ஹேஸ்டாக் போரில் மாஸ்டரை வலிமையாக முந்திய ’வலிமை’

கடந்த ஜூன் மாதம் வரை ட்விட்டரில் இந்திய அளவில் அதிகமாக பகிரப்பட்ட ஹேஸ்டாக்குகளில் வலிமை முதலிடத்தை பிடித்துள்ளதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு காலத்தில் தெருக்களத்தில் நின்று தன் ஹீரோவின் பேனர், போஸ்டர்களை ஒட்டுவதற்கு இடத்தை பிடிப்பதற்காக இரு வேறு ஹீரோக்களின் ரசிகர்கள் சண்டையிட்டு வந்தனர். அது கைக்கலப்பில் கூட கொண்டு போய் முடியும். ஆனால் இன்றெல்லாம் அந்த ரசிக சண்டைகள் டிஜிட்டல் சண்டைகளாக மாறி உள்ளன. லைக்குகள்,சேர்கள்,ட்ரென்டிங்குகள்,வசூல்கள் என்று இதை வைத்து தான் இன்று ரசிகர்கள் … Read more

தலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் பஞ்சஷேர் மாகாணம்!

அமெரிக்க படைகள் வெளியேறிய ஏழு நாட்களுக்குள் தலிபான்கள் வரிந்து கட்டி அனைத்து மாகாணத்தையும் கைப்பற்றிய போதும் ஒரு மாகாணம் மட்டும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறது. அது தான் பஞ்சஷேர் மாகாணம். ஆப்கானிஸ்தானின் அனைத்து மாகாணங்களும் தலிபான்களுக்கு அடிபணிந்து விட்ட நிலையில் பஞ்சஷேர் எனப்படும் ஒரு மாகாணம் மட்டும் தலிபான்களை சிங்கம் போல எதிர்த்து நிற்கிறது. தன் பேரிலேயே ஐந்து சிங்கங்களைக் கொண்டிருக்கும் பஞ்சஷேர் மாகாணம் இதுவரை எந்த போருக்கும் அடிபணிந்தது இல்லை. 70,80 களில் சோவியத் … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய 58 பேருக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை சம்மன் அனுப்பி உள்ளது. ஸ்டெர்லைட் எனப்படும் தாமிர உருக்காலை தொடர்ந்து சுற்று சூழலுக்கும் அந்த பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் உடல் நிலைக்கும் கேடு விளைவித்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து ஆலையை மூட சொல்லி பல்வேறு தரப்பினர் மனுக்கள் மூலம் பலரிடம் கோரிக்கை விடுத்த போதும் எந்த வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் தான் மே ,2018-இல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான … Read more

இந்தியாவில் வெகுவாக குறைந்து வரும் கொரோனோ தொற்று – இந்திய மருத்துவ கவுன்சில்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,735 பேருக்கு புதியதாக தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 385 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 4,34,784-ஆக உயர்ந்துள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு முப்பதாயிரத்திற்கும் கீழ் குறைந்திருக்கிறது இந்தியாவில் கொரோனோ தொற்று. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 57.62 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 100 பேருக்கு 43.24 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தொற்று … Read more

விசாகப்பட்டினத்தில் நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் திட்டம் தொடக்கம்

ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் 25 மெகாவாட் திறன் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் திட்டத்தை தொடங்கியுள்ளது தேசிய அனல்மின் கழகம். தொடர்ந்து புதுப்பிக்க கூடிய ஆற்றல்களை பயன்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்திவரும் நிலையில் 25 மெகாவாட் திறன் கொண்ட நாட்டிலேயே மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் திட்டத்தை ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தில் மாநில அரசின் உதவியுடன் சிம்ஹாத்ரி அனல்மின் நிலைய நீர் தேக்கத்தில் தேசிய அனல்மின் கழகம் துவங்கியுள்ளது. 75 ஏக்கர் … Read more

20 பேருக்கும் மேலானவர்களை காவு வாங்கிய ஆப்கானிஸ்தான் விமான நிலையம்

அமெரிக்க படைகள் வெளியேறிய ஒரு வாரத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதும் கைப்பற்றி விட்டனர். அதிபர் அஸ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் மக்களும் தொடர்ந்து ஆப்கனை விட்டு வெளியேறும் நோக்கோடு விமான நிலையத்திலேயே தங்கி போராடி வருகின்றனர். உயிரை கையில் பிடித்துக்கொண்டு எப்படியாவது நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என்ற நோக்கோடு விமான நிலையத்தின் நெரிசல்களிலும், பாதுகாப்பின்றி விமானத்தின் இறக்கைகளிலும் இதர பாகங்களிலும் அமர்ந்து கொண்டு பாதுகாப்பின்றி பயணம் செய்தவர்கள் என்று 20-க்கும் மேற்பட்டவர்களை காவு … Read more

வருகிறது இந்தியாவின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி சைக்கோவ்-டி

ஏற்கனவே கோவாக்சின்,கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி வகைகளுக்கு அனுமதி அளித்திருந்த மத்திய அரசு தற்போது டி.என்.ஏ தடுப்பூசியான சைக்கோவ்-டி என்ற தடுப்பூசிக்கும் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது டெல்டா வகை கொரோனோ வைரஸ்க்கு எதிராக 66 சதவிகிதம் போராடக்கூடியது என்று அந்த தடுப்பூசியை உருவாக்கிய கெடிலா நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்து வருகிறார்கள். பெரும்பாலான தடுப்பூசிகள் இரண்டு தவணையாக மட்டுமே செலுத்தப்பட்டு வரும் நிலையில் சைக்கோவ்-டி மூன்று தவணையாக செலுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறி வருகின்றனர். இந்தியாவிலேயே … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,043 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று, 401 பேர் தொற்றுக்கு பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,043 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 401 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த இறப்பு 4,34,399-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஒரு பக்கம் குறைந்து வரும் கொரோனோ தொற்று, ஒரு பக்கம் உயர்ந்து வரும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை என்று நேர்மறையாக திரும்பி இருக்கிறது இந்தியாவில் கொரோனோவின் நிலை. இதுவரை இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் … Read more

வெளியானது விக்ரம் நடிக்கும் மகான் படத்தின் முன்னோட்டம்

தயாரிப்பாளர் லலித் குமார் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் – விக்ரம் – துருவ் விக்ரம் – சிம்ரன் – சிம்ஹா என்ற பெரிய கூட்டணி இணையும் மகான் திரைப்படத்தின் முன்னோட்டம் சத்தமில்லாமல் வெளியாகி இணையங்களில் பெரிய சத்தமிட்டு வைரலாகி கொண்டிருக்கிறது. சந்தோஷ் நாராயணின் அசத்தலான பறை இசையில் தொடங்கும் முன்னோட்டம், தசரா குழுவில் வேஷமிடும் ஒரு குழுவை காண்பித்து, அதற்கு பின்னர் வரும் சீனில் விக்ரம் தனது பைக்கில் … Read more

இந்திய தண்டனை சட்டம் IPC – SECTION 100 பாலியல் விதி மீறல்களை பற்றி என்ன சொல்கிறது?

ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் இந்தியாவில் ஒரு பாலியல் விதிமீறல்கள் பற்றிய புகார்கள் பதிவாகிறது. இதில் பதிவான புகார்கள் மட்டுமே அடங்கும் எனில் பதிவில்லாத புகார்கள் என்பது எத்தனையோ இருக்கும். பயத்தில் புகார்கள் கொடுக்காமல் மறைத்தவர்கள் எத்தனை பேராக இருக்கும் என்பது கணக்கில் இல்லாதது. சிறுமிகள், முதியவர்கள் என்று வயது வித்தியாசம் பாராமல் இன்றைய காலங்களில் அரங்கேறும் பாலியல் அத்துமீறல்களுக்கு இந்திய சட்டத்தில் எப்போதாவது தான் உயர்ந்த தண்டனை எனப்படும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஒரு பாலினத்தின் மேல் … Read more