ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனோவிற்கு 808 பேர் பலி – இது தினசரி பலியில் புதிய உச்சம்

ரஷ்யாவில் தினசரி கொரோனோ பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 808 பேர் கொரோனோவிற்கு பலி ஆகி உள்ளதாக ரஷ்யன் பெடரல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,68,049 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே அதிகபட்ச இறப்பை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது ரஷ்யா. ரஷ்ய ஊடகங்கள் கொரோனோ இறப்பை பற்றி தெரிவிக்கையில் ரஷ்யாவில் ஒட்டு மொத்த இறப்பு மூன்று லட்சத்தை தாண்டி இருக்கும் என்றும் … Read more

62-ஆவது வருட திரைப்பயணத்திற்குள் அடி எடுத்து வைக்கும் கமல் என்னும் ஆத்ம நடிகன்

1960-இல் ‘களத்தூர் கண்ணம்மா’ என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக இந்த சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார் கமல்ஹாசன். இன்றோடு இந்த மனிதன் சினிமாவிற்கு வந்து 62 வருடம் ஆகிறது. 220 படங்களுக்கு மேல் நடித்தாகிற்று. இன்றும் தீரவில்லை இந்த மனிதனுக்குள் இருக்கும் அந்த நடிப்பின் ஊற்று.  நடிகர்,இயக்குநர்,தயாரிப்பாளர்,நடன இயக்குனர்,எழுத்தாளர் என்று எத்தனை பரிணாமங்கள் தான் இந்த 62 வருடத்திற்குள்! சிறந்த நடிகர் என்னும் முறையில் நான்கு தேசிய விருதுகள், சிறந்த தயாரிப்பாளர் என்னும் முறையில் ஒரு தேசிய … Read more

மீண்டும் அதிகரிக்கிறது கொரோனோ பாதிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,195 பேருக்கு தொற்று

தொடர்ந்து மருத்துவ வல்லுநர்கள் மூன்றாவது அலை குறித்து எச்சரித்து வந்தாலும் மக்கள் கொரோனோ தடுப்பு முறைகளை முறையாக கையாளாதாதன் விளைவு மீண்டும் அதிகரித்து வருகிறது கொரோனோ தொற்று. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதியதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,195-ஆகவும் தொற்றின் காரணமாக 490 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மருந்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு 490 பேர் உயிரிழந்ததன் மூலம் மொத்த உயிரிழப்பு 4,29,669 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தடுப்பூசி … Read more

GSLV F10 ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்தது – இஸ்ரோ தலைவர் சிவன்

புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட GSLV F10 தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார். இயற்கை பேரிடர்,சுற்றுச்சூழல் மற்றும் வனவியல் ஆராய்ச்சிக்காக EOS-3 எனப்படும் அதிநவீன கண்காணிப்பு செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட GSLV F10, கிரையோஜெனிக் என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்ததாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் அறிவித்துள்ளார். கொரோனோவின் காரணமாக தொடர்ந்து தாமதமான இஸ்ரோவின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பின் தற்போது தொடங்கிய … Read more

ஆப்கானிஸ்தானில் அமைதி வேண்டும் – உலக தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்த கிரிக்கெட் வீரர் ராஷித் கான்

ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளை தலிபான்கள் அரசிடம் இருந்து கைப்பற்றி வரும் நிலையில் அங்கு அமைதி சீர்குலைந்து பொது மக்கள் கொல்லப்படும் நிலையும் நிலவி வருகிறது. இதனைக்குறித்து ஆப்கன் கிரிக்கெட் வீரர் ராஷித்கான் தனது ட்விட்டரில் “ உலக தலைவர்களே எங்களுக்கு அமைதி வேண்டும் இங்கு எங்கள் உரிமை பறிக்கப்பட்டு நிலம் பறிக்கப்படு உடைமைகள் பறிக்கப்பட்டு கொல்லப்படுகிறோம் எங்களை காப்பாற்றுங்கள் “ என்று கோரிக்கை விடுத்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் தங்கி தலிபான்களுக்கு எதிராக போர் புரிந்து … Read more

அமெரிக்காவையும் தென்கொரியாவையும் எச்சரிக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-னின் தங்கை!

தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து வருகின்ற ஆகஸ்ட் 16 முதல் 26 வரை மிகப்பெரிய அளவில் போர் ஒத்திகை நடத்த இருப்பதாக தென்கொரிய பத்திரிக்கை ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே எலியும் பூனையுமாய் திரிகின்ற வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் தற்போது அமெரிக்காவும் புகுந்துள்ளதால் இந்த விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.’தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து நடத்த இருக்கிற போர் ஒத்திகை எங்களுடன் போர் புரியவா..? எதற்கும் தயாராக இருக்கிறோம். முன்னேற்பாடுகள் பலமாக இருக்கும். எதிர்வினையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்’ என்று … Read more

அடுத்த கட்டமாக உலக சாம்பியன்ஷிப் வெல்வதே இலக்கு – நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்றிருந்த நீரஜ் சோப்ராவிற்கு இந்திய தடகள சம்மேளனம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நீராஜ் சோப்ரா தன்னுடைய அடுத்த கட்ட இலக்கு என்பது உலக சாம்பியன்சிப் வெல்வதே என்றும் அதற்கான முன்னெடுப்புகளை இப்போதிருந்தே தொடங்க இருப்பதாகவும் தன் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். ஏற்கனவே ஆசிய விளையாட்டு போட்டியிலும் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றிருந்த நீராஜ் சோப்ரா தற்போது நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் தனது … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 38,353 பேருக்கு தொற்று,497 பேர் பலி

மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் தாக்க கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில் தொடர்ந்து சராசரியாக கொரோனோ தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு நாளில் மட்டும் புதியதாக 38,353 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 497 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த உயிரிழப்பு 4,29,179-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 51 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய … Read more

பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் GSLV F10 நாளை விண்ணில் பாய்கிறது – இஸ்ரோ

பேரிடர் எச்சரிக்கை,கனிமவியல்,வனவியல் குறித்த கண்காணிப்பிற்கான அது நவீன செயற்கை கோள் GSLV F10 மூலம் நாளை அதிகாலை 5:43-ற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளிமையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. கொரோனோ சூழலில் தொடர்ந்து இஸ்ரோவின் பல்வேறு பணிகளுக்கு இடையூறுகள் இருந்த நிலையில் எல்லா செயல்நிலைகளும் தாமதமாகி வந்தன. தற்போது சூழல் தகுந்தவாறு அமைந்தததால் இந்த வருடத்தின் இரண்டாவது GSLV வகை ராக்கெட் ஆனது EOS-3 எனப்படும் அதிநவீன கண்காணிப்பு செயற்கை … Read more

வெளியாகிறது நடிகர் விவேக் கடைசியாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி!

நடிகர்,மக்களின் கலைஞர்,இயற்கையின் பாதுகாவலன் என்றெல்லாம் மக்களால் அழைக்கப்படும் கலைவாணர் விவேக் அவர்கள் திடீரென்று மாரடைப்பால் கடந்த ஏப்ரல் அன்று காலமானார். தற்போது அவர் கடைசியாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான LOL- எங்க சிரி பாப்போம் என்னும் நிகழ்ச்சி அமேசான் வலை தளத்தில் ஆகஸ்ட் 27 அன்று வெளியாக இருப்பதாக அறியப்படுகிறது. மிர்ச்சி சிவா மற்றும் கலைவாணர் விவேக் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி மொத்தம் ஆறு பகுதிகளை கொண்டது.  இதில் RJ விக்னேஷ் காந்த், பிரேம்ஜி அமரன், … Read more