கடந்த 10 வருடத்தில் 20 மடங்கு உயர்ந்த அதானியின் சொத்து மதிப்பு!

Adani Assets Value Increases 10 Times In The Past 10 Years Idamporul

கடந்த 10 வருடத்தில் மட்டும் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 20 மடங்கு உயர்ந்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 41,890 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது அதே அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு 8,45,000 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கிட்டதட்ட கடந்த 10 வருடத்தில் மட்டும் அதானி குழுமத்தின் சொத்து 20 மடங்காக உயர்ந்து இருப்பதாக தகவல். அசுர வளர்ச்சி அடைந்து இருக்கும் … Read more

குடியுரிமை திருத்த சட்டம் என்பது என்ன? ஏன் அதைச் சுற்றி இவ்வளவு எதிர்ப்புகள்?

What Is CAA Why So Much Of Issues Around CAA Explanation In Tamil Idamporul

கடந்த 2019 அன்று இயற்றப்பட்டு கடும் எதிர்ப்புகளால் கிடப்பில் போட்டு வைக்கப் பட்டு இருந்த குடியுரிமை திருத்த சட்டம் 2019, திடீரென்று தற்போது இந்தியாவில் மீண்டும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. குடியுரிமைச் திருத்த சட்டம் 2019 என்பது என்ன? ஏன் அதைச் சுற்றி இவ்வளவு எதிர்ப்புகள் என்பது குறித்து இங்கு பார்க்கலாம். குடியுரிமைச் திருத்த சட்டம் 2019 கடந்த டிசம்பர் 2014-ற்கு முன்பிருந்து அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்த இஸ்லாமியர்கள் … Read more

புதுச்சேரி சிறுமி பாலியல் படுகொலை சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது!

TVK Vijay Condemns Puducherry Gang Rape Incident Idamporul

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருப்பது நெஞ்சை பதற வைக்கிறது என தமிழ வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமியை மிருகத்தனமாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, கொலை செய்த கொலையாளிகளுக்கு புதுச்சேரி அரசும் காவல்துறையும் அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கோரிக்கை விடுத்து இருக்கிறார். ” பெற்ற மகளை இழந்து … Read more

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஸ்பானிஷ் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அவலம்!

Spanish Girl Gang Rape What Really Happened Idamporul

இந்தியாவிற்கு கணவருடன் சுற்றுலா வந்த ஸ்பானிஷ் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவிற்கு கணவருடன் சுற்றுலா வந்த ஸ்பானிஷ் பெண் ஒருவர், ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில், 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கும் அவலம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அவரது கணவரையும் தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த பணத்தையும் பறித்து சென்று இருக்கின்றனர். இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் தும்கா காவல்துறை இதுவரை மூவரை … Read more

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மூன்று பேர் பலி!

Karanataka 3 Died Due To Monkey Fever Fact Here Idamporul

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு இதுவரை மூன்று பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கர்நாடகாவில் சிக்மளூர் என்ற மாவட்டத்தில் கொட்டம்மா என்ற பெண் உயிரிழந்ததை அடுத்து, கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்து இருக்கிறது. மேலும் ஆறு பேருக்கு குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ தொற்றின் பரவல் அதிகமாக இருப்பதால் கர்நாடகாவைச் சுற்றி இருக்கும் மாநிலங்கள் கர்நாடக எல்லைகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து அங்கிருந்து தங்கள் மாநிலங்களுக்கு … Read more

இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விபத்தில் உயிரிழப்பு!

Ex Intel Director Avatar Saini Died In Accident Idamporul

இண்டெல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அவதார் சைனி மும்பையில் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கிறார். இன்டெல் நிறுவனத்தின் தெற்கு ஆசிய டிவிஷனின் முன்னாள் தலைவர் மற்றும் மைக்ரோ பிராசசர் டிசைனர் ஆக அறியப்படும் அவதார் சைனி அவர்கள் மும்பையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது, அறியப்படாத வாகனம் ஒன்று மோதி உயிரிழந்து இருக்கிறார். “ அவதார் சைனி அவர்களின் மரணத்திற்கு பல தொழிலதிபர்கள் தங்களது இரங்கல்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் “

இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுகள்!

Hate Speech Increases Against Indian Minorities Fact Here Idamporul

இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வில் தகவல் கிடைத்து இருக்கிறது. இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் 75 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக ஒரு ஆய்வில் தகவல் கிடைத்து இருக்கிறது. கடந்த 2023-யில் மட்டும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் 668 பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் (118), உத்தர பிரதேசத்தில் (104) இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் பதிவாகி இருப்பதாக தகவல். “ சமத்துவம், மதச்சார்பின்மை எல்லாம் அரசிலமைப்பு புத்தகங்களில் … Read more

தேர்தல் பத்திரம் என்பது என்ன? அதன் மூலம் எந்தெந்த கட்சிகள் அதிக நிதி பெற்றன? அதை ஏன் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது?

Electoral Bond Means Which Party Getting More Fund By Electoral Bond Fact Here Idamporul

தேர்தல் பத்திரம் என்பது என்ன, அதை ஏன் உச்ச நீதிமன்றம் தடை செய்தது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். தேர்தல் பத்திரம் என்பது என்ன? தேர்தல் பத்திரம் என்பது கடந்த ஜனவரி 2018-யின் போது அரசால் அறிமுகப்படுத்தப் பட்ட ஒரு திட்டம். இத்திட்டத்தின் மூலம் தனிநபர் அல்லது கார்பரேட் நிறுவனங்கள் வங்கிகள் மூலம் தேர்தல் பத்திரத்தை பெற்றுக் கொண்டு தங்களுக்கு விருப்பப்பட்ட கட்சிகளுக்கு நிதியாக கொடுக்கலாம். இதில் கொடுப்பவர்களின் பெயரோ, வாங்குபவரின் பெயரோ வெளிப்படைத் தன்மையற்றது. ஏன் … Read more

பொதுவெளியில் முத்தம் இந்தியாவில் தண்டனைக்கு உரிய குற்றம்?

In India Kissing In Public Is Crime Fact Here Idamporul

காதலர்கள் பொதுவெளியில் முத்தம் கொடுத்துக் கொள்வது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. IPC 294 விதிகளின் படி பொதுவெளியில் காதலர்கள் முத்தம் கொடுத்து கொள்வது என்பது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றம் ஆக கருதப்படுகிறது. விதிகளை மீறுபவர்கள் பிடிபடும் பட்சத்தில் அவர்களுக்கு அதிகபட்சமாக 3 மாத சிறையும், அதிகபட்ச அபராதமும் கூட விதிக்கப்படலாம். “ இச்சட்டம் முத்தத்தில் ஈடுபடும் ஆண், பெண் என இருபாலருக்கும் பொருந்தும் எனவும், தண்டனைக்கு இருவருமே உட்படுத்தப்படுபவர் என்பதும் கூடுதல் தகவல் “

அரசுப் பணிகளுக்கான தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை?

10 Years Jail For Exam Mal Practice Idamporul

அரசுப்பணிகளுக்கான தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை என புதிய மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளுக்காக தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வில் முறைகேடு செய்து கண்டு பிடிக்கப்பட்டால், 1 கோடி அபராதமும், 10 ஆண்டு சிறையும் விதிக்கப்படும் வகையில் புதிய மசோதோ ஒன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, புதிய விதிமுறைகளை வகுக்க அரசு … Read more