கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 27,022 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 27,022 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் தொற்றுக்கு 277 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,47,225 ஆக உயர்ந்து இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் புதிய தொற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 85 கோடியைக் கடந்து இருக்கிறது. தொற்றினால் ஏற்படும் இறப்பும் இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ளது. … Read more