கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதியதாக 44,558 பேருக்கு கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 44,558 பேர் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 493-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,36,889-ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றினால் குணமாகி வெளியானோரின் எண்ணிக்கை 32,926-ஆக உள்ளது. இந்தியாவில் ஒட்டு மொத்தமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 59.79 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் முதல் தவணையை எடுத்துக்கொண்டவர்கள் 46.33 … Read more

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘2டி என்டர்டெயிண்ட்மென்ட்’ பெயரில் மோசடி!

பசங்க 2, 24, சூரரைப்போற்று உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ’2டி என்டர்டெயிண்ட்மென்ட்’ பெயரில் ஒரு சிலர் மோசடி செய்து வருவதாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது. 2டி என்டர்டெயிண்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் லாகோ உள்ளிட்டவைகளை பயன்படுத்தி, நடிகர்கள் மற்றும் நடிகையர்கள் தேர்வு நடத்தி பணம் பறித்துக்கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் படி இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் எங்கள் … Read more

டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகும் அனபெல் சேதுபதி!

விஜய் சேதுபதி, டாப்சி, இயக்குநர் தீபக் சுந்தர் ராஜன் இணையும் அனபெல் சேதுபதி படத்தை தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரித்திருக்கிறார்கள். பட வேலைகள் முழுமையாக முடிந்த நிலையில் படத்தின் வெளியீடு உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வாங்கியிருக்கிறது. காமெடி கலந்த பேய் படமாக அறியப்படும் அனபெல் சேதுபதி செப்டம்பர் 17 அன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. திரையரங்குகள் திறந்திருக்கும் நிலையிலும் கூட பெரும்பாலான படங்கள் … Read more

ஒரு வயது குழந்தைக்கு நுரையீரல் மாற்று அறுவைச்சிகிச்சை புரிந்து உலகச்சாதனை படைத்த மருத்துவர்கள்!

சென்னையில் ஒரு வயது மட்டுமே நிரம்பிய குழந்தை ஒன்றுக்கு பிறப்பிலேயே நுரையீரல் குறைபாடு இருந்தது அறியப்பட்டது. தற்போது அக்குழந்தைக்கு நுரையீரல் மாற்று அறுவைச்சிகிச்சை மூலம் இரண்டு நுரையீரலையும் மாற்றி உலகச் சாதனை படைத்து இருக்கின்றனர் சென்னை மருத்துவக்குழுவினர். சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் ஒரு வயது குழந்தை ஒன்று பிறவியிலேயே ஆக்சிஜன் செறிவுத்திறன் குறைபாட்டுடன் அனுமதிக்கப்பட்டிருந்தது. பரிசோதித்ததில் இரண்டு நுரையீரல்களும் மாற்றினால் மட்டுமே குழந்தை பிழைக்க இயலும் என்ற நிலை இருந்ததாக கூறப்படுகிறது. பெரியவர்களுக்கே மாற்று அறுவைச்சிகிச்சைக்கு உடல் … Read more

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது மண்டல வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 30-களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்று சிவப்பு கம்பள எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம். சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 30 தேதிகளில் பரவலாக அதீத மழை பெய்யக்கூடும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திக்கொள்ளவும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஒரு சில ரெட் அலர்ட் மாவட்டங்களை … Read more

தொடர்ந்து சொதப்பும் கோலி,78 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி!

லீட்ஸ் மைதானம், இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பேட்டிங்குக்கு சாதகமான களம், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. பால் பழையதாக பழையதாக பேட்டிங்குக்கு சாதகமாகும் என்ற நிலையில் பொறுமையா ஆடாமல் முதல் 11 ஓவர்களுக்குள்ளேயே ராகுல்,புஜாரா மற்றும் கோலி உட்பட மூன்று நட்சத்திர வீரர்களும் தங்கள் விக்கெட்டுக்களை ஆண்டர்சனின் ஆக்ரோசத்திடம் பறி கொடுத்தனர். ரோஹிட் (19), ரஹானே (18) தவிர மீதமுள்ள அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 46,397 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,397 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 608 பேர் ஒரே நாளில் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,36,396-ஆக உயர்ந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் 59 கோடியை கடந்துள்ளது உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் 100 பேருக்கு 44.17 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். உலகளாவிய அளவில் ஒரு நாளில் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,32,695-ஆக உள்ளது. கடந்த … Read more

கேரளத்தில் ஒரே நாளில் 31,445 பேருக்கு கொரோனோ தொற்று

கேரளத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த கொரோனோ தொற்று இன்று புதிய உயரத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 30,000-க்கும் அதிகமான பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் இன்று ஒரே நாளில் 31,445 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 215 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி கேரளாவில் 19,972-ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்படும் விகிதமும் 19.03 … Read more

கே.டி.ராகவனின் சர்ச்சை வீடியோவை வெளியிட்ட மதன் பாஜகவிலிருந்து நீக்கம்

தமிழக பாஜக பொதுச்செயலாளராக பதவி வகித்த கே.டி.ராகவன் குறித்த ஒரு சர்ச்சையான வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து நேற்று கே.டி.ராகவன் தனது பொறுப்பை ராஜினாமா செய்த நிலையில் அந்த வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக, அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிக்கை விடுத்துள்ளார். கே.டி.ராகவன் குறித்த பாலியல் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று இரு தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் அவர்களால் … Read more