தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது மண்டல வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 30-களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்று சிவப்பு கம்பள எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம். சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 30 தேதிகளில் பரவலாக அதீத மழை பெய்யக்கூடும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திக்கொள்ளவும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஒரு சில ரெட் அலர்ட் மாவட்டங்களை … Read more

தொடர்ந்து சொதப்பும் கோலி,78 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி!

லீட்ஸ் மைதானம், இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, பேட்டிங்குக்கு சாதகமான களம், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. பால் பழையதாக பழையதாக பேட்டிங்குக்கு சாதகமாகும் என்ற நிலையில் பொறுமையா ஆடாமல் முதல் 11 ஓவர்களுக்குள்ளேயே ராகுல்,புஜாரா மற்றும் கோலி உட்பட மூன்று நட்சத்திர வீரர்களும் தங்கள் விக்கெட்டுக்களை ஆண்டர்சனின் ஆக்ரோசத்திடம் பறி கொடுத்தனர். ரோஹிட் (19), ரஹானே (18) தவிர மீதமுள்ள அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 46,397 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,397 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 608 பேர் ஒரே நாளில் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,36,396-ஆக உயர்ந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் 59 கோடியை கடந்துள்ளது உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் 100 பேருக்கு 44.17 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். உலகளாவிய அளவில் ஒரு நாளில் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,32,695-ஆக உள்ளது. கடந்த … Read more

கேரளத்தில் ஒரே நாளில் 31,445 பேருக்கு கொரோனோ தொற்று

கேரளத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த கொரோனோ தொற்று இன்று புதிய உயரத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 30,000-க்கும் அதிகமான பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் இன்று ஒரே நாளில் 31,445 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 215 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி கேரளாவில் 19,972-ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்படும் விகிதமும் 19.03 … Read more

கே.டி.ராகவனின் சர்ச்சை வீடியோவை வெளியிட்ட மதன் பாஜகவிலிருந்து நீக்கம்

தமிழக பாஜக பொதுச்செயலாளராக பதவி வகித்த கே.டி.ராகவன் குறித்த ஒரு சர்ச்சையான வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து நேற்று கே.டி.ராகவன் தனது பொறுப்பை ராஜினாமா செய்த நிலையில் அந்த வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக, அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிக்கை விடுத்துள்ளார். கே.டி.ராகவன் குறித்த பாலியல் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று இரு தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் அவர்களால் … Read more

ஓடிடி தளத்தில் வெளியாகும் சாணிக்காயிதம்

இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. ராக்கி படத்தை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தான் இப்படத்தையும் இயக்குகிறார். இந்த நிலையில் தான் இப்படத்தின் வெளியீடு உரிமையை பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வாங்கி இருக்கிறது. இயக்குநராக இருந்த செல்வராகவன் ஒரு முழுநீளப்படத்தில் முதல் முதல் நடிகராக நடிக்கும் படம் என்றால் அது சாணிக்காயிதம் தான். மேலும் செல்வராகவன் நடிகர் … Read more

இன்று கேப்டன் விஜயகாந்த்க்கு பிறந்தநாள்!

திரைப்பட நடிகர் மற்றும் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். விருதுநகர் மாவட்டம் அருப்பு கோட்டையில் பிறந்து மதுரையில் வளர்ந்தவர். சிறு வயதில் அரிசி ஆலைகளில் வேலை பார்த்துக் கொண்டே படித்துக்கொண்டிருந்தவர் சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக படிப்பின் மேல் இருக்கும் நாட்டத்தை கைவிட்டார். விஜயகாந்த் அவர்களின் இயற்பெயர் நாராயணன் (எ) விஜய ராஜ். 1978-இல் வெளிவந்த ‘இனிக்கும் இளமை ‘ என்னும் படத்தில் தான் முதன் முதலில் அறிமுகமானார் விஜய … Read more

Raja Rani 2 Today Episode 25.08.2021 Review Promo

Raja Rani 2 - 25 August 2021 review

ராஜா ராணியில் இன்று அர்ச்சனாவின் சதியின் படி பார்வதி மற்றும் விக்கியை உள்ளே வைத்து பூட்டுகிறார். சந்தியா மற்றும் செந்தில் பார்வதியை காப்பாற்றுகிறார்கள். அர்ச்சனாவை செந்தில் கண்டிக்கிறார். இதற்க்கு பிறகு அர்ச்சனா திருதுவார? காணொளியைப் பாருங்கள்.

இந்தியாவில் மீண்டும் ஏறுமுகமாய் இருக்கும் கொரோனோ தொற்று!

Corona count 24 August 2021

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 37,607-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 647-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,35,788-ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினத்தை விட புதிய தொற்று எண்ணிக்கையும்,பலி எண்ணிக்கையும் இந்தியாவில் கிட்டதட்ட மூன்று மடங்காக கூடி உள்ளது.ஏறுமுகமாகவும் இறங்குமுகமாகவும் இருக்கும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை காரணமாக மூன்றாவது அலையை கணிப்பது மருத்துவ வல்லுநர்களுக்கு சவாலாகவே … Read more