கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 39,521 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,521 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் 218 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,40,785-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 100 பேருக்கு தலா 50.84 பேர் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 43,917 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1562 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

தமிழகத்தைப் பொறுத்த வரை கடந்த 24 மணிநேரத்தில் 1562 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 20 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி தமிழகத்தில் 34,961-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 215 பேருக்கும் சென்னையில் 166 பேருக்கும் ஈரோட்டில் 132 பேருக்கும் புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 1684 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகள் … Read more

ட்ரென்டிங்கில் ‘டிக்கிலோனா’ படத்தின் இரண்டாவது டிரைலர்

சந்தானம், யோகி பாபு, மொட்ட ராஜேந்தர், முனிஸ்காந்த், ஆனந்த்ராஜ் என்று மிகப்பெரிய சிரிப்பு பட்டாளங்களே களம் இறங்கும் டிக்கிலோனா படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் நேற்று இணையத்தில் வெளியான நிலையில் இன்று ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. காமெடி கலந்த அறிவியல் பூர்வ படமாக ட்ரெயிலரை பார்க்கும் போது தெரிந்தாலும் படம் வெளி வந்தாலே அதைப்பற்றி முழுமையாக விவரிக்க முடியும். கார்த்திக் யோகி இயக்கியிருக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் கோபிநாதன்,வினு,வீர சங்கிலி என மூவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். முக்கியமாக படத்திற்கு … Read more

25 கோடி பார்வையாளர்களை கடந்திருக்கும் ’வாத்தி கம்மிங்’ பாடல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து கடந்த பொங்கலுக்கு வெளியாகி இருந்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்திருந்தது. இந்த நிலையில் தான் அந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலான வாத்தி கம்மிங் பாடல் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்தது. உலகம் முழுக்க ரீல்ஸ்களில் ட்ரென்ட் அடித்த வாத்தி கம்மிங் பெரிய பெரிய பிரபலங்களையும் ஈர்த்த நிலையில் தற்போது 25 கோடி பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கும் இந்த பாடல் வெளி … Read more

கேரளத்தில் ஆரம்பமாகிறது இரவு நேர பொதுமுடக்கம்!

நாட்டின் மொத்த தொற்றில் கேரளாவே 80 சதவிகிதத்தையும் உள்ளடக்கும் அளவுக்கு கொரோனோ தொற்று கேரளத்தில் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலையில் தான் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (30-08-2021) முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான இரவு நேர பொது முடக்கத்தை அறிவித்துள்ளார். மேலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான இந்த பொது முடக்க நேரத்தில் மக்கள் வெளி வருவதற்கு அனுமதி இல்லை என்றும் … Read more

வெறும் 6 ரூபாயில் 120 கி.மீ பயணம் – கலக்கும் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஹீரோ நிறுவனம் ஆப்டிமா HX என்னும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது. இரண்டு பேட்டரிகள் கொண்ட இந்த பைக்கிற்கு தினம் நீங்கள் 6 ரூபாய்க்கு சார்ஜ் செய்தால் போதும் 120 கிமீ வரை பயணிக்கலாம். பெட்ரோல் விலை எகிறியதற்கு பின் பலரும் ஒரு மாற்று பயணத்தை தேடிக்கொண்டிருக்கையில் ஹீரோ நிறுவனம் அதை தந்திருக்கிறது. இரு நூறு ரூபாய்க்கு பெட்ரோல் இட்டாலே இன்றைய சூழ்நிலையில் 60 கிமீ தூரம் தான் செல்ல முடியும் என்ற நிலையில் வெறும் 6 … Read more

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,551 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,551-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21-ஆக உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 34,856-ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 230 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்ததாக சென்னையில் 182, செங்கல்பட்டில் 122, ஈரோடு மாவட்டத்தில் 115 தொற்றுகள் பதிவாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் … Read more

இந்தியாவில் 63 கோடியை எட்டியிருக்கும் தடுப்பூசி உபயோகம்!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 65 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் இந்தியாவில் 63 கோடியைக் கடந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகள் மக்களைச் சேர்ந்து வந்தாலும் முதல் தவணையின் போது வருகின்ற சின்ன சின்ன பக்க விளைவுகளான காய்ச்சல்,உடல் அசதி போன்றவைகளுக்கு பயந்து பெரும்பாலானோர் இரண்டாவது தவணை எடுத்துக்கொள்ள மறுக்கின்றனர். சாதாரண சின்ன சின்ன விளைவுகளுக்கு பயந்தால் பெரும் விளைவுகளை எதிர்கொள்ள … Read more

ஒரே நாளில் ஒரு கோடி பேரை சென்றடைந்திருக்கும் தடுப்பூசி!

கொரோனோ பரவலுக்கு எதிராக உலக நாடுகள் கையில் எடுத்திருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி என்றிருக்கையில் இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 62 கோடியை கடந்துள்ளது. இ்ந்தியாவில் நேற்றைய ஒரு நாளில் மட்டும் ஒரு கோடி பேரைச் சென்றடைந்திருக்கிறது தடுப்பூசி. இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச அளவு இது ஆகும். கடந்த ஆகஸ்ட் 17 அன்று ஒரே நாளில் 88 லட்சம் பேரைத் தடுப்பூசி சென்றடைந்ததே இது வரை அதிகபட்ச அளவாக இருந்த நிலையில் நேற்று ஒரு கோடியைத் … Read more