மகளிர் குத்துச்சண்டை: வெண்கலம் வென்றார் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெயின்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா துருக்கியின் புஷானெஸ் சுர்மெனலியிடம் தோற்ற நிலையில் தற்போது வெண்கலப்பதக்கத்தை பெறுகிறார். மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின் முதல் அரையிறுதியில் இந்தியாவில் லவ்லினா போர்கோஹெயின் துருக்கியின் புஷானெஸ் சுர்மெனலியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய புஷானெஸ், லவ்லினாவிற்கு ஒரு புள்ளியைக்கூட விட்டுக்கொடுக்காமல் 5-0 என்ற கணக்கில் ஆக்ரோஷமாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் தோற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லையெனினும் வெண்கலப்பதக்கத்தை வென்று இந்திய … Read more

மல்யுத்தம்: அரையிறுதிக்கு முன்னேறிய ரவிக்குமார் மற்றும் தீபக் புனியா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மல்யுத்தம் பிரிவில் ரவிக்குமார் தாஹியா மற்றும் தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவிற்கு மற்றுமொரு பதக்க நம்பிக்கையை பெற்றுத்தந்திருக்கின்றனர். மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா பல்கேரியாவின் வான்குளோவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே களத்தில் அதிரடி காட்டிய ரவிக்குமார் 14-4 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வான்குளோவை வீழ்த்தி அரையிறுதிக்குள் முன்னேறினார். மேலும் அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவ்வை எதிர்கொள்கிறார் இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா. மல்யுத்தம் 86 … Read more

வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது இந்திய ஆடவர் ஹாக்கி அணி – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் ஹாக்கி பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் ஜெர்மனியும் மோதிக்கொள்கின்றன. முதல் அரையிறுதியில் பெல்ஜியத்திடம் 5-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோற்றிருந்த நிலையில் தற்போது வெண்கலத்திற்கான போட்டியில் ஆகஸ்ட் 5 அன்று ஜெர்மனியை எதிர் கொள்கிறது. அதே நாளில் தங்க பதக்கத்திற்கான போட்டியில் உலக ஹாக்கி தர வரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கும் அணிகளான ஆஸ்திரேலியாவும், பெல்ஜியமும் மோதிக்கொள்கின்றன. எதுவாகினும் … Read more

தன் மேல் வைத்த கிண்டல், கேலிகளை சாதனையாக மாற்றி காவல் ஆய்வாளர் ஆகிறார் திருநங்கை சிவன்யா

பொதுவாகவே திருநங்கை என்றாலே அவர்கள் மீது பல்வேறு தரப்பினர் கேலி கிண்டல்களை புரிந்து அவர்களை அவமானப்படுத்துவது வழக்கமாகி வருகிறது. அவ்வாறு தன் மீது வைக்கப்பட்ட கேலி, கிண்டல்களை எல்லாம் சாதனைகளாக மாற்றி இருக்கிறார் திருவண்ணாமலையை சேர்ந்த திருநங்கை சிவன்யா. திருவண்ணாமலை மாவட்டம் பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்த திருநங்கை சிவன்யா(30), சமீபத்தில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் ஆணையம் நடத்திய காவல் ஆய்வாளர் தேர்வின் எல்லா படிநிலைகளிலும் வெற்றி பெற்றிருந்தார். இதன் மூலம் தலைமைச்செயலகத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பணிநியமன … Read more

இந்தியாவில் இதுவரை 47 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் – சுகாதாரத்துறை அமைச்சகம்

மத்திய மாநில அரசுகளும், தன்னார்வல தொண்டு உறுப்பினர்களும் தொடர்ந்து ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக இந்தியாவில் இது வரை 47.85 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின் படி இந்தியாவில் இன்றைய தேதி வரை 47.85 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் முதல் தவணை எடுத்துக்கொண்டவர்கள் 37.26 கோடி பேர் எனவும், இரண்டாவது தவணை எடுத்துக்கொண்டவர்கள் 10.59 கோடி பேர் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் அவர்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. “ ஒரு … Read more

கடந்த மூன்று வருடத்தில் 24568 சிறார்கள் தற்கொலை – தேசிய குற்ற ஆவண காப்பகம்

2017-19 இடைப்பட்ட வருடத்தில் மட்டும் சுமார் 24568 சிறார்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த மூன்று வருடத்தில் மட்டும் இந்தியாவில் மன அழுத்தம், பரிட்சையில் தோல்வி, காதல்  தோல்வி போன்ற காரணங்களால் 24,568 சிறார்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் இதில் 13,325 பெண்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.இதில் தமிழகத்தில் மட்டும் 2,035 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக தற்கொலைக்கான காரணத்தை … Read more

2.44 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை விழுங்கிய காட்டு தீ – கலிபோர்னியா

வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ கொஞ்சம் கொஞ்சமாக வனம் முழுக்க பரவி தற்போது 2,44,888 ஏக்கர் நிலப்பரப்பினை ஆக்கிரமித்து உள்ளது. சுமார் இரண்டு லட்சத்து நாற்பத்து நான்காயிரம் ஏக்கர் நிலப்பரப்பினை விழுங்கிய இந்த காட்டு தீக்கான காரணம் இன்றளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆங்காங்கே அவ்வப்போது எரிந்து எல்லா இடங்களும் பரவுகையில் சுற்றி இருக்கும் கட்டிடங்கள்,கார்கள், மக்கள்வாழும் பகுதிகள், வன உயிரிகள் என்று எதையும் பாரபட்சம் பார்க்காமல் தனக்கு இரையாக்கி கொள்கிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகள் … Read more

வலிமை முதல் சிங்கிள் இன்று வெளியாகிறதா….?

போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் அஜீத் குமார் நடிக்கும் வலிமை படத்தின் முதல் சிங்கிள் இன்று பத்து மணிக்கு மேல் வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  நீண்ட நாள்களாகவே ’வலிமை அப்டேட் வலிமை அப்டேட்’ என்று எல்லா சமூக வலைதளங்களிலும் அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட் கேட்பதையே ட்ரெண்ட் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது படக்குழுவே இறங்கி வந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தான் வலிமை படத்தின் First Look & Motion Poster … Read more

ஆஸ்திரேலியாவை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிர் ஹாக்கி பிரிவு காலிறுதியில் மூன்று முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் கம்பீரமாய் நுழைந்திருக்கிறது நம் இந்திய மகளிர் ஹாக்கி அணி. Pool A-வில் நான்காவது இடத்தை பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி, அரையிறுதிக்கு தகுதி பெற இதுவரை தோல்வியையே அடையாது Pool B-யில் முதல் நிலையில் இருக்கும் பலம் வாய்ந்த அணியான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டாக வேண்டும் என்ற … Read more

Contest என்னும் பெயரில் மக்களிடம் பணம் பறிக்கும் Instagram திருடர்கள்!

ஒரு காலத்தில் வீடு ஏறி குதித்து திருடியவர்கள் இன்று அவர்களின் வீட்டிற்குள்ளேயே சொகுசாக இருக்கையில் உட்கார்ந்து இணையத்தில் இருந்து கொண்டு திருடுகின்றனர். சமீப காலமாக கவிதை போட்டி, ஓவிய போட்டி, கதை எழுதும் போட்டி, மீம் கிரியேசன் போட்டி என்று இன்ஸ்டாகிராமில் Suggested போஸ்ட்கள் தொடர்ந்து வலம் வருகின்றன. Suggested போஸ்ட் என்பது நீங்கள் அந்த பேஜை தொடரவில்லையெனினும் அது உங்கள் பக்கத்தில் ஒரு விளம்பரம் போல வந்து நிற்கும். அதை க்ளிக் செய்து உள்ளே சென்றால் … Read more