கோல்ப்: நூலிழையில் பதக்கத்தை தவற விட்ட அதிதீ அசோக் – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 கோல்ப் மகளிர் பிரிவில் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் கிடைத்து விடும் என்று நேற்று வரை ரசிகர்கள் நம்பிக்கையோடு இருந்த நிலையில் நூலிலையில் தகர்ந்தது அந்த நம்பிக்கை. தொடர்ந்து நிலவி வந்த மோசமான வானிலை, ஆட்டத்தின் நிலையையே மாற்றியதால் நான்காவது இடத்தை பிடித்து பதக்கத்தை தவற விட்டார் அதிதீ அசோக். கோல்ப் மகளிர் ஆட்டத்தில் நேற்றைய தினம் வரை இரண்டாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டு இந்தியாவிற்கு பதக்க நம்பிக்கை கொடுத்து வந்த அதிதீ அசோக் … Read more

வலிமை இரண்டாவது சிங்கிள் வெகு விரைவில் வெளியாகும் – யுவன்

வலிமை படத்தின் இரண்டாவது சிங்கிள் வெகுவிரைவில் வெளியாகும் என்று தனியார் மீடியாவிற்கு யுவன் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் தான் ‘ நாங்க வேற மாறி ‘ என்னும் முதல் சிங்கிள் வெளியாகி இணையம் முழுக்க வைரல் ஆன நிலையில், தற்போது யுவன் இரண்டாவது சிங்கிளும் வெகு விரைவில் வெளியாகும் என்று கூறி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் பின்னனி இசை பற்றி யுவனிடம் கேட்ட போது நீங்கள் எதிர்பார்த்ததை … Read more

50 கோடியை கடந்தது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை – மத்திய அரசு

இந்தியாவில் நேற்றைய தினம் வரை ஐம்பது கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஐம்பது கோடியை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 38.9 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியையும் 11.1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திகொண்டுள்ளனர். மத்தியபிரதேசம்,குஜராத்,ராஜஸ்தான்,மஹாராஸ்டிரம் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 99.4 … Read more

குழந்தை தொழிலாளர்களை அதிகரித்திருக்கிறதா இந்த கொரோனோ காலம்…?

இரண்டு வருட இந்த கொரோனோ காலத்தில் இந்த உலகில் தான் எத்தனை மாற்றம்..! அந்த மாற்றங்களுள் நிகழ்ந்தவை தான் இந்த விரும்ப தகாத மாற்றமும்..! புள்ளி விவரங்கள் இல்லை, ஆனால் கண்களால் விவரமாய் பார்க்க முடிகிறது.  ஆம் இந்த இரண்டு வருடத்தில் இந்தியாவில் அதிகரித்திருக்கிறது குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை. வெளியில் வேலை இல்லை, வீட்டில் வருமானம் இல்லை, தகுந்த தொழில் இல்லை ஆனால் இருப்பதெல்லாம் பண தேவையும் கஸ்டமும். நடுத்தர மனிதன் என்ன தான் செய்வான்?, பள்ளிகள் இல்லாததை … Read more

தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் ஒலித்த மந்திரங்கள்!

தமிழக அரசு கொண்டு வந்த ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இந்து அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் 47 கோயில்களில் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி சமஸ்கிருத மந்திரங்கள் மட்டுமே ஒலித்த இராஜ இராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலின் கருவறைக்குள் இன்று முதல், தமிழில் மந்திரங்கள் ஒலித்தன. அர்ச்சனை என்று நீட்டியவுடன் புரியாத மொழியில் அர்ச்சகர் செய்யும் மந்திரங்கள் எல்லாம் இனி தமிழில் ஒலிக்கும் என்பதால் பக்தர்களிடையே … Read more

மல்யுத்தம்: அரையிறுதியில் பஜ்ரங் புனியா தோல்வி – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ்விடம் 12-5 என்ற கணக்கில் தோல்வியுற்றார். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியவில்லையெனினும் இதற்கு பின் அவர் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட இருக்கிறார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ், 12-5 என்ற கணக்கில் எளிதாக பஜ்ரங் புனியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். தங்கம் வெல்வால் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஜ்ரங் புனியா அரையிறுதியில் … Read more

கோல்ப் விளையாட்டில் பதக்கம் பெறுகிறதா இந்தியா? – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிர் கோல்ப் ஆட்டத்தில், நடந்து முடிந்த மூன்று சுற்றுகளின் முடிவில் இரண்டாவது இடத்தை பிடித்து சில்வர் வெல்லும் வாய்ப்பில் நிற்கிறார் இந்திய கோல்ப் வீரர் அதிதீ அசோக். மகளிர் கோல்ப் பிரிவில் மூன்று சுற்றுகளின் முடிவில் அமெரிக்காவின் நெல்லி கொர்டாவிற்கு பிறகு இரண்டாவது இடத்தில் அதிதீ அசோக் தொடர்ந்து சில்வர் வெல்லும் வாய்ப்பில் இருக்கிறார். தொடர்ந்த வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது ஆட்டம் தடைபடுகிறது. இறுதிச்சுற்றிலும் மோசமான வானிலை  தொடருமானால் இந்தியாவிற்கு மற்றுமொரு … Read more

மல்யுத்தம்: அரையிறுதியில் பஜ்ரங் புனியா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, ஈரானின் மோர்டஸா கியாஷியை 2-1 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா , ஈரானின் மோர்டஸாவை எதிர்கொண்டார். முதலில் மோர்டஸாவே முன்னிலை வகித்த நிலையில் அதற்கு பின் சுதாரித்து அதிரடியாக விளையாடிய பஜ்ரங் புனியா, 2-1 என்ற கணக்கில் மோர்டஸாவை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்றே நடைபெறும் அந்த அரையிறுதி … Read more

வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் கிரேட் பிரிட்டனிடம் தோல்வியுற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிர் ஹாக்கி பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, கிரேட் பிரிட்டனிடம் 3-4 என்ற புள்ளி கணக்கில் போராடி தோல்வியுற்றது. மகளிர் ஹாக்கி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி, கிரேட் பிரிட்டனை எதிர் கொண்டது. இரு அணி வீரர்களும் அனல் பறக்க களத்தில் நின்றதால் ஆட்டம் கடைசி வரை சூடு பிடித்தது. பதக்கத்திற்காக கடைசி வரை களத்தில் போராடிய இந்திய அணி இறுதியில் 3-4 என்ற கணக்கில் … Read more

மல்யுத்தம்: வெள்ளிப்பதக்கம் வென்றார் ரவிக்குமார் தாஹியா- டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா 4-7 என்ற கணக்கில் ரஷ்ய வீரர் சாவுர் யுகுயேவிடம் போராடி தோற்றார். தங்கம் எட்டவில்லை எனினும் பதக்க பட்டியலில் இந்தியாவிற்கு மற்றும் ஒரு வெள்ளியை பெற்று தந்திருக்கிறார் ரவிக்குமார் தாஹியா. அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவ்வை அதிரடியாக தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். ரவிக்குமார் தாஹியா. தங்கம் வெல்வார் என்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிப்போட்டியில் 4-7 என்ற கணக்கில் … Read more