனால் ஷீலாவின் கணவர் தற்கொலை செய்துகொண்டது, அனைத்தையும் கூறினார். சத்யாவுக்கு பாட்டு பள்ளி ஆரம்பிப்பதில் வீட்டில் அனைவரும் ஆர்வமாக ஆளுக்கு ஒரு திட்டங்களை கூறினார்கள். இந்த இடத்தில் மனோகர் மனதில் நல்ல மருமகள் என்ற எண்ணம் வருவதற்காக ஸ்ருதி தனக்கு தெரிந்த இரண்டு மூன்று திட்டங்களை கூறினார். ஆனால் எந்த திட்டமும் நல்ல திட்டமாக இல்லை. அது மணிகருக்கும் பிடிக்கவில்லை. இதனால் மீண்டும் ஸ்ருதி எரிச்சல் அடைந்தார். அடுத்த நாள் காலையிலே ஸ்ருதி அறையில் தருண் இல்லை என்றதும் எரிச்சல் அடைந்தார். காதம்பாரி ஸ்ருதிக்கு அழைத்து பேசினார். ஸ்ருதி இங்கு தனக்கு தனிமையாக இருப்பது போல் இருக்கிறது என்றார். சத்யா மட்டும் வருண் கூட சேர்ந்து சந்தோசமாக இருக்கிறாள். ஆனால் தருண் என்னிடம் பேச கூடவில்லை என்று புலம்பினார். தனக்கு பள்ளி ஆரம்பிப்பது பற்றி தன் அப்பாவிடம் சொல்லவேண்டும் என்று கார்திக்கிற்கு அழைத்து பேசினார். அவர் பேசுவதை அரைகுறையாக கேட்டார் ஸ்ருதி. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author