இனி சட்டப்பேரவையில் புகழ்ச்சியாரம் பேசுபவர்களின் மீது நடவடிக்கை பாயும் – மு க ஸ்டாலின்

சட்டசபையில் ஒரு திட்டமோ அல்லது மசோதாக்களோ நிறைவேற்றுவதற்கு முன் நேரயத்தை விரயமாக்கி புகழ்ச்சியாரம் பேசினால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது கட்சியை சேர்ந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பொதுவாகவே எப்போதும் ஒரு ஆளும் தரப்பு சட்டசபைகளில் திட்டங்களை நிறைவேற்றிடும் போதும் அறிவித்திடும் போதும், திட்டம் சம்பந்தமான அறிவிப்புகள் பத்து நிமிடம் பேசப்பட்டால் ஒரு மணிநேரம் ஆவது தங்கள் தரப்பு தலைவர்/தலைவி குறித்த புகழ்ச்சியாரம் இருக்கும். இது விவாதிக்கும் மற்றும் அறிவிப்புகள் நேரத்தை … Read more

ஆப்கனில் உள்ள ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் கூடாரங்களை தாக்கிய அமெரிக்க ட்ரோன்கள்!

காபூல் விமான நிலையத்தில் ஐ எஸ் தீவிரவாத அமைப்புகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க கடற்படை வீரர்கள் உட்பட 100க்கு மேற்பட்டோர் பலியான நிலையில் அதற்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. ஆளில்லா ட்ரோன்கள் மூலம் ஆப்கனில் உள்ள ஐ எஸ் பயங்கரவாத அமைப்பின் கூடாரங்களின் மீது வான்வழி தாக்குதல்களை பொழிந்தது. அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. இது குறித்து … Read more

யார்க்கர் அரக்கன் லசித் மலிங்கா பிறந்த தினம் இன்று!

ஒரு ஓவரில், ஒரு யார்க்கர் என்பதே பவுலர்களுக்கு வரமாகிப்போகும். ஆனால் இவரோ நினைத்த நேரத்தில் எல்லாம் யார்க்கரை வீசி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்வார். சுருட்டை முடி, சிங்க வேகம், கையில் பந்தை வாங்கிக்கொண்டு முத்தமிட்டு ஓடி வந்து இவர் எறிகின்ற யார்க்கர்களில் ஸ்டம்புகள் சிதறும். ஆம் அவர் தான் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா. இன்று அவரின் பிறந்த தினம். இலங்கைக்கு சமிந்தா வாஸ் அவர்களின் ஓய்விக்கு பிறகு அவரின் வெற்றிடத்தை நிரப்ப ஒரு மிகப்பெரிய பவுலரின் … Read more

200 கோடி தடுப்பூசியை செலுத்தி புதிய சாதனை புரிந்திருக்கும் சீனா!

கொரோனோ முதன் முதல் கண்டறியப்பட்ட நாடான சீனாவில் கொரோனோ பரவலுக்கு எதிராக 200 கோடி தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனோ பரவலுக்கு எதிராக உலக நாடுகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அத்தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்ட தட்ட 140 கோடி இருக்கும் சீன மக்கள் தொகையினுள் 89 கோடி பேருக்கு இரண்டு தவணையாகவும் தடுப்பூசி செலுத்தியுள்ளது சீனா அரசு. அது மட்டுமில்லாது 200 கோடிக்கும் மேல் தடுப்பூசியை … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,805 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக கொரோனோ தொற்றிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 46,805-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 514-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,37,403-ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் தொற்று குணமாகி வெளியோனோரின் எண்ணிக்கை 31,341-ஆக உள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியைக் கடந்துள்ளது. தேசத்தில் 100 பேருக்கு தலா 45.34 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். தொடர்ந்து … Read more

பாராலிம்பிக்ஸ்: இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் பவினா படேல்

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் மகளிர் பிரிவில் காலிறுதியை வென்றதன் மூலம் அரையிறுதிக்குள் நுழைந்து இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் பவினா படேல். பாராலிம்பிக்ஸ் மகளிர் டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 ஆட்டத்தில் பிரேசிலின் ஒலிவேரியாவை எதிர்கொண்ட இந்திய வீரர் பவினா படேல் அதிரடியாக விளையாடி 3-0 என்ற கணக்கில் எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதற்கு பின் காலிறுதியிலும் அதிரடி காட்டிய பவினா உலகின் நம்பர் 2 வீராங்கனையான செர்பியாவின் போரிஸ்லவாவை 3-0 என்ற … Read more

மீண்டும் திரையில் ஹீரோவாக களமிறங்கும் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஹீரோவாக களம் இறங்கும் ‘அமீரா’ என்னும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டு வைரல் ஆகி வருகிறது. சினிமா துறையை பொறுத்தவரை இயக்குநர்,நடிகராக அறியப்படும் சீமான் பல வருடங்களாக கட்சி பளுவினால் சினிமாவை எட்டிப்பார்க்காத நிலையில், மீண்டும் பெரிய திரையில் ஹீரோவாக வருகிறார். சீமான், ஆர்.கே.சுரேஷ் மற்றும் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா இணைந்து நடிக்க இருக்கும் அமீரா என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை இரா.சுப்பிரமணியன் … Read more

உலகிலேயே அதிக சிசிடிவி கேமராக்கள் கொண்ட நகரங்களுள் சென்னைக்கு மூன்றாம் இடம்!

போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி உலகிலேயே அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருக்கும் நகரங்களுள் தமிழகத்தின் சென்னை மாநகரம் மூன்றாம் இடத்தைப்பிடித்துள்ளது. போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகிலேயே அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருக்கும் நகரங்களுள், குறைந்த பட்சம் 2.5 சதுர கிலோ மீட்டருக்குள் 1826 சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருக்கும் டெல்லி முதலிடத்தையும், 1138 சிசிடிவி கேமராக்களுடன் லண்டன் இரண்டாம் இடத்திலும், 609.9 கேமராக்களுடன் சென்னை மூன்றாம் இடத்திலும் உள்ளன. மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி … Read more

இந்தியாவில் 61 கோடியை எட்டியிருக்கிறது தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விடுத்த அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 80 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதன் மூலம் 61 கோடி பேரை எட்டியிருக்கிறது இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை. மேலும் வயது வந்தோர்களில் குறைந்தபட்சம் ஒருதவணையாவது தடுப்பூசி செலுத்தியவர்களின் விகிதத்தில் 50 சதவிகிதத்தை எட்டி சாதனை புரிந்திருக்கிறது இந்தியா. இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களுக்கு இந்த விழிப்புணர்வு தொடர்ந்து சேர வேண்டும் என்றும் … Read more

காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்: 72 பேர் பலி,140-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆப்கானிஸ்தானின் தலைநகராக அறியப்படும் காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களில், அமெரிக்க கப்பற்படை வீரர்கள் 12 பேர் உட்பட 72 பேர் பலியாகி உள்ளதாக ஊடகங்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றன. அது மட்டுமில்லாது 140-க்கும் மேற்பட்டோர் இந்த குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பலி எண்ணிக்கை மேலும் உயரவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளன. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து தொடர்ந்து அங்கு இருக்க விருப்பமில்லாத மக்களும் அங்குள்ள அமெரிக்கர்களும் காபூல் விமான நிலையம் … Read more