விக்ரம் படக்கூட்டணியில் இணையும் நடிகர் நரைன்!

Vikram movie update Kamalhassan Narain

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹாத் பசில், ஆன்டனி வர்கீஸ் என்று மிகப்பெரிய பட்டாளங்கள் களம் இறங்கும் விக்ரம் பட கூட்டணியில் தற்போது நடிகர் நரைனும் இணைந்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம்,அஞ்சாதே மற்றும் கடைசியாக கைதி என்று தான் நடித்த படத்தில் எல்லாம் தன் நடிப்பை நிரூபித்து இருப்பார் நரேன். விக்ரம் படத்தில் மட்டும் என்ன தன் நடிப்பை விட்டு வைப்பாரா என்ன கலக்குவார் பொறுத்திருந்து பார்க்கலாம். … Read more

இன்று முதல் தொடங்குகிறது பாராலிம்பிக்ஸ்!

Paralympics Tokyo 2021

ஒலிம்பிக் போட்டிகள் தற்போது தான் முடிந்த நிலையில் தற்போது பாராலிம்பிக்ஸ் டோக்கியோ-வில் தொடங்க இருக்கிறது. இதில் ஒட்டு மொத்தமாக 4500 பேர் பங்கேற்க இருக்கின்றனர். இந்தியா சார்பில் 54 பேர் பங்கேற்க இருக்கின்றனர். தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் கொடி அணி வகுப்பு நடத்த இருந்த நிலையில் அவர் கொரோனோ சூழலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் டெக் சந்த் இந்திய கொடியை ஏந்தும் வாய்ப்பை பெற்றார். இன்று தொடங்கும் பாராலிம்பிக்ஸ் செப்டம்பர் 5 வரை நடைபெற … Read more

பாலியல் சர்ச்சை வீடியோ – பாஜக பொது செயலாளர் கே.டி.ராகவன் ராஜினாமா

KT Raghavan allegations

தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் குறித்த பாலியல் சர்ச்சை வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளித்த கே.டி.ராகவன், இது முழுக்க முழுக்க பொய்யான பிரதி வீடியோ என்றும் இதை சட்ட ரீதியாக முறையாக எதிர் கொள்ள போவதாகவும் அதுவரை தன்னுடைய பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்து கொள்வதாகவும் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். பிரபல யூடியூபர் ஒருவர், பா.ஜ.க பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் குறித்த சர்ச்சையான பாலியல் வீடியோ ஒன்றை இணையத்தில் … Read more

சக்தியை விரைவில் பிரிகிறேன் – உடுமலை கவுசல்யா

Udumalai Gousalya marriage breakup

சமூக ஆர்வலர் என்ற பிம்பத்தில் வலம் வரும் கவுசல்யா கடந்த 2015 ஆம் ஆண்டு மாற்று சாதிப்பிரிவை சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் மூன்று பேர் சேர்ந்த கும்பல் உடுமலை பேருந்து நிலையத்தில் சங்கரையும் கவுசல்யாவையும் சரமாரியாக வெட்டித்தீர்த்தது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அனுதாபத்தில் பல சமூக ஆர்வலர்களின் அபிமானம் கிடைக்கவே,கவுசல்யாவும் தன்னை ஒரு சமூக செயற்பாட்டாளராக மாற்றிக்கொண்டு அவர்களுடன் இணைந்தார். சங்கர் … Read more

குறைத்து காண்பிக்கப்படுகிறதா கொரோனோ தொற்று…?

Corona count reduced

தொடர்ந்து நாற்பதாயிரத்தில் நிலையாக நின்று வந்த கொரோனோ தொற்று கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து வந்தது. ஆனால் மருத்துவ வல்லுநர்களோ தொற்று அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது ஆனால் புள்ளி விவரங்கள் குறைவாக காண்பிக்கப்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து சுகாதாரத்துறை நிபுணர் ரிஜோ எம் ஜான் கூறுகையில் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வந்ததாகவும், அதன் விளைவாக கடந்த இரண்டு வாரங்களாக … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 11,359 பேருக்கு புதியதாக தொற்று,266 பேர் தொற்றுக்கு பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,359 பேர் புதியதாக தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் நேற்றைய ஒரு நாளில் மட்டும் 266 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 4,35,050-ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் 58 கோடியை கடந்துள்ளது. முதல் தவணையாக 45.11 கோடி பேரும் இரண்டாவது தவணையாக 12.95 கோடி பேரும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். முதல் … Read more

தமிழகத்தில் வருகிறது 24 மணிநேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் – தமிழக அரசு

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, தமிழக அரசின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் மருத்துவம் மற்றும் மக்கள்நலவாழ்வு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழக அரசின் அறிவுறுத்தல்களின்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், புறநகர் மருத்துவமனைகள் என யாவற்றையும் கூட்டாக ஒன்றிணைத்து 55 தடுப்பூசி மையங்கள், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டமைக்கப்படும் என்று தமிழக அரசின் வழிகாட்டுதல்களின் படி இயங்கும், … Read more

ஹேஸ்டாக் போரில் மாஸ்டரை வலிமையாக முந்திய ’வலிமை’

கடந்த ஜூன் மாதம் வரை ட்விட்டரில் இந்திய அளவில் அதிகமாக பகிரப்பட்ட ஹேஸ்டாக்குகளில் வலிமை முதலிடத்தை பிடித்துள்ளதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு காலத்தில் தெருக்களத்தில் நின்று தன் ஹீரோவின் பேனர், போஸ்டர்களை ஒட்டுவதற்கு இடத்தை பிடிப்பதற்காக இரு வேறு ஹீரோக்களின் ரசிகர்கள் சண்டையிட்டு வந்தனர். அது கைக்கலப்பில் கூட கொண்டு போய் முடியும். ஆனால் இன்றெல்லாம் அந்த ரசிக சண்டைகள் டிஜிட்டல் சண்டைகளாக மாறி உள்ளன. லைக்குகள்,சேர்கள்,ட்ரென்டிங்குகள்,வசூல்கள் என்று இதை வைத்து தான் இன்று ரசிகர்கள் … Read more

தலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் பஞ்சஷேர் மாகாணம்!

அமெரிக்க படைகள் வெளியேறிய ஏழு நாட்களுக்குள் தலிபான்கள் வரிந்து கட்டி அனைத்து மாகாணத்தையும் கைப்பற்றிய போதும் ஒரு மாகாணம் மட்டும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறது. அது தான் பஞ்சஷேர் மாகாணம். ஆப்கானிஸ்தானின் அனைத்து மாகாணங்களும் தலிபான்களுக்கு அடிபணிந்து விட்ட நிலையில் பஞ்சஷேர் எனப்படும் ஒரு மாகாணம் மட்டும் தலிபான்களை சிங்கம் போல எதிர்த்து நிற்கிறது. தன் பேரிலேயே ஐந்து சிங்கங்களைக் கொண்டிருக்கும் பஞ்சஷேர் மாகாணம் இதுவரை எந்த போருக்கும் அடிபணிந்தது இல்லை. 70,80 களில் சோவியத் … Read more