மக்களைத்தேடி மருத்துவம் இன்று முதல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

’மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டம் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சகம் மூலம் இன்று முதல் தமிழகம் முழுக்க ஏழு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்படுகிறது. தொற்றாத நோய்களான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மாத்திரை மருந்துகளுக்காக மருத்துவமனைகளைத் தேடி தொடர்ந்து அலைய முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நோயாளிகளுக்கு பயனளிக்கும் பொருட்டு ’மக்களைத்தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக கோவை,சென்னை,சேலம்,மதுரை,தஞ்சாவூர்,திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஏழு மாவட்டங்களில் … Read more

ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு ஹாக்கியில் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் ஹாக்கி பிரிவில் வெண்கலத்திற்கான போட்டியில் இந்திய அணியும் ஜெர்மனியும் மோதிய நிலையில், 5-4 என்ற கணக்கில் வென்று வெண்கலத்தை தன்வசப்படுத்திக்கொண்டது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. விறுவிறுப்பாக நடைபெற்ற வெண்கலத்திற்கான ஆட்டத்தின் முதல் இரண்டு பாதியில் 3-1 என்ற கணக்கில் ஜெர்மனி முன்னிலையில் இருந்த போதும் அடுத்து ஆட்டத்தில் அதிரடி காட்டிய இந்திய அணி 3-5 என்று முன்னிலை பெற்றது. இறுதியில் 4-5 என்ற கணக்கில் ஜெர்மனியை வென்று ஒலிம்பிக்கில் 41 … Read more

சீனாவின் வூஹான் ஆய்வகம் தான் கொரோனோவின் பிறப்பிடம் – அமெரிக்கா அறிக்கை

சீனாவின் வூஹான் ஆய்வகம் தான் கொரோனோவின் பிறப்பிடம் என்று உறுதி செய்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது அமெரிக்க புலனாய்வு துறை. உலக நாடுகள் அனைத்தும் சீனாவே கொரோனோவின் பிறப்பிடம் என்று கை காட்டிய போதும் அதை தொடர்ந்து மறுத்து வருகிறது சீன அரசு. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனோ தொடர்பான விசாரணையை முழுவதும் அலசி ஆதாரங்களுடம் மூன்று மாதங்களுக்குள் ஒப்படைக்கும் படி அமெரிக்க புலனாய்வு துறைக்கு உத்தரவிட்டார். அதன்படி புலனாய்வு துறை செய்த விசாரணையின் … Read more

அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் தோற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி- டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி அரையிறுதியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்ட இந்திய அணி 2-1 என்ற கணக்கில் போராடி தோல்வியுற்றது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் முனைப்போடு விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் 2-1 என்ற கணக்கில் வீழ்ந்தது. ஆதலால் ஆகஸ்ட் 6 அன்று நடைபெறும் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி, கிரேட் பிரிட்டனை எதிர்கொள்கிறது. தங்க பதக்கத்திற்கான போட்டியில் அர்ஜென்டினாவும் நெதர்லாந்தும் மோதிக்கொள்கின்றன. ” தங்கமோ,வெள்ளியோ,வெண்கலமோ பதக்கத்தை தாண்டி இந்த அணி … Read more

மல்யுத்தம்: சில்வரை உறுதி செய்தார் ரவிக்குமார் தாஹியா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா, கஜகஸ்தானின் நூரிஸ்லாம் சனாயேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 23 வயதே ஆன ரவிக்குமார் தாஹியா முதல் பாதியில் பின் தங்கியிருந்த போதும் அதற்கு பின் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை தன் பக்கம் திருப்பினார். இதன் மூலம் இந்தியாவிற்கு பதக்க பட்டியலில் சில்வரை உறுதி செய்திருக்கிறார் ரவிக்குமார் தாஹியா. இதற்கு முன்னர் 2012 லண்டன் ஒலிம்பிக்சில் சுஷில் குமார் மல்யுத்தத்தில் … Read more

14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசே விடுவிக்கலாம் – உச்சநீதிமன்றம்

14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சிறைக்கைதிகளை குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு, 433ஏ பிரிவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது, அதே சமயம் 14 ஆண்டுகள் தண்டனை முழுமை பெறாத கைதிகளை கருணையின் … Read more

ஈட்டி எறிதல்: முதல் எறிதலிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நீராஜ் சோப்ரா- டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தனது முதல் எறிதலிலேயே 86.65 மீட்டர் எறிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் நீராஜ் சோப்ரா. முன்னால் தங்க பதக்க வெற்றியாளரும், உலகின் தலை சிறந்த வீரருமான ஜோஹன்னஸ் வெட்டரே தனது மூன்றாவது எறிதலில் தான் தகுதி புள்ளியை பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் போது, 23 வயதே ஆன இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா, தனது முதல் எறிதலிலேயே 86.65 மீட்டர் எறிந்து இறுதிப்போட்டிக்கு … Read more

மகளிர் குத்துச்சண்டை: வெண்கலம் வென்றார் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெயின்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா துருக்கியின் புஷானெஸ் சுர்மெனலியிடம் தோற்ற நிலையில் தற்போது வெண்கலப்பதக்கத்தை பெறுகிறார். மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின் முதல் அரையிறுதியில் இந்தியாவில் லவ்லினா போர்கோஹெயின் துருக்கியின் புஷானெஸ் சுர்மெனலியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய புஷானெஸ், லவ்லினாவிற்கு ஒரு புள்ளியைக்கூட விட்டுக்கொடுக்காமல் 5-0 என்ற கணக்கில் ஆக்ரோஷமாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் தோற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லையெனினும் வெண்கலப்பதக்கத்தை வென்று இந்திய … Read more

மல்யுத்தம்: அரையிறுதிக்கு முன்னேறிய ரவிக்குமார் மற்றும் தீபக் புனியா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மல்யுத்தம் பிரிவில் ரவிக்குமார் தாஹியா மற்றும் தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவிற்கு மற்றுமொரு பதக்க நம்பிக்கையை பெற்றுத்தந்திருக்கின்றனர். மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா பல்கேரியாவின் வான்குளோவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே களத்தில் அதிரடி காட்டிய ரவிக்குமார் 14-4 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வான்குளோவை வீழ்த்தி அரையிறுதிக்குள் முன்னேறினார். மேலும் அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவ்வை எதிர்கொள்கிறார் இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா. மல்யுத்தம் 86 … Read more

வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது இந்திய ஆடவர் ஹாக்கி அணி – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் ஹாக்கி பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் ஜெர்மனியும் மோதிக்கொள்கின்றன. முதல் அரையிறுதியில் பெல்ஜியத்திடம் 5-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோற்றிருந்த நிலையில் தற்போது வெண்கலத்திற்கான போட்டியில் ஆகஸ்ட் 5 அன்று ஜெர்மனியை எதிர் கொள்கிறது. அதே நாளில் தங்க பதக்கத்திற்கான போட்டியில் உலக ஹாக்கி தர வரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கும் அணிகளான ஆஸ்திரேலியாவும், பெல்ஜியமும் மோதிக்கொள்கின்றன. எதுவாகினும் … Read more