ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு!

Santhan Freed In Rajiv Gandhi Case Died In Hospital Idamporul

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் உயிரிழந்து இருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் (55) உடல் நலக்குறைவால் உயிரிழந்து இருக்கிறார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார். “ தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய வாழ்க்கை வாழத் துணிந்த சாந்தனை மரணம் கைப்பற்றிக் கொண்டு இருக்கிறது “

இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுகள்!

Hate Speech Increases Against Indian Minorities Fact Here Idamporul

இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வில் தகவல் கிடைத்து இருக்கிறது. இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் 75 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக ஒரு ஆய்வில் தகவல் கிடைத்து இருக்கிறது. கடந்த 2023-யில் மட்டும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் 668 பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் (118), உத்தர பிரதேசத்தில் (104) இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் பதிவாகி இருப்பதாக தகவல். “ சமத்துவம், மதச்சார்பின்மை எல்லாம் அரசிலமைப்பு புத்தகங்களில் … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தர வரிசையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது இந்தியா!

India Remains Second In World Test Championship Standings 27 02 24 Idamporul

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பின்பு இந்தியா, தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்சிப் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன் வரிசையில் 64.58 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. 75 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. “ ஆஸ்திரேலியா 55 புள்ளிகளுடன் … Read more

துருவ் ஜுரேல் தான் அடுத்த தோனி – சுனில் கவாஸ்கர்

Dhruv Jurel Is Capable Of Being Next MS Dhoni Says Gavaskar Idamporul

கிரிக்கெட்டர் துருவ் ஜுரேல் அடுத்த மகேந்திர சிங் தோனியாக நிச்சயம் உருப்பெருவார் என சுனில் கவாஸ்கர் கூறி இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் துருவ் ஜூரேல் அவர்களை சீனியர் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், துருவ் ஜுரேல் அவர்களுக்கு அடுத்த தோனியாகும் அத்துனை வாய்ப்பும் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி இருக்கிறார். “ அடுத்த தோனி, அடுத்த சச்சின், அடுத்த கங்குலி … Read more

புதுச்சேரியை அடுத்து தமிழகத்திலும் கலர் பஞ்சு மிட்டாய்க்கு தடை!

After Pudhuchery Tamilnadu Ban Color Panju Mittai Fact Here Idamporul

புதுச்சேரியை அடுத்து தமிழகத்திலும் கலர் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்து உத்தரவு இட்டு இருக்கிறது தமிழக உணவு பாதுகாப்புதுறை. சென்னை மெரினாவில் பறிமுதல் செய்யப்பட்ட கலர் பஞ்சு மிட்டாய்களிலும் புற்றுநோயை உண்டாக்க கூடிய Rhodaminbe – B நிறமி இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்திலும் கலர் பஞ்சு மிட்டாய் தயாரிப்பிற்கும், விற்பனைக்கும் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது தமிழக உணவு பாதுகாப்பு துறை. “ குழந்தைகள் அதிகம் உண்ணும் கலர் பஞ்சு மிட்டாயில் புற்று நோயை … Read more

கழகத்தின் பெயரில் மாற்றம் செய்கிறாரா, கழகத்தின் தலைவர் விஜய்?

Actor Vijay Changed His Political Party Name Fact Here Idamporul

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கழகத்தின் பெயரில் சிறு மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் இலக்கண பிழை இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் கூறி வந்த நிலையில், அதை ஏற்றுக் கொண்டு ‘தமிழக வெற்றி கழகம்’ என்பதை, ’தமிழக வெற்றிக் கழகம்’ என கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் மாற்ற முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ தவறுகளை சொன்னால் அதை ஏற்றுக் கொண்டு திருத்த … Read more

வாய்ப்பு கிடைக்கவில்லையெனில் மீண்டும் ரயிலில் துணி விற்க போய் இருப்பேன் – சர்ப்ராஸ் கான்

If Chances Are Not Given I am Planning To Sell Clothes In Trains Says Sarfraz Idamporul

வாய்ப்பு மட்டும் கிடைத்திருக்காவிடில் மீண்டும் ரயிலி துணி விற்க போய் இருப்பேன் என சர்ப்ராஸ் கான் உருக்கமாக கூறி இருக்கிறார். பல கடினமான சூழலுக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் கிரிக்கெட்டர் சர்ப்ராஸ் கான், ’சரியான வாய்ப்பு கிடைக்காவிடில் மீண்டும் ரயிலில் துணி விற்க போகலாம் அப்பா’ என அடிக்கடி அவரின் குடும்பத்திடம் சொல்லிக் கொண்டே இருப்பாராம். “ திறமை இங்கு அனைவருக்கும் இருக்கிறது, அதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு … Read more

நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள், TNPSC யின் செயல்முறைகளை பாதிக்குமா?

Will TNPSC Exam Disrupted By Parliament Elections Fact Here Idamporul

தேர்வர்கள் பலரும், நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள் TNPSC யின் செயல்முறைகளை பாதிக்குமா என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில், TNPSC தரப்பு அதற்கு பதில் அளித்து இருக்கிறது. TNPSC ஒரு தனித்துவ அமைப்பு, நாடாளுமன்ற தேர்தல் விதிமுறைகள், TNPSC யின் செயல்முறைகளுக்கோ, தேர்வாணையம் நடத்துகிற தேர்வுகளுக்கோ எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது, தேர்வுகளும், தேர்வுகளை சார்ந்த பணிகளும் அதுபாட்டிற்கு நடக்கும் என TNPSC உறுப்பினர் ஆரோக்யராஜ் கூறி இருக்கிறார். “ தேர்வர்கள் தேர்தல், தங்களுடைய முய்றசிகளுக்கு பாதிப்பை … Read more

தேர்தல் பத்திரம் என்பது என்ன? அதன் மூலம் எந்தெந்த கட்சிகள் அதிக நிதி பெற்றன? அதை ஏன் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது?

Electoral Bond Means Which Party Getting More Fund By Electoral Bond Fact Here Idamporul

தேர்தல் பத்திரம் என்பது என்ன, அதை ஏன் உச்ச நீதிமன்றம் தடை செய்தது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். தேர்தல் பத்திரம் என்பது என்ன? தேர்தல் பத்திரம் என்பது கடந்த ஜனவரி 2018-யின் போது அரசால் அறிமுகப்படுத்தப் பட்ட ஒரு திட்டம். இத்திட்டத்தின் மூலம் தனிநபர் அல்லது கார்பரேட் நிறுவனங்கள் வங்கிகள் மூலம் தேர்தல் பத்திரத்தை பெற்றுக் கொண்டு தங்களுக்கு விருப்பப்பட்ட கட்சிகளுக்கு நிதியாக கொடுக்கலாம். இதில் கொடுப்பவர்களின் பெயரோ, வாங்குபவரின் பெயரோ வெளிப்படைத் தன்மையற்றது. ஏன் … Read more

பொதுவெளியில் முத்தம் இந்தியாவில் தண்டனைக்கு உரிய குற்றம்?

In India Kissing In Public Is Crime Fact Here Idamporul

காதலர்கள் பொதுவெளியில் முத்தம் கொடுத்துக் கொள்வது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. IPC 294 விதிகளின் படி பொதுவெளியில் காதலர்கள் முத்தம் கொடுத்து கொள்வது என்பது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றம் ஆக கருதப்படுகிறது. விதிகளை மீறுபவர்கள் பிடிபடும் பட்சத்தில் அவர்களுக்கு அதிகபட்சமாக 3 மாத சிறையும், அதிகபட்ச அபராதமும் கூட விதிக்கப்படலாம். “ இச்சட்டம் முத்தத்தில் ஈடுபடும் ஆண், பெண் என இருபாலருக்கும் பொருந்தும் எனவும், தண்டனைக்கு இருவருமே உட்படுத்தப்படுபவர் என்பதும் கூடுதல் தகவல் “