முதியவர்களுக்கு வீடு தேடிவரும் தடுப்பூசி – சென்னை மாநகராட்சி

80 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் விருப்பப்படின் அவர்களுக்கு வீடு தேடி வந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் பகுதிகளில் வசிக்கும் 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆசைப்பட்டால் வீடு தேடி வந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவர்கள் முறையாக 044-25384520 மற்றும் 044-46122300 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு … Read more

விசாகப்பட்டினத்தில் நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் திட்டம் தொடக்கம்

ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் 25 மெகாவாட் திறன் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் திட்டத்தை தொடங்கியுள்ளது தேசிய அனல்மின் கழகம். தொடர்ந்து புதுப்பிக்க கூடிய ஆற்றல்களை பயன்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்திவரும் நிலையில் 25 மெகாவாட் திறன் கொண்ட நாட்டிலேயே மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் திட்டத்தை ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தில் மாநில அரசின் உதவியுடன் சிம்ஹாத்ரி அனல்மின் நிலைய நீர் தேக்கத்தில் தேசிய அனல்மின் கழகம் துவங்கியுள்ளது. 75 ஏக்கர் … Read more

20 பேருக்கும் மேலானவர்களை காவு வாங்கிய ஆப்கானிஸ்தான் விமான நிலையம்

அமெரிக்க படைகள் வெளியேறிய ஒரு வாரத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதும் கைப்பற்றி விட்டனர். அதிபர் அஸ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் மக்களும் தொடர்ந்து ஆப்கனை விட்டு வெளியேறும் நோக்கோடு விமான நிலையத்திலேயே தங்கி போராடி வருகின்றனர். உயிரை கையில் பிடித்துக்கொண்டு எப்படியாவது நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என்ற நோக்கோடு விமான நிலையத்தின் நெரிசல்களிலும், பாதுகாப்பின்றி விமானத்தின் இறக்கைகளிலும் இதர பாகங்களிலும் அமர்ந்து கொண்டு பாதுகாப்பின்றி பயணம் செய்தவர்கள் என்று 20-க்கும் மேற்பட்டவர்களை காவு … Read more

வருகிறது இந்தியாவின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி சைக்கோவ்-டி

ஏற்கனவே கோவாக்சின்,கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி வகைகளுக்கு அனுமதி அளித்திருந்த மத்திய அரசு தற்போது டி.என்.ஏ தடுப்பூசியான சைக்கோவ்-டி என்ற தடுப்பூசிக்கும் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது டெல்டா வகை கொரோனோ வைரஸ்க்கு எதிராக 66 சதவிகிதம் போராடக்கூடியது என்று அந்த தடுப்பூசியை உருவாக்கிய கெடிலா நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்து வருகிறார்கள். பெரும்பாலான தடுப்பூசிகள் இரண்டு தவணையாக மட்டுமே செலுத்தப்பட்டு வரும் நிலையில் சைக்கோவ்-டி மூன்று தவணையாக செலுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறி வருகின்றனர். இந்தியாவிலேயே … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,043 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று, 401 பேர் தொற்றுக்கு பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,043 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 401 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த இறப்பு 4,34,399-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஒரு பக்கம் குறைந்து வரும் கொரோனோ தொற்று, ஒரு பக்கம் உயர்ந்து வரும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை என்று நேர்மறையாக திரும்பி இருக்கிறது இந்தியாவில் கொரோனோவின் நிலை. இதுவரை இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் … Read more

வெளியானது விக்ரம் நடிக்கும் மகான் படத்தின் முன்னோட்டம்

தயாரிப்பாளர் லலித் குமார் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் – விக்ரம் – துருவ் விக்ரம் – சிம்ரன் – சிம்ஹா என்ற பெரிய கூட்டணி இணையும் மகான் திரைப்படத்தின் முன்னோட்டம் சத்தமில்லாமல் வெளியாகி இணையங்களில் பெரிய சத்தமிட்டு வைரலாகி கொண்டிருக்கிறது. சந்தோஷ் நாராயணின் அசத்தலான பறை இசையில் தொடங்கும் முன்னோட்டம், தசரா குழுவில் வேஷமிடும் ஒரு குழுவை காண்பித்து, அதற்கு பின்னர் வரும் சீனில் விக்ரம் தனது பைக்கில் … Read more

இந்திய தண்டனை சட்டம் IPC – SECTION 100 பாலியல் விதி மீறல்களை பற்றி என்ன சொல்கிறது?

ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் இந்தியாவில் ஒரு பாலியல் விதிமீறல்கள் பற்றிய புகார்கள் பதிவாகிறது. இதில் பதிவான புகார்கள் மட்டுமே அடங்கும் எனில் பதிவில்லாத புகார்கள் என்பது எத்தனையோ இருக்கும். பயத்தில் புகார்கள் கொடுக்காமல் மறைத்தவர்கள் எத்தனை பேராக இருக்கும் என்பது கணக்கில் இல்லாதது. சிறுமிகள், முதியவர்கள் என்று வயது வித்தியாசம் பாராமல் இன்றைய காலங்களில் அரங்கேறும் பாலியல் அத்துமீறல்களுக்கு இந்திய சட்டத்தில் எப்போதாவது தான் உயர்ந்த தண்டனை எனப்படும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஒரு பாலினத்தின் மேல் … Read more

பள்ளி,கல்லூரிகள் திறக்க அனுமதி – தமிழக அரசு

கொரோனோ காலம் உலகத்திற்கே துன்ப காலம் என்றாலும் ஒரே ஒரு இனத்திற்கு மட்டும் அது இன்ப காலம். அது வேறு எந்த இனமும் அல்ல நம் மாணவர் இனம் தான். இணைய வழிக்கல்வி என்று கடந்த இரண்டு வருடங்களாக புத்தகங்களையே மறந்து இருக்கிறார்கள். தற்போது அவர்களுக்கு தலையில் அம்மிக்கல்லை தூக்கி தலையில் போட்டாற்போல ஒரு கசப்பான செய்தி வந்திருக்கிறது. அது தான் செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12 வகுப்புகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுழற்சி முறையில் வகுப்புகள் … Read more

சிறுபான்மை இனத்தவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கும் தலிபான்கள்!

அமெரிக்க படைகள் வெளியேறிய ஏழு நாட்களுக்குள் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முண்டாரக்ட் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றிய போது ஷியா பிரிவைச் சேர்ந்த சிறுபான்மையினர் 9 பேரை படுகொலை செய்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. கடந்த 2001-இல் அல்கொய்தா அமைப்பு இரட்டை கோபுர தாக்குதலை அமெரிக்காவில் நிகழ்த்தி இருந்திருந்தது. அன்றைய தலிபான்கள் அதை ஆதரித்தும் அல்கொய்தா அமைப்பின் தலைவர் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தும் வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா தலிபான்கள் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 34,457 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று,375 பேர் தொற்றுக்கு பலி

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34,457 ஆக உள்ளது. மேலும் தொற்றுக்கு ஒருநாளில் பலியானவர்களின் எண்ணிக்கையும் 375-ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கையும் 4,33,964 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் மீட்பு விகிதம் உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் வரை தேசிய மீட்பு விகிதம் 97.54 சதவிகிதமாக தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே இருந்து வருகிறது. … Read more