ICC TEST Ranking | ’ஆல்ரவுண்டர் பிரிவில் முதல் இடத்தை பிடித்தார் சர் ரவீந்திர ஜடேஜா’

Ravindra Jadeja Becomes No 1 Is All Rounder Test Ratings

ஐசிசி நேற்று வெளியிட்ட டெஸ்ட் ரேங்கிங்கில், ஆல் ரவுண்டர் பிரிவில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் சர் ரவீந்திர ஜடேஜா. காயத்தின் காரணமாக நீண்ட நாட்களாக ஜடேஜாவை சர்வதேச போட்டிகளில் காண முடியாமல் இருந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான அணியில் இடம் பிடித்து இருந்த ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியில் 175 ரன்கள், ஐந்து விக்கெட்டுக்கள் என்று தனது ஆல்ரவுண்டர் திறமையை காட்டியதன் விளைவு இன்று ஐசிசி தர வரிசையில் ஆல்ரவுண்டர் பிரிவில் நம்பர் 1 … Read more

தற்போது வரை தேசத்தில் 179.34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

Vaccination In India Reached Near To 180 Crores

ஒட்டு மொத்த தேசத்திலும் தற்போது வரை 179.34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் இன்று ஒரு மணி நிலவரப்படி 9.43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 179.34 கோடியாக உயர்ந்து இருக்கிறது. தட்டுப்பாடுகளே இல்லாமல் தேசமெங்கும் தடுப்பூசி செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. “ ஆரம்ப காலக்கட்டத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பயந்தாலும், தற்போது எல்லாம் நார்மலாகி விட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை … Read more

ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள், உக்ரைன் அதிபர் ஆவேசம்!

Ukraine Hospitals Attacked By Russian Army

ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள் என்று உக்ரைன் அதிபர் காணொலியில் ஆவேசமாக பேசி தீர்த்து இருக்கிறார். இதுவரை 15-ற்கும் மேற்பட்ட மருத்துவமனைகளையும், ஏராளமான மக்களின் குடியிருப்புகளையும் தன் குண்டுகளால் ரஷ்யா தகர்த்து இருக்கிறது. இதை கண்டித்து உலக நாடுகளிடம் காணொலி வாயிலாக பேசிய உக்ரைன் அதிபர், ரஷ்யாவை தீவிரவாத நாடாக அறிவியுங்கள் என்று ஆவேச முழக்கம் இட்டு இருக்கிறார். ” ஈவு, இரக்கம் பார்க்காமல் தொடர்ந்து மக்களை கொன்று குவித்து வரும் ரஷ்யாவிற்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட … Read more

முகநூல் காதலிக்காக உயிரை மாய்த்துக் கொண்ட விழுப்புரம் இளைஞர்!

Facebook Love Villupuram Boy Commit Sucide

பேஸ்புக் காதலி இதய நோயால் உயிரிழந்ததை அறிந்த முகநூல் காதலன் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்ட சோகம். விழுப்புரம், ரிஷிவந்தயம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் முகநூலில் முகம்பார்க்காமல் ஒரு பெண்ணை காதலித்து வந்து இருக்கிறார். இந்த நிலையில் அந்த பெண் இதயநோயால் இறந்து விடவே, மனமுடைந்து போன மணிகண்டன் (26) விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டு இருக்கிறார். “ முகம் பார்க்காமல் காதல் செய்து வந்த ஒரு காதலிக்காக, ஒரு இளைஞர் உயிரை மாய்த்து … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 4,575 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 09 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 4,575 பேருக்கு புதியதாக கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 4,575 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 145 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,15,355 ஆக உயர்ந்து இருக்கிறது. ” நேற்று ஒரே நாளில் 7,416 பேர் தொற்றில் … Read more

உக்ரைன்-ரஷ்யா போரினால் உலகச் சந்தையில் உயர்ந்த கோதுமையின் விலை!

The Price Of Wheat That Rose On The World Market Due To The Ukraine Russia War

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரினால் உலக சந்தையில் கோதுமையின் விலை உயர்ந்து இருக்கிறது. உலகளாவிய அளவில் 25% கோதுமை, ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்தே ஏற்றுமதி ஆகிறது. ரஷ்யா – உக்ரைன் போரால் இந்த ஏற்றுமதி விகிதம் குறைந்து உலகளாவிய அளவில் கோதுமை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் மூலம் உலக சந்தையில் கோதுமையின் விலை டன்னுக்கு 25,000 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. “ இந்த ஏற்றுமதி தட்டுப்பாட்டை இந்தியாவால் நிறைவு செய்ய முடிந்தால், உலக … Read more

மக்களை நகர அனுமதித்து விட்டு மக்களின் மேலேயே தாக்குதலையும் நடத்தும் ரஷ்ய ராணுவம்!

Russian Army Attacking Innocent People In UKraine

மக்களை பாதுகாப்பாக நகர அனுமதித்தும் விட்டு, அவர்களை நகர விடாமல் அவர்கள் மீது தாக்குதலையும் நடத்துவதாக ரஷ்ய ராணுவத்தின் மீது உக்ரைன் அதிபர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். போர் என்றால் படையும், படைத்தளபதிகளும் அதிகமாக பாதிக்கப்படுவதைக் காட்டிலும் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவர். அந்த வகையில் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரிலும் அதுவே நிகழ்ந்து வருகிறது. ஒரு பக்கம் ரஷ்யா மக்களை பாதுகாப்பான இடத்திற்கு நகர அனுமதித்து விட்டு அவர்கள் மீது தாக்குதலும் நிகழ்த்தி வருகிறது. “ உலகளாவிய அளவில் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 3,993 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 08 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3,993 புதிய தொற்றுகல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 3,993 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா தொற்றுக்கு 108 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,15,210 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஒட்டு மொத்த தேசத்தின் … Read more

’அவள் பெண்’ என்ற குறுகிய வட்டத்தை உடைத்து எறிந்த அத்தனை மகளிருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்!

International Womens Day 2022

இந்த உலகில் பல்வேறு தடைகளையும் கடந்து சாதித்து வரும் மகளிரை போற்றும் வகையில் இன்று சர்வதேச மகளிர் தினம் – மார்ச் 8 கொண்டாடப்படுகிறது. ’அவள் பெண்’ அவளால் முடியாது. ‘அவள் பெண்’ அவளால் செய்ய இயலாது. ‘அவள் பெண்’ அவளால் வர இயலாது என்று காலம் காலமாய் இருக்கும் பாலின பாகுபாடுகளை உடைத்து எறிந்து ஒவ்வொரு துறைகளிலும் சாதித்து உயர்ந்து நிற்கும் ஒவ்வொரு மகளிருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள். “ எங்கு பார்த்தாலும் பெண் … Read more

ICC WWC 2022 | 5th Match | ’பங்களாதேஷ்சை அதிரடியாக வென்றது நியூசிலாந்து மகளிர் அணி ‘

ICC WWC 2022 5th Match BAN v NZ Newzealand Registered First Victory

ஐசிசி மகளிர் உலககோப்பை 2022-யின் ஐந்தாவது போட்டியில் பங்களாதேஷ்சை வென்று புள்ளிக்கணக்கை துவங்கி இருக்கிறது நியூசிலாந்து மகளிர் அணி. ஐசிசி மகளிர் உலககோப்பை போட்டியின் ஐந்தாவது ஆட்டத்தில், முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி மழை காரணமாக குறைக்கப்பட்ட 27 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 20 ஓவர்களிலேயே இலக்கை அடைந்தது. “ 68 பந்துகளில் 79 ரன்கள் குவித்த … Read more