அமெரிக்காவையும் தென்கொரியாவையும் எச்சரிக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-னின் தங்கை!

தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து வருகின்ற ஆகஸ்ட் 16 முதல் 26 வரை மிகப்பெரிய அளவில் போர் ஒத்திகை நடத்த இருப்பதாக தென்கொரிய பத்திரிக்கை ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே எலியும் பூனையுமாய் திரிகின்ற வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் தற்போது அமெரிக்காவும் புகுந்துள்ளதால் இந்த விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.’தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து நடத்த இருக்கிற போர் ஒத்திகை எங்களுடன் போர் புரியவா..? எதற்கும் தயாராக இருக்கிறோம். முன்னேற்பாடுகள் பலமாக இருக்கும். எதிர்வினையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்’ என்று … Read more

அடுத்த கட்டமாக உலக சாம்பியன்ஷிப் வெல்வதே இலக்கு – நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றிருந்த நீரஜ் சோப்ராவிற்கு இந்திய தடகள சம்மேளனம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நீராஜ் சோப்ரா தன்னுடைய அடுத்த கட்ட இலக்கு என்பது உலக சாம்பியன்சிப் வெல்வதே என்றும் அதற்கான முன்னெடுப்புகளை இப்போதிருந்தே தொடங்க இருப்பதாகவும் தன் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். ஏற்கனவே ஆசிய விளையாட்டு போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றிருந்த நீராஜ் சோப்ரா தற்போது நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் தனது … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 38,353 பேருக்கு தொற்று,497 பேர் பலி

மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் தாக்க கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில் தொடர்ந்து சராசரியாக கொரோனோ தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு நாளில் மட்டும் புதியதாக 38,353 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 497 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த உயிரிழப்பு 4,29,179-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 51 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய … Read more

பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் GSLV F10 நாளை விண்ணில் பாய்கிறது – இஸ்ரோ

பேரிடர் எச்சரிக்கை,கனிமவியல்,வனவியல் குறித்த கண்காணிப்பிற்கான அது நவீன செயற்கை கோள் GSLV F10 மூலம் நாளை அதிகாலை 5:43-ற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளிமையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. கொரோனோ சூழலில் தொடர்ந்து இஸ்ரோவின் பல்வேறு பணிகளுக்கு இடையூறுகள் இருந்த நிலையில் எல்லா செயல்நிலைகளும் தாமதமாகி வந்தன. தற்போது சூழல் தகுந்தவாறு அமைந்தததால் இந்த வருடத்தின் இரண்டாவது GSLV வகை ராக்கெட் ஆனது EOS-3 எனப்படும் அதிநவீன கண்காணிப்பு செயற்கை … Read more

வெளியாகிறது நடிகர் விவேக் கடைசியாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி!

நடிகர்,மக்களின் கலைஞர்,இயற்கையின் பாதுகாவலன் என்றெல்லாம் மக்களால் அழைக்கப்படும் கலைவாணர் விவேக் அவர்கள் திடீரென்று மாரடைப்பால் கடந்த ஏப்ரல் அன்று காலமானார். தற்போது அவர் கடைசியாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான LOL- எங்க சிரி பாப்போம் என்னும் நிகழ்ச்சி அமேசான் வலை தளத்தில் ஆகஸ்ட் 27 அன்று வெளியாக இருப்பதாக அறியப்படுகிறது. மிர்ச்சி சிவா மற்றும் கலைவாணர் விவேக் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி மொத்தம் ஆறு பகுதிகளை கொண்டது.  இதில் RJ விக்னேஷ் காந்த், பிரேம்ஜி அமரன், … Read more

பெகாசஸ் விவகாரம்: இந்திய அரசின் நிறுவனமே இந்தியாவின் முக்கிய பிரமுகர்களை உளவு பார்த்ததா?

’ தி வயர் ‘ எனப்படும் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி பெகாசஸ் எனப்படும் இஸ்ரேலிய உளவுக் கருவியை வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாகவும்,மேலும் இந்தியாவில் நீதிபதி,பத்திரிக்கையாளர்கள்,கட்சி தலைவர்கள்,தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட 300-க்கும் பேற்பட்டோர் அந்த உளவுக்கருவியால் உளவு பார்க்கப்பட்டதாகவும் அந்த தரவுகள் கூறுகின்றன. இது மட்டும் அல்லாமல் இந்த உளவுகள் அனைத்தும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிறுவனம் ஒன்றிலிருந்தே நடந்திருப்பதாகவும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன. பெகாசஸ் என்பது இஸ்ரேலின் NSO என்னும் குழு வடிவமைத்த ஒரு … Read more

அடுத்ததாக களம் இறங்குகிறது புதிய உயிர்க்கொல்லி வைரஸ் ’மார்பர்க்’

இரண்டு வருடமாகியும் இன்றளவும் கொரோனோ ஓய்ந்தபாடில்லை. அதற்குள்ளும் அடுத்த வைரஸ் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. வவ்வால்களிடம் இருந்து மனிதருக்கு பரவும் மார்பர்க் என்னும் வைரஸ் 88 சதவிகிதம் இறப்பை ஏற்படுத்தகூடியதாம். இது மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. மார்பர்க் வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடியது. இது பெரும்பாலும் குகைகளில் வாழும் வவ்வால்களிடமிருந்து மனிதனுக்கு பரவுவதாக அறியப்படுகிறது. இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது. கினியாவின் சுற்றுபுறப்பகுதிகளில் மார்பர்க் வைரஸ் தாக்கி … Read more

பூமி என்னும் ஒரு உன்னத கிரகத்தை மனித இனமாகிய நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம் – ஐநா

பனிப்பொழிவு,நிலச்சரிவு,தொடர்மழை,ஓயாத அனல்,வெள்ளம், வரலாறு காணாத காட்டுத்தீ என்று எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் ஏதேனும் ஒரு இயற்கை பேரிடர் இருந்து கொண்டே தான் இருக்கிறது. புதைபடிவ எரிபொருள்கள், பசுமை இல்ல வாயுக்களை வெளிப்படுத்தும் சாதனங்கள் இவைகளின் பயன்பாடுகளே இந்த காலநிலை மாற்றத்திற்கு பெரிதும் காரணம் என்று ஐநா தனது அறிக்கையில் கூறி உள்ளது. உலக வெப்பமயமாதல் உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.ஒரு சூழலில் வறட்சி நிலவினால் மற்றுமொரு சூழலில் பேரிடர் விளைவிக்கும் கனமழை பொழிகிறது. … Read more

தொடர்ந்து ஏழு நாட்களாக கீரிஸ் நாட்டில் எரியும் காட்டு தீ

கீரிஸ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தீவான ஈவியாவில் உள்ள பிரிஸ்டின் காட்டில் தொடர்ந்து ஏழாவது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஏராளமான நிலப்பகுதிகளையும் வீடுகளையும் விழுங்கிய காட்டுத்தீ காட்டில் உலவி வரும் உயிரினங்களையும் அழித்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வருகிறது கீரிஸ் அரசு. தொடர்ந்து தட்ப வெப்ப நிலை மாறி வரும் கீரிஸ் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமார் 45 டிகிரி செல்சியஸ் … Read more

அவசர சிகிச்சை பிரிவில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்!

கவிஞர்,எழுத்தாளர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளராக அறியப்படும் பாரதி பாஸ்கர் மூளை அறுவைச்சிகிச்சைக்காக அப்போல்லோவின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவரின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் உள்ள ஒரு சிலர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். சாலமன் பாப்பையா பட்டிமன்றம் என்றாலே கண்கள் முதலில் தேடுவது ராஜா சார் என்றால் அதற்கு எதிர் அணியில் பாரதி பாஸ்கர் மேடம் அமர்ந்து இருக்கிறார்களா என்று அனைவரும் பொதுவாகவே தேடுவது உண்டு. அந்த அளவுக்கு பட்டிமன்றத்தை டெலிவிசன் மூலமாக உலக அரங்கிற்கு கொண்டு சென்ற … Read more