கோவாக்சின்,கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய ஒரு ஆய்வில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டவர்களுக்கு கொரோனோவிற்கு எதிரான நோய் தடுப்பாற்றல் பெருகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது முதல் தவணையில் ஒரு தடுப்பூசியும் இரண்டாவது தவணையில் மற்றுமொரு தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெருகி இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் ஒரு பிரிவினர் முதல் தவணையாக கோவாக்சினும் தவறுதலாக இரண்டாவது தவணையில் கோவிஷீல்டும் எடுத்துக்கொண்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய ஆய்விலேயே இத்தகைய ஆச்சர்யமான முடிவு … Read more

பட்டியலின சமூகத்தை இழிவு படுத்தியதாக மீரா மிதுன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

ஏற்கனவே ரஜினி,விஜய்,ஜோதிகா,ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பிரபலங்களை அவ்வப்போது அவதூறாக பேசி சர்ச்சைகள் செய்து கொண்டிருந்த மீரா மிதுன், தற்போது தான் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் குறிப்பிட்ட சாதியின் பெயரை சொல்லி அவர்களை இழிவாக பேசி இருப்பது இணையத்தில் வைரலாகி பலராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. இதனைக் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அவர்கள் சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து பல்வேறு … Read more

விஜய்யுடன் இணையும் செல்வராகவன்…?

நடிகர் விஜய் – பூஜா ஹெக்டே – இயக்குநர் நெல்சன் – சன்பிக்சர் நிறுவனம் ஆகியோர் ஒன்றாக இணையும் ‘ BEAST ‘ படத்தில் தற்போது செல்வராகவனும் இணைய இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செல்வராகவன் – விஜய் கூட்டணியில் ஒரு படம் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு விஜய் படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார் என்ற தகவல் அவர்களை குஷி படுத்தியுள்ளது. ஏற்கனவே அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் சாணிக்காயிதம் என்னும் படத்தில் நடிகராக களம் இறங்கியுள்ள செல்வராகவன் ‘ … Read more

இரண்டு நாளில் 13,247 பேரை சென்றடைந்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

வயது முதிர்வின் காரணமாக தங்களுடைய அத்தியாவசிய மருத்துவ தேவைக்காக மருத்துவமனையை நாட முடியாமல் பலரும் இன்று வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் பயன் பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் கொண்டு வரப்பட்ட திட்டமான ‘ மக்களைத் தேடி மருத்துவம் ‘ இரண்டு நாட்களுக்குள் 13,247 பேரை சென்றடைந்திருக்கிறது என்று மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனோ சூழல்  மற்றும் வயது முதிர்வின் காரணமாக நடக்க முடியாமல் எத்தனையோ சர்க்கரை நோயாளிகளும் இரத்த அழுத்த நோயாளிகளும் … Read more

135 நாடுகளில் உருமாறிய டெல்டா வகை கொரோனோ – உலக சுகாதார அமைப்பு

கொரோனோ என்னும் நுண்கிருமியுடன் எப்படி போராடுவது என்று உலகமே விழி பிதுங்கி நிற்கும் இந்த சமயத்தில் உருமாறிய டெல்டா வகை கொரோனோ உலகெங்கும் பெருக்க தொடங்கி உள்ளது. இது வரை 135 நாடுகளில் உருமாறிய டெல்டா வகை கொரோனோ பரவத் தொடங்கி விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை விடுத்துள்ள நிலையில் அடுத்து என்ன செய்வதென்றே அறியாமல் குழம்பி நிற்கிறது உலக நாடுகள். உலக நாடுகள் அனைத்தும் கொரோனோவிற்கு எதிராக தடுப்பூசி கொள்கையை நம்பி இருக்கும் போது … Read more

இந்தியாவில் வருகிறதா ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் ரயில்?

சுற்று சூழல் பாதுகாப்பு கருதியும், பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டை குறைக்கும் பொருட்டும்  இந்திய ரயில்வேயில் ஹைட்ரஜன் வாயுக்கள் மூலம் இயங்கும் ரயிலை தொடங்க இருப்பதாக ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளி வெகு விரைவில் கோரப்படும் எனவும் அறிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து ரயில் போக்குவரத்தாகவே இருக்கிறது. இதில் பெரும்பாலான ரயில்கள் டீசல் லோகோமோட்டிவ் ஆகவே இருக்கும் நிலையில் ஒரு நாளுக்கு இவை வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைடு என்பது மிக மிக அதிகம். … Read more

ஏழு பதக்கங்களுடன் ஒலிம்பிக்கை நிறைவு செய்கிறது இந்தியா!

ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என்று மொத்தம் ஏழு பதக்கங்களுடன் டோக்கியோ ஒலிம்பிக்கை நிறைவு செய்திருக்கிறது இந்தியா. இதற்கு முன்னர் ஒலிம்பிக்கில் அதிகபட்சமாய் ஆறு பதக்கங்கள் பெற்றதே சாதனையாக இருந்த நிலையில் இந்த ஒலிம்பிக்கில் அதை பின்னுக்கு தள்ளி ஏழு பதக்கங்களை பெற்றிருக்கிறது இந்தியா. இந்தியா பெற்ற ஏழு பதக்கங்கள் 1) மீரா பாய் சானு – சில்வர் (49 கிலோ பிரிவு பளுதூக்குதல்) 2) ஆடவர் ஹாக்கி அணி – வெண்கலம் 3) … Read more

ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீராஜ் சோப்ரா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் உலகின் தலை சிறந்த வீரர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி தங்கம் வென்று அசத்தி இருக்கிறார் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா.தனது இரண்டாவது எறிதலில் அவர் எறிந்த 87.58 மீட்டர் தூரம் அவருக்கு உலக அரங்கில் தங்கத்தை பெற்று தந்திருக்கிறது. ஏற்கனவே இதற்கு முந்தைய தகுதிச்சுற்றில் தனது முதல் எறிதலிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் நீராஜ் சோப்ரா. இந்த நிலையில் இறுதிப்போட்டியில் தங்கம் எப்படியேனும் வெல்வார் என்று … Read more

மல்யுத்தம்: வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கஜகஸ்தானின் தவுலத் நியாஸ்பெகோவை 8-0 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வென்று இந்தியாவின் பதக்க பட்டியலில் மேலும் ஒரு பதக்கத்தை சேர்த்தார். 65 கிலோ எடைபிரிவு, வெண்கல பதகத்திற்கான போட்டி, இந்தியாவின் பஜ்ரங் புனியாவிற்கும் கஜகஸ்தானின் தவுலத்திற்ற்கும் இடையே நடைபெற்றது. தொடக்கம் முதலே புயல் போல களத்தில் நின்ற பஜ்ரங் புனியா எதிராளிக்கு ஒரு புள்ளி கூட … Read more

தமிழகத்தில் செப்டம்பர் 1-இல் பள்ளிகள் திறப்பா…?

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் 50 சதவிகிதம் மாணவர்களுடன் பள்ளிகள் இயங்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-இல் இருந்து ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் முறையான கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை எல்லா பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் 50 சதவிகித மாணவர்களுடன் மட்டுமே பள்ளிகள் இயங்க வேண்டும் என்றும் தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. “ இரண்டு வருடங்கள் … Read more