திராணி இருந்தால் தெலுங்கானாவில் ஆட்சியை கலைத்து பாருங்கள் – சந்திரசேகர ராவ்

Chandrasekhar Rao Challenging BJP

உங்களுக்கு திராணி இருந்தால் தெலுங்கானாவில் ஆட்சியை கலைத்து பாருங்கள் என்று ஆளும் அரசிற்கு சவால் விடுத்து இருக்கிறார் தெலுங்கானா முதல்வர். தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சி கலைப்பு நாடகம் அரங்கேறி வரும் நிலையில், ‘உங்களுக்கு திராணி இருந்தால், தெலுங்கனாவில் ஆட்சியை கலைத்து பாருங்கள், நான் உங்கள் ஒன்றியத்தை கலைத்து காட்டுகிறேன்’ என்று ஆளும் ஒன்றிய அரசிற்கு சவால் விடுத்து இருக்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ். “ தொடர்ந்து ஒன்றிய ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக தைரியமாக … Read more

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 10 மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு அரங்கேற்றம்!

10 States Witnessed Coups By BJP

நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 10 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து தன் வசப்படுத்து இருக்கிறது பா.ஜ.க. ஆளுங்கட்சி, பணபலம் இவற்றை மூலதனமாக கொண்டு பதவி ஆசை காட்டி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி இதுவரை கோவா, கர்நாடகா, மஹாராஸ்டிரா, ம.பி, பீகார், உத்தரகண்ட், சிக்கிம் அருணாச்சல், மேகாலாயா, மணிப்பூர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் திறம்பட ஆட்சியை கவிழ்த்து இருக்கிறது பா.ஜ.க. “ ஒருவரை கட்சியின் பக்கம் இழுக்க 50 கோடி வரை விலை பேசப்படுவதாக … Read more

மாஜி அமைச்சர்கள் இனி பேட்டிகளில் பேச கூடாது – ஈ.பி.எஸ் எச்சரிக்கை

EPS Warns To Their Members

மாஜி அமைச்சர்களும் இரண்டாம் கட்ட தலைவர்களும் இனி பேட்டிகளில் பேச கூடாது என ஈ.பி.எஸ் எச்சரித்து இருக்கிறார். பேசும் போது விதிகளை மீறி பேசுவதாலும், கருத்துக்கள் இல்லாமல் எதையாவது உளறிக் கொட்டுவதாலும் அதிமுகவின் மாஜி அமைச்சர்களும், இரண்டாம் கட்ட தலைவர்களும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் எந்த ஒரு செய்தி நிறுவனத்திற்கும் பேட்டி கொடுக்க வேண்டாம் என எச்சரித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. “ ஏற்கனவே கட்சிக்குள் மோதல் போக்குகள் நிறைந்து வரும் நிலையில் அடுத்தடுத்த கட்டத்தில் பொறுப்புக்காக … Read more

அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் ஈ.பி.எஸ், ஆதரவாளர்களை திரட்டும் ஓ.பிஎஸ்!

Fight For Occuring ADMK Between EPS And OPS

ஈ.பி.எஸ் அவர்கள் ஓ.பி.எஸ் அவர்களை ஒதுக்கி விட்டு அதிமுகவை கைப்பற்ற நினைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுமேடைகளில் தற்போதெல்லாம் ஓ.பி.எஸ் அவர்களை ஈ.பி.எஸ் புறக்கணித்து வருவதாகவும், ஒற்றை தலைமையோடு அதிமுகவை ஈ.பி.எஸ் கைப்பற்ற நினைப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது அறிந்த ஒ.பி.எஸ் ஒரு பக்கம் தன்னை நிலை நிறுத்த ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். 23 ஆம் தேதி நடக்க இருக்கும் பொதுக்குழுவில் ஒரு பக்கம் ஈ.பி.எஸ் அவர்கள் ஓ.பி.எஸ்சை பல்வேறு முறைகளில் நிராகரித்து வருகிறார். இன்னொரு … Read more

’எந்த முட்டாள் பெட்ரோல், டீசல் வரியை ஏத்தினானோ அவனையே குறைக்க சொல்லுங்க’ – சந்திர சேகர ராவ்

Telangana CM Chandra Sekhar Rao

பெட்ரோல், டீசல் நாளுக்கு நாள் விலை எகிறிக் கொண்டு இருக்கும் நிலையில் தெலுங்கானா முதல்வர் ஒரு காட்டமான கருத்தை தெரிவித்து இருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து கொண்டே வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இது குறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகையில் ‘நாங்கள் வேட் வரியை ஒரு பைசா கூட அதிகரிக்கவில்லை, ஆகையால் எந்த … Read more

’மோடி ‘’டீ விற்றார்’’ என்பதை நம்பியவர்கள், தற்போது ’’நாட்டையே விற்கிறார்’’ என்றால் நம்ப மறுக்கிறார்கள்’ – பிரகாஷ் ராஜ்

Actor Prakash Raj About Narendra Modi

நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஒரு காட்டமான எதிர்வினையை வைத்து இருக்கிறார். ஒரு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டீ விற்றார் என்ற கூற்றை இந்த சமூகமே சேர்ந்து நம்பியது. ஆனால் தற்போது நாட்டையே விற்கிறார் என்று கூறினால் நம்ப மறுக்கிறார்கள். அது தானே உண்மை, அது தானே இயல்பு என்று மோடி குறித்து ஒரு காட்டமான எதிர்வினையை காட்டி இருக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். “ ஒரு மாய பிம்பத்தை … Read more

’பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்’ – இயக்குநர் பாக்யராஜ்

Director BhagyaRaj

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறித்து இயக்குநர் மற்றும் நடிகரான பாக்யராஜ் அவர்கள் ஒரு விமர்சனமான கருத்தை தெரிவித்து இருக்கிறார். ’நம் நாடு தற்போது இருக்கும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி போன்ற எனர்ஜிமிக்க தலைவர்களே தேவை. இன்னும் பல காலம் அவர் பிரதமராக இருக்க வேண்டும். அவரை விமர்சிப்பவர்கள் எல்லாம் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று வைத்து கொள்ளுங்களேன்’ என்று சர்ச்சை மிக்க கருத்து ஒன்றை இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்து இருக்கிறார். “ வரிசையாக ஒவ்வொருவராக … Read more

’பிரதமர் மோடிக்கு சீனா குறித்த புரிதல் இல்லை’ – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி

BJP Senior Leader Subramanian Swamy

பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி, பிரதமர் மோடி குறித்து சில கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். ’2016-இல் இருந்து இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. எல்லையில் சீனாவின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாஜ்பாய் சீனாவின் செயல்பாடுகளை புரிந்து கொண்ட அளவிற்கு பிரதமர் மோடிக்கு சீனா குறித்த புரிதல் இல்லை’ என்று சுப்பிரமணிய சுவாமி தனது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். “ அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கி கொள்பவர் சுப்பிரமணிய … Read more

உத்திர பிரதேசத்தில் அதிகாரப்பூர்வமாக மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் யோகி!

Yogi Takes Over As CM Of UP For The Second Time

உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெற்ற யோகி அதிகாரப்பூர்வமாக நேற்று மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்டார். நாட்டின் மிகப்பெரிய தேர்தல் களமாக கருதப்படும் உத்திர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் மீண்டும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்டார். அவரோடு இரண்டு துணை முதல்வர்களும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். “ மோடி உள்ளிட்ட பெரிய பெரிய தலைவர்கள், யோகி ஆதித்யநாத்திற்கு, தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை முன்மொழிந்தனர் “

ஆம் ஆத்மி சாதனை, கட்சி ஆரம்பித்த 10 வருடங்களுக்குள் இரண்டு மாநிலங்களில் ஆட்சி!

Arvind Kejriwal Punjab Election

கட்சி ஆரம்பித்த 10 வருடங்களுக்குள் இரண்டு மாநிலங்களில் ஆட்சி என்ற சாதனையை நிகழ்த்தி இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, ஆரம்பித்த ஒரு வருடங்களுக்குள் டெல்லியை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பஞ்சாபிலும் பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது. 10 வருடத்திற்குள் இரண்டு மாநிலங்களை தன்வசப்படுத்தி இருக்கிறது ஆம் ஆத்மி. “ தற்போது இருக்கும் சூழலில் ஒட்டு மொத்த இந்தியாவிலும் எந்த ஒரு கட்சியும் இரு … Read more