பெகாசஸ் விவகாரம்: இந்திய அரசின் நிறுவனமே இந்தியாவின் முக்கிய பிரமுகர்களை உளவு பார்த்ததா?

’ தி வயர் ‘ எனப்படும் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி பெகாசஸ் எனப்படும் இஸ்ரேலிய உளவுக் கருவியை வாங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாகவும்,மேலும் இந்தியாவில் நீதிபதி,பத்திரிக்கையாளர்கள்,கட்சி தலைவர்கள்,தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட 300-க்கும் பேற்பட்டோர் அந்த உளவுக்கருவியால் உளவு பார்க்கப்பட்டதாகவும் அந்த தரவுகள் கூறுகின்றன. இது மட்டும் அல்லாமல் இந்த உளவுகள் அனைத்தும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிறுவனம் ஒன்றிலிருந்தே நடந்திருப்பதாகவும் அந்த தரவுகள் தெரிவிக்கின்றன. பெகாசஸ் என்பது இஸ்ரேலின் NSO என்னும் குழு வடிவமைத்த ஒரு … Read more

அடுத்ததாக களம் இறங்குகிறது புதிய உயிர்க்கொல்லி வைரஸ் ’மார்பர்க்’

இரண்டு வருடமாகியும் இன்றளவும் கொரோனோ ஓய்ந்தபாடில்லை. அதற்குள்ளும் அடுத்த வைரஸ் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. வவ்வால்களிடம் இருந்து மனிதருக்கு பரவும் மார்பர்க் என்னும் வைரஸ் 88 சதவிகிதம் இறப்பை ஏற்படுத்தகூடியதாம். இது மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. மார்பர்க் வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடியது. இது பெரும்பாலும் குகைகளில் வாழும் வவ்வால்களிடமிருந்து மனிதனுக்கு பரவுவதாக அறியப்படுகிறது. இது மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது. கினியாவின் சுற்றுபுறப்பகுதிகளில் மார்பர்க் வைரஸ் தாக்கி … Read more

பூமி என்னும் ஒரு உன்னத கிரகத்தை மனித இனமாகிய நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம் – ஐநா

பனிப்பொழிவு,நிலச்சரிவு,தொடர்மழை,ஓயாத அனல்,வெள்ளம், வரலாறு காணாத காட்டுத்தீ என்று எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் ஏதேனும் ஒரு இயற்கை பேரிடர் இருந்து கொண்டே தான் இருக்கிறது. புதைபடிவ எரிபொருள்கள், பசுமை இல்ல வாயுக்களை வெளிப்படுத்தும் சாதனங்கள் இவைகளின் பயன்பாடுகளே இந்த காலநிலை மாற்றத்திற்கு பெரிதும் காரணம் என்று ஐநா தனது அறிக்கையில் கூறி உள்ளது. உலக வெப்பமயமாதல் உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.ஒரு சூழலில் வறட்சி நிலவினால் மற்றுமொரு சூழலில் பேரிடர் விளைவிக்கும் கனமழை பொழிகிறது. … Read more

தொடர்ந்து ஏழு நாட்களாக கீரிஸ் நாட்டில் எரியும் காட்டு தீ

கீரிஸ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தீவான ஈவியாவில் உள்ள பிரிஸ்டின் காட்டில் தொடர்ந்து ஏழாவது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஏராளமான நிலப்பகுதிகளையும் வீடுகளையும் விழுங்கிய காட்டுத்தீ காட்டில் உலவி வரும் உயிரினங்களையும் அழித்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வருகிறது கீரிஸ் அரசு. தொடர்ந்து தட்ப வெப்ப நிலை மாறி வரும் கீரிஸ் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமார் 45 டிகிரி செல்சியஸ் … Read more

அவசர சிகிச்சை பிரிவில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்!

கவிஞர்,எழுத்தாளர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளராக அறியப்படும் பாரதி பாஸ்கர் மூளை அறுவைச்சிகிச்சைக்காக அப்போல்லோவின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவரின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் உள்ள ஒரு சிலர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். சாலமன் பாப்பையா பட்டிமன்றம் என்றாலே கண்கள் முதலில் தேடுவது ராஜா சார் என்றால் அதற்கு எதிர் அணியில் பாரதி பாஸ்கர் மேடம் அமர்ந்து இருக்கிறார்களா என்று அனைவரும் பொதுவாகவே தேடுவது உண்டு. அந்த அளவுக்கு பட்டிமன்றத்தை டெலிவிசன் மூலமாக உலக அரங்கிற்கு கொண்டு சென்ற … Read more

ஈரான் மற்றும் ரஷ்யாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனோ பலிகள்!

இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னமும் ஓயாத கொரோனோ அலை மறுபடியும் உலக நாடுகளில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. ஈரானில் நேற்றைய நிலைப்படி 39,600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 546 பேர் பலியாகி உள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவில் 22,160 பேருக்கு தொற்று உறுதி ஆகி உள்ளதாகவும் 769 பேர் பலியாகி உள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து உலக நாடுகளை பயமுறுத்திவரும் இந்த கொரோனோ என்று தான் ஓய்ந்து இந்த உலகை … Read more

1 யூனிட் மின்சாரத்திற்கு 2.36 ரூபாய் இழப்பு, 1 கி.மீ பேருந்து பயணத்திற்கு 59.15 ரூபாய் இழப்பு – வெள்ளை அறிக்கை

தமிழகத்தில் அரசுப்பேருந்து 1 கிலோ மீட்டர் தூரம் ஓடினால் 59.15 ரூபாய், போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படுவதாகவும், மின்சாரத்துறையில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு தலா 2.36 ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து இன்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலமாக வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர், தமிழகத்தில் மின்சாரத்துறைக்கு ரூபாய் இரண்டு … Read more

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூபாய் 2,63,976 கடன் – வெள்ளை அறிக்கை

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மேலும், ரூபாய் 2,63,976 கடன் இருப்பதாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விடுத்த வெள்ளை அறிக்கையில்  தெரிவித்துள்ளார். இதற்கு முந்தைய அரசு மூல தன பொருள்களையும் திட்டங்களையும் உருவாக்குவதற்கு ஆக்கிய செலவை விட அரசை நடத்துவதற்கு உபயோகித்த செலவே அதிகம். அதுவே இத்தகைய நிதிச்சுமைக்கு தமிழகத்தை ஆளாக்கியதாக நிதி அமைச்சர் இதற்கு முந்தைய அரசை சாடியுள்ளார். இதற்கு முந்தைய அரசு மாநிலத்தின் ஒட்டு மொத்த உற்பத்திக்கு ஏற்ப வரியை வசூலிக்காமல் விட்டதாலும், … Read more

தன் மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி பப்ஜி மதன் உயர் நீதிமன்றத்தில் மனு

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டிற்கென ஒரு யூடியூப் சேனல் உருவாக்கி அதில் கொடிகட்டி பறந்தவர் பப்ஜி மதன். தொடர்ந்து தான் வெளியிடும் வீடியோக்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதோடு மட்டுமில்லாமல் பெண்களை இழிவான வார்த்தைகளோடு பேசியும் வந்தார். இதனால் நீதிமன்றம் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டது. கடந்த ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்ட மதன் தற்போது தன் மீது சுமத்தப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றை … Read more

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 35,499 பேருக்கு கொரோனோ தொற்று,447 பேர் பலி

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் 35,499 பேருக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 447 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,28,309- ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் 13,71,871 மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டுள்ளன. இது வரை மொத்தமாய் 48 கோடிக்கும் மேல் மாதிரிகள் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்றைய ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 17,06,598 பேர் கொரோனோ … Read more