கேரளத்திலிருந்து வருபவர்களுக்கு RT-PCR பரிசோதனை கட்டாயம் – தமிழக அரசு

தொடர்ந்து கேரளத்தில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக கேரளத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு RT-PCR சோதனையை கட்டாயப்படுத்தி உள்ளது தமிழக அரசு. சில நாட்களாகவே கேரளத்தில் அதிகரித்து வரும் கொரோனோ தொற்று காரணமாக தமிழக-கேரள மாநில எல்லைகளில் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைவருக்கும் RT-PCR பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது ரயில் வழியாக விமானம் வழியாக மாநிலத்திற்குள் உள்நுழைபவர்களுக்கும் பொருந்தும் என்றும் இரண்டு தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு இந்த பரிசோதனை அவசியமில்லை என்பதையும் மாநில … Read more

டைரக்டர் ராஜ்மவுலியின் ‘RRR’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

ராஜ்மவுலி இயக்கத்தில் NTR, ராம் சரண், அஜய் தேவகன், அலியாபட் என்ற பெரிய பட்டாளங்கள் களம் இறங்கும் படமான RRR படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 1 வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இணையதளத்தில் இன்று படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. கீரவானி இசையமைப்பில் அனிருத் பாடியிருக்கும் ’நட்பு’ எனப்படும் இந்த பாடலுக்கு மதன் கார்கி அவர்கள் பாடல் வரிகளை எழுதிக் கொடுத்துள்ளார். பாகுபலிக்கு அப்புறம் ராஜ்மவுலி இயக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது … Read more

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 910 பேர் கொரோனோவுக்கு பலி

அமெரிக்காவிற்கு அடுத்து கொரோனோ அதிகம் பாதித்த நாடாக கருதப்படுவது பிரேசில். நேற்றைய ஒரு நாளில் மட்டும் பிரேசிலில் கொரோனோ தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 910 ஆக உள்ளது. சர்வதேச நாடுகளில் மீண்டும் அதிகரிக்கின்ற கொரோனோ தொற்று மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசிலில் புதிதாக தொற்று பாதித்தவர்கள் 37,582 ஆகவும், தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 910 ஆகவும் உள்ளது. இதன் மூலம் பிரேசிலில் மொத்த பலி எண்ணிக்கை 5,56,370 ஆக … Read more

வட்டு எறிதலில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற கமல் பீரித் கவுர் – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிர் வட்டு எறிதல் பிரிவில் 64 மீ தூரத்திற்கு எறிந்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பஞ்சாப்பின் இளம் சிங்கம் கமல் பீரித் கவுர். வயது 25, அம்மா அப்பா இருவரும் விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள். முதல் ஒலிம்பிக், இடம்பெற்றது குரூப் பி-யில் அவரைச்சுற்றி இருப்பவர்களெல்லாம் உலகின் நம்பர் 1, நம்பர் 4, நம்பர் 5 வீராங்கனைகள், ஆயினும் பயமில்லை இந்த இளங்கன்றுக்கு. குருப் ஏ, குரூப் பி சேர்த்து ஒட்டு மொத்த … Read more

ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம்-இன்று முதல் அமல்

ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கு இன்றிலிருந்து கூடுதல் கட்டணம், கடந்த ஜூன் மாதமே ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க RBI அனுமதி அளித்திருந்த நிலையில் இன்றிலிருந்து கூடுதல் கட்டணம் அதிகாரப்பூர்வமாக அமலாகிறது. ஏற்கனவே பணப்பரிவர்த்தனைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதித்து வரும் பொதுத்துறை வங்கிகள், தற்போது ஏடிஎம் பணப்பரிவர்த்தனைக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் இனி தங்களது வங்கியை தவிர்த்து வேறு வங்கிகளில் ஏடிஎம்-யை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்தால் ரூபாய் 17 அவர்களின் வங்கிகணக்கிலிருந்து பிடிக்கப்படும். … Read more

இன்று நண்பர்கள் தினம்…!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் இன்று (ஆகஸ்ட் 1) இந்தியாவில் நண்பர்கள் தினம். ஒரு குழந்தைக்கு அதன் அம்மாவின் பாசம் தெரியும், ஒரு இளைஞனுக்கு இன்னொரு இளைஞியின் காதல் தெரியும், வயது முதிர்ந்த ஒருவருக்கு தன் மனைவியின் அன்பு தெரியும். குழந்தை,இளைஞன்,வயது முதிர்ந்தவர்கள் என்று இந்த  மூவருக்கும் பொதுவாய் ஒன்று தெரியும் என்றால் அது நட்பாக தான் இருக்கும். இங்கு நட்பு மட்டுமே … Read more

காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி குரூப் ஏ பிரிவில் அயர்லாந்தை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தைப்பிடித்து இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஐந்து லீக் ஆட்டங்களை ஆடிய இந்திய மகளிர் ஹாக்கி அணி அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளிடம்  வென்று இரண்டு வெற்றிகளை மட்டுமே தன் வசம் வைத்திருந்தது. இதனால் நான்காவது இடத்திற்கு இந்தியாவிற்கும் அயர்லாந்து அணிக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் பிரிவு ஏ வின் கடைசி லீக் ஆட்டத்தில் … Read more

இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து காலவரையறையின்றி விலகியது ஏன்?

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மற்றும் ஆல்ரவுண்டராக அறியப்படும் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து காலவரையறையற்ற இடைவெளி எடுத்துக்கொள்ளப்போவதாக திடீரென்று அறிவித்துள்ளார். இங்கிலாந்து கடந்த உலககோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் இந்த பென் ஸ்டோக்ஸ். ஆல்ரவுண்டராக அறியப்படும் இவர் தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் நிலையில் திடீரென்று சர்வதேச போட்டிகளிலிருந்து காலவரையறை இன்றி விலகுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களுக்கும் இங்கிலாந்து அணிக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மிடில் ஆர்டரில் ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கிலும் அவ்வப்போது தனது … Read more

அரையிறுதியில் பி வி சிந்து தோல்வி – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதிப்போட்டியில் பி வி சிந்து, சீன தைபேவைச் சேர்ந்த தாய் சு யிங்கிடம் தோல்வியுற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதிபோட்டியில் இந்தியாவின் பி வி சிந்து, உலகின் முதல் நிலை வீராங்கனையான சீன தைபேயின் தாய் சு யிங்கை எதிர் கொண்டார். அதிரடியாக விளையாடிய தாய் சு யிங் 21-18, 21-12 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதற்கு முன்பு இருவரும் நேருக்கு … Read more

இனி காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு – டி.ஜி.பி சைலேந்திர பாபு

பணிச்சுமை, மன அழுத்தம் ஆதியவற்றை இலகுவாக்கவும், உடல் நலனை பேணிக்கொள்ளவும் காவலர்களுக்கு வாராந்திர ஓய்வை கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு. தொடர்ந்து குற்றவாளிகளோடும் மன அழுத்தங்களோடும் ஓய்வில்லாமல் போராடிக்கொண்டு குடும்பங்களைக்கூட கவனித்துக்கொள்ள முடியாமல் பணியின் பிடியிலேயே இருக்கும் காவலர்கள் இனி வாரம் ஒரு முறை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார் சைலேந்திர பாபு. பிறந்தநாள், திருமண நிகழ்வுகள் ஆகியவற்றிற்கும் விடுமுறை கேட்பின் கட்டாய விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு. இத்தோடு வாராந்திரவிடுப்பு எடுக்க … Read more