கொரோனோ மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் பெறும் – தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்

நேற்றைய தினம் வரை இந்தியாவில் புதிய தொற்றின் விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. மீட்பு விகிதமும் இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் தான் மூன்றாவது அலையின் பயத்தை கொடுத்திருக்கிறது தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் பிரதமர் அலுவலகத்தில் கொடுத்திருக்கும் அறிக்கை. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மூன்றாவது அலை குறித்த அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில் கொரோனோ மூன்றாவது … Read more

பொறியியல் சேர்க்கை நிகர மதிப்பெண் கணக்கீட்டில் இருந்து வேதியியல் பிரிவு நீக்கம் – தமிழக அரசு

தமிழக அரசு, பொறியியல் சேர்க்கை குறித்த முக்கியமான அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது பொறியியல் சேர்க்கை நிகர மதிப்பெண்கள் கணிதம்,இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளின் மதிப்பெண்களின் மூலம் கணக்கீடு செய்யப்படும். தற்போது அந்த நிகர மதிப்பெண்ணில் இருந்து வேதியியல் பிரிவு நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொதுவாகவே பொறியியல் சேர்க்கை என்றால் கணிதம்,இயற்பியல்,வேதியியல் பாடப்பிரிவுகளில் ஒரு மாணவர் எடுத்த மதிப்பெண்ணிலிருந்து நிகர மதிப்பெண் கணக்கிட்டு அவர்களை கவுன்சிலிங் மூலம் வரிசைப்படி அழைத்து அந்த … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய 58 பேருக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை சம்மன் அனுப்பி உள்ளது. ஸ்டெர்லைட் எனப்படும் தாமிர உருக்காலை தொடர்ந்து சுற்று சூழலுக்கும் அந்த பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் உடல் நிலைக்கும் கேடு விளைவித்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து ஆலையை மூட சொல்லி பல்வேறு தரப்பினர் மனுக்கள் மூலம் பலரிடம் கோரிக்கை விடுத்த போதும் எந்த வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் தான் மே ,2018-இல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான … Read more

இந்தியாவில் வெகுவாக குறைந்து வரும் கொரோனோ தொற்று – இந்திய மருத்துவ கவுன்சில்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,735 பேருக்கு புதியதாக தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 385 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 4,34,784-ஆக உயர்ந்துள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு முப்பதாயிரத்திற்கும் கீழ் குறைந்திருக்கிறது இந்தியாவில் கொரோனோ தொற்று. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 57.62 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 100 பேருக்கு 43.24 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தொற்று … Read more

முதியவர்களுக்கு வீடு தேடிவரும் தடுப்பூசி – சென்னை மாநகராட்சி

80 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் விருப்பப்படின் அவர்களுக்கு வீடு தேடி வந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் பகுதிகளில் வசிக்கும் 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆசைப்பட்டால் வீடு தேடி வந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவர்கள் முறையாக 044-25384520 மற்றும் 044-46122300 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு … Read more

விசாகப்பட்டினத்தில் நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் திட்டம் தொடக்கம்

ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் 25 மெகாவாட் திறன் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் திட்டத்தை தொடங்கியுள்ளது தேசிய அனல்மின் கழகம். தொடர்ந்து புதுப்பிக்க கூடிய ஆற்றல்களை பயன்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்திவரும் நிலையில் 25 மெகாவாட் திறன் கொண்ட நாட்டிலேயே மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின் திட்டத்தை ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினத்தில் மாநில அரசின் உதவியுடன் சிம்ஹாத்ரி அனல்மின் நிலைய நீர் தேக்கத்தில் தேசிய அனல்மின் கழகம் துவங்கியுள்ளது. 75 ஏக்கர் … Read more

20 பேருக்கும் மேலானவர்களை காவு வாங்கிய ஆப்கானிஸ்தான் விமான நிலையம்

அமெரிக்க படைகள் வெளியேறிய ஒரு வாரத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதும் கைப்பற்றி விட்டனர். அதிபர் அஸ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் மக்களும் தொடர்ந்து ஆப்கனை விட்டு வெளியேறும் நோக்கோடு விமான நிலையத்திலேயே தங்கி போராடி வருகின்றனர். உயிரை கையில் பிடித்துக்கொண்டு எப்படியாவது நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என்ற நோக்கோடு விமான நிலையத்தின் நெரிசல்களிலும், பாதுகாப்பின்றி விமானத்தின் இறக்கைகளிலும் இதர பாகங்களிலும் அமர்ந்து கொண்டு பாதுகாப்பின்றி பயணம் செய்தவர்கள் என்று 20-க்கும் மேற்பட்டவர்களை காவு … Read more

வருகிறது இந்தியாவின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி சைக்கோவ்-டி

ஏற்கனவே கோவாக்சின்,கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி வகைகளுக்கு அனுமதி அளித்திருந்த மத்திய அரசு தற்போது டி.என்.ஏ தடுப்பூசியான சைக்கோவ்-டி என்ற தடுப்பூசிக்கும் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது டெல்டா வகை கொரோனோ வைரஸ்க்கு எதிராக 66 சதவிகிதம் போராடக்கூடியது என்று அந்த தடுப்பூசியை உருவாக்கிய கெடிலா நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்து வருகிறார்கள். பெரும்பாலான தடுப்பூசிகள் இரண்டு தவணையாக மட்டுமே செலுத்தப்பட்டு வரும் நிலையில் சைக்கோவ்-டி மூன்று தவணையாக செலுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறி வருகின்றனர். இந்தியாவிலேயே … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,043 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று, 401 பேர் தொற்றுக்கு பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,043 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 401 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த இறப்பு 4,34,399-ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஒரு பக்கம் குறைந்து வரும் கொரோனோ தொற்று, ஒரு பக்கம் உயர்ந்து வரும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை என்று நேர்மறையாக திரும்பி இருக்கிறது இந்தியாவில் கொரோனோவின் நிலை. இதுவரை இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் … Read more

வெளியானது விக்ரம் நடிக்கும் மகான் படத்தின் முன்னோட்டம்

தயாரிப்பாளர் லலித் குமார் – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் – விக்ரம் – துருவ் விக்ரம் – சிம்ரன் – சிம்ஹா என்ற பெரிய கூட்டணி இணையும் மகான் திரைப்படத்தின் முன்னோட்டம் சத்தமில்லாமல் வெளியாகி இணையங்களில் பெரிய சத்தமிட்டு வைரலாகி கொண்டிருக்கிறது. சந்தோஷ் நாராயணின் அசத்தலான பறை இசையில் தொடங்கும் முன்னோட்டம், தசரா குழுவில் வேஷமிடும் ஒரு குழுவை காண்பித்து, அதற்கு பின்னர் வரும் சீனில் விக்ரம் தனது பைக்கில் … Read more