ஆஸ்திரேலியன் ஓபன் | ’3-2 என்ற செட் கணக்கில் மெட்வதேவை வென்றார் ரபேல் நடால்’

Australian Open 2022 Rafael Nadal Beat Medvedev

ஆஸ்திரேலியன் ஓபனின் இறுதிப் போட்டியில் டேனில் மெட்வதேவை வென்றார் ரபேல் நடால். முதல் இரண்டு செட்களை டேனில் மெட்வதேவ் கைப்பற்றிய போதும், அதற்கு அடுத்து சுதாரித்து ஆடிய ரபேல் நடால் இறுதியில் 3-2 என்ற கணக்கில் மெட்வதேவை தோற்கடித்து தனது இரண்டாவது ஆஸ்திரேலியன் ஓபனை கைப்பற்றினார். கிட்ட தட்ட 5 மணி நேரம் 24 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது இந்த போட்டி. “ ஒரு கட்டத்தில் மெட்வதேவ் வெல்வார் என்றே அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்த அந்த … Read more

தேசத்தில் தடுப்பூசிக்கு தகுதியான 75% பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்!

75 Percentage Of Adult In India Fully Vaccinated

தேசத்தில் தடுப்பூசிக்கு தகுதியான 75% பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் 165.91 கோடி பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். மிகக்குறைந்த கால அளவில் தேசத்தில் தடுப்பூசிக்கு தகுதியான 75 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் தடுப்பூசி செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மோடி பெருமிதம். “ உலகளாவிய தடுப்பூசி செயல்பாடுகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாக உலக சுகாதாரத் துறையும் … Read more

அரசு பள்ளிக்கு நிதியாக ரூபாய் 1 லட்சம் கொடுத்த இளநீர் விற்பனையாளர் தாயம்மாளுக்கு மோடி பாராட்டு!

Tamilnadu Thayammal Get Greetings From Modi In Man Ki Bhaat

பிரதமர் மோடி அவரது மன்கீ பாத் உரையாடலில், அரசு பள்ளிக்கு நிதியாய் ரூபாய் 1 லட்சம் கொடுத்த இளநீர் விற்பனையாளர் தாயம்மாள் அவர்களை பாராட்டி பேசி இருக்கிறார். உடுமலையைச் சேர்ந்த இளநீர் விற்பனையாளர் தாயம்மாள் அவர்கள் தான் சிறுக சிறுக சேமித்த ரூபாய் 1 லட்சத்தை, அரசு பள்ளிக்கு நிதியாய் கொடுத்து இருந்தார். கல்விக்காக அவர் செய்த அந்த உன்னதத்தை , பிரதமர் மோடி அவர்கள் அவரது மன்கீ பாத் உரையாடலில் கூறி பெருமிதம் கொண்டார். “ … Read more

U19 WC 2022 | QF 2 | ‘பங்களாதேஷ்சை வென்று அரை இறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி’

U19 World Cup 2022 QF2 India Win Against Bangladesh

19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது காலிறுதியில் பங்களாதேஷ்சை வென்று அரை இறுதிக்குள் நுழைந்து இருக்கிறது இந்தியா. முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 37.1 ஓவர்களில் 111 ரன்களுக்குள் ஆட்டம் இழந்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணி 30.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து இலக்கை எளிதாக அடைந்து அரையிறுதிக்கு முன்னேறியது. “ அரையிறுதியில் வலுவான அணியான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி. இது … Read more

தேசத்தில் 165 கோடியைக் கடந்து இருக்கிறது தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached 165 Crores

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 165 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கொரோனாவிற்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு, பூஸ்டர் தடுப்பூசிகள் என்று அரசு தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது வரை 165 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி உபயோகிக்கப்பட்டு இருக்கிறது. 93.91 கோடி பேர் முதல் தவணையும், 70.21 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் எடுத்து இருக்கின்றனர். “ தற்போது வரை அரசு சார்பில் 58,080 தடுப்பூசி … Read more

காஷ்மீரில் தினசரி கொரோனா பாதிப்பு 4000-த்தை தொட்ட நிலையில் 64 மணி நேர முழு ஊரடங்கு அமல்!

Due To Increase Of Covid 64 hours LockDown Proceded In Kashmir

சில நாட்களாகவே காஷ்மீரில் தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் அங்கு 64 மணி நேர முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.35 லட்சமாக ஆகி இருக்கும் நிலையில், காஷ்மீரிலும் தினசரி கொரோனா பாதிப்பு நான்காயிரத்தை தொட்டு இருக்கிறது. இதன் காரணமாக அங்கு 64 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதன் விளைவாக சாலைகள், தெருக்கள் எல்லாம் வெறிச்சோடி கிடக்கின்றன. “ கேரளாவிலும் கொரோனா தொற்று ஐம்பதாயிரத்தை கடந்து … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2.34 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 30 1 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.34 லட்சம் கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில், 2,34,281 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 893 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,94,091 ஆக உயர்ந்து இருக்கிறது. “ மீட்பு விகிதம் தேசத்தில் … Read more

தோற்பதற்கு 99% வாய்ப்புகள் இருக்கும், ஆனால் மிச்சமிருக்கும் அந்த 1 சதவிகிதத்திலும் வெற்றியைத் தேடி தருபவன் தான் தலைவன் தோனி!

Write Up About The All Time Great Indian Team Captain Mahendra Singh Dhoni

இந்திய அணிக்காக மூன்று ஐசிசி ட்ராபிகளை தலைவனாக வாங்கிக் கொடுத்து விட்டு ஒரு தலைமை விடைபெற்று சென்றது. அதுவே மகேந்திர சிங் தோனி. அரசன் கேள்விப்பட்டு இருப்பீர்கள், போரின் போது தன் படைத்தளபதிகளை நோக்கி வருகின்ற எதிரிகளின் அம்புகளை எல்லாம், அவன் முன்னால் நின்று வாங்கிக் கொள்வான். ஆனால் அதே போரில் வெற்றி பெற்றால் அந்த வெற்றியை படையிடம் ஒப்படைத்து விட்டு ஒரு ஓரமாய் நின்று கொண்டு அந்த வெற்றியை கொண்டாடுவான். கிட்டதட்ட அப்படிப்பட்ட ஒரு அரசன் … Read more

ICC U19 WC | QF2 | ‘நடப்பு சாம்பியன் பங்களாதேஷ்சை எதிர்கொள்கிறது இந்திய அணி’

ICC U19 WC 2022 QF2 India Facing Bangladesh Today

ஐசிசி 19 வயதிற்கு உட்பட்ட உலகோப்பையின் இரண்டாவது கால் இறுதியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. நடப்பு ஐசிசி 19 வயதிற்கு உட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது கால் இறுதியில், நடப்பு சாம்பியனான பங்களாதேஷ், இந்த சுற்றில் ஒரு முறை கூட தோல்வியைத் தழுவாமல் கால் இறுதிக்கு முன்னேறி இருக்கும் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று மாலை 6:30 மணிக்கு ஆரம்பம் ஆகிறது. India U19 Squad: Angkrish Raghuvanshi, Harnoor Singh, Nishant Sindhu(c), Raj … Read more

மகளிடம் அத்து மீறிய கணவனைக் கொன்ற மனைவி நிபந்தனையின்றி விடுதலை!

Daughter Assualt Case Father Killed Mother Released

சென்னையில் தன் மகளை காக்கும் நோக்கில் தன் கணவனையே அடித்துக் கொன்ற மனைவி நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குடிபோதையில் தனது 20 வயது மகளிடம் அத்து மீறீயதை அடுத்து அவரின் மனைவியே அவரை சுத்தியலால் தாக்கியதாய் தெரிகிறது. இதில் அவர் இறந்து விடவே வழக்கு காவல் நிலையத்திற்கு சென்றது. தன் மகளைக் காக்கவே, தாக்கியதை கருத்தில் கொண்டு அப்பெண் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டு இருக்கிறார். “ … Read more