ஆப்கானிஸ்தான் தலைநகரை நெருங்கிய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு மாகாணங்களாய் தலிபான்கள் கைப்பற்றி வரும் நிலையில் தற்போது தலைநகர் காபூலை குறி வைத்து நகர்ந்து வருவதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே ஆப்கன் படைகளின் அசைக்க முடியாத நகராக கருதப்படும் மசார்-இ-ஷெரீப் மற்றும் ஜலாலாபாத் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தற்போது தலைநகர் காபூலை கைப்பற்றும் முனைப்பில் இறங்கி உள்ளனர். ஆப்கன் முழுவதையும் கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்து தலிபான்கள் முன்னேறி வரும் நிலையில், ஆப்கன் படைகள் எதிர்த்து போராடினாலும் தாக்குப்பிடிக்க முடியாது நிலைகுலைந்த … Read more

உலகிலேயே அதிக தடுப்பூசி மக்களுக்கு விநியோகம் செய்த நாடுகளில் இந்தியாவிற்கு இரண்டாம் இடம்!

நேற்றைய தினம் வரை இந்தியாவில் இது வரை 55.73 கோடி தடுப்பூசிகள் ஒன்றிய அரசிடம் இருந்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 53.26 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. மக்களுக்கு அதிக தடுப்பூசி செலுத்திய நாடுகளுள் சீனாவிற்கு அடுத்து இந்தியா இருப்பதாகவும் தனது அறிக்கையில் அமைச்சகம் அறிவித்துள்ளது. பயன்படுத்திய 53.26 கோடி தடுப்பூசிகள் போக மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 2.85 கோடி தடுப்பூசிகள் … Read more

’ எல்லா புகழும் இறைவனுக்கே ‘ – 29 Years Of Rahmanism

’ சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை ‘ என்று 29 வருடங்களுக்கு முன்பு தன் இசைப்பயணத்தை தொடர்ந்த இந்த மனிதன் \’ பரம் பரம் பரம் பரம் பரமசுந்தரி ‘என்று இன்றளவும் ஹிட் அடித்துக் கொண்டு தான் இருக்கிறார். இசை எப்படி தான் தீராமல் இருக்கிறதோ இந்த இசை மனிதனிடம். இசை என்னும் ஒரு யுகத்தையே தன் கையில் வைத்திருப்பார் போல. திலீப் குமார் என்னும் சிறுவன்….! சாரி சாரி கதைக்கு ரொம்ப முன்னாடி போயிட்டோமோ..! … Read more

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக 36,083 பேருக்கு கொரோனோ தொற்று, 493 பேர் தொற்றுக்கு பலி

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதியதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,083-ஆகவும் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 493-ஆகவும் உள்ளது. இந்தியாவில் கொரோனோ தொற்று தொடர்ந்து இரண்டாவது நாளாக 40,000-க்கும் கீழாக பதிவாகி உள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் புதியதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 36,083-ஆகவும் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 493-ஆகவும் உள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,31,225 ஆக உயர்ந்துள்ளது. ஓரு … Read more

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுன் கைது!

தான் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பட்டியலின மக்களை சாடும் வகையில் பேசியிருந்த மீராமிதுன்,சில நாட்களாகவே பதுங்கியிருந்த நிலையில் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் மீரா மிதுன் சில வாரங்களுக்கு முன் தான் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பட்டியலின மக்களை மிகவும் அவதூறாக பேசி இருந்தார். இது குறித்து சென்னை எம்.கே.பி.நகர் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். வழக்கு பதிவானது தெரிந்ததுமே தான் தங்கி இருந்த இடத்தை … Read more

தமிழகத்தில் இனி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

1970-இல் கலைஞர் கருணாநிதி அவர்கள் கொண்டு வந்த திட்டமான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் திட்டம் 51 வருடங்களுக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது. ’அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டத்தை தொடர்ந்து, முறையாக அர்ச்சகருக்கு பயிற்சி பெற்று படித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தி இருக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 58 பேருக்கும் கபாலீஸ்வரர் கோவில் திருமணமண்டபத்தில் வைத்து பணி நியமன … Read more

இனி பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி அவசியம் – தமிழக வேளாண் துறை

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை, அமைச்சர் MRK பன்னீர் செல்வம் வாயிலாக தாக்கல் செய்யப்பட்டது. பனை மரங்கள் பற்றிய பிரிவில் அமைச்சர் பன்னீர் செல்வம் கூறுகையில் இனி ரேசன் கடைகளில் பனைவெல்லம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாலையோரங்களில் இருக்கும் பனை மரங்களை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி அவசியம் என்றும் அறிவித்துள்ளார். மேலும் வேளாண் துறை, வேளாண்மை-உழவர் துறை என்று பெயர் மாற்றப்பட்டு அழைக்கப்படும் என்றும் … Read more

டெல்டா பிளஸ் கொரோனோ தொற்றுக்கு மஹாராஷ்டிரத்தில் 5 பேர் பலி

மஹாராஷ்டிரத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் டெல்டா பிளஸ் தொற்றுக்கு மஹாராஷ்டிரத்தில் மட்டும் 5 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. இதில் இரண்டு தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் டெல்டா பிளஸ் தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த ஜூலை 21 அன்று டெல்டா பிளஸ் வகை கொரோனோ தொற்று உறுதி … Read more

ரஷ்யாவில் வலுமை பெறுகிறது டெல்டா வகை கொரோனோ வைரஸ்!

ரஷ்யாவில் கடந்த ஒரு நாளில் மற்றும் புதியதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 22,277-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தொற்று பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 815 ஆக உள்ளது. தொடர்ந்து மூன்று நாளாக தினசரி தொற்று பலி ரஷ்யாவில் உயர்ந்த வண்ணமாகவே உள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் டெல்டா வகை கொரோனோ வலுமையடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. மாஸ்கோவில் மட்டும் அதிகபட்சமாக 2,529 பேருக்கு தொற்று புதியதாக பதிவாகி உள்ளதாக … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 38,867 பேருக்கு கொரோனோ தொற்று, 478 பேர் தொற்றுக்கு பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக கொரோனோ தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 38,867-ஆக உள்ளது. இது நேற்றைய தொற்று எண்ணிக்கையை விட 3.6 சதவிகிதம் குறைவு. மேலும் நேற்றைய ஒருநாளில் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 478-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்தமாக கொரோனோவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4,30,732-ஆக உயர்ந்துள்ளது என இந்திய மருந்துவ அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் மட்டுமே நேற்றைய ஒரு நாள் தொற்று பாதிப்பு 20,452-ஆக உள்ளது. ஒட்டு மொத்த … Read more