பொருநை நதி என பெயர் மாற்றம் செய்யப்படுமா தாமிரபரணி?

Thamirabarani River Wallpaper Idamporul

தாமிரபரணி என்ற பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்ய சொல்லி போடப்பட்ட வழக்கில் தமிழக அரசை முடிவெடுக்க சொல்லி இருக்கிறது உயர் நீதிமன்றம். திருநெல்வேலி, தூத்துக்குடி சுற்று வட்டாரங்களில் பெரும் பயனை தரும் வற்றாத நதியான தாமிரபரணியின் பெயர் வடமொழி சொல் என்றும், இலக்கியங்களில் இருக்கும் பெயரான பொருநை என்ற பெயரையே நதிக்கு பயன்படுத்த வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசையே முடிவெடுக்க சொல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. பெயர் மாற்றத்திற்கென ஒரு … Read more

100 கி.மீ வேகத்தில் சென்னையை நெருங்க இருக்கும் மாண்டஸ் புயல்!

Mandous Cyclone Intensified Near Chennai

கிட்ட தட்ட 100 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் சென்னையை நெருங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. மாண்டஸ் புயல் மெல்ல மெல்ல தமிழகத்தை நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில், அது சென்னையை நெருங்கும் போது அதன் வேகம் 100 கி.மீ இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. மக்கள் அனைவரும் கடற்கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். “ பெரும்பாலான தமிழக பகுதிகளில் கனமழை இருக்க … Read more

தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து இருக்கும் வானிலை ஆய்வு மையம்!

Red Alert For 13 Districts In Tamilnadu

தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து அறிக்கை விட்டு இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், சென்னை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அதீத மழை பொழியும் ரெட் அலர்ட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ரெட் அலர்ட் டிசம்பர் 8 முதல் 10 வரை மேற்கூறிய பகுதிகளில் நீடிக்கும். “ பெரும்பாலும் ரெட் அலர்ட்டில் இருக்கும் மாவட்டங்கள் எல்லாம் சென்னையை … Read more

அடுத்த ஒரிரு நாளில் தமிழகம் முழுக்க கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Tamil Nadu Weather Condition

அடுத்த ஒரிரு நாட்களில் தமிழகம் முழுக்க கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் விடுத்து இருக்கிறது. தமிழகத்தில் டிசம்பர் 8 முதல் 10 வரை பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கன மழை மற்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. பருவமழை 40 சதவிகிதம் பொழிந்து இருப்பதாகவும் இன்னமும் டிசம்பர்களில் மழை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ டிசம்பர் வந்தாலே தமிழக நகரங்கள் … Read more

தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் கைப்பேசிக்கு தடை!

Cell Phones Restriction In Temple Idamporul

தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் கைப்பேசிக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு. கோவில்களின் தூய்மை மற்றும் புனிதத்தினை கருதி, இந்து சமய அறநிலைய துறையின் கீழ் தமிழகத்தில் இருக்கும் அத்துனை கோவில்களிலும் கைப்பேசிக்கும், முறையற்ற உடை அணிவதற்கும் தடை விதித்து இருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம். இத்தடை வெகுவிரைவில் அனைத்து கோவில்களிலும் அமல்படுத்தப்பட இருக்கிறது. “ வெளிநாட்டவர்களுக்கும் இத்தடை பொருந்துமா, மற்றும் இத்தடைகள் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு இத்தடை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது “

இனி கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை – தமிழக அரசு

Corona Test Is Not Mandatory For Pregnant Women

மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி இனி கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் கர்ப்பிணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது இதற்கு முன் கொரோனா பரிசோதனை என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால் மத்திய அரசு தற்போது அமைத்து இருக்கும் புதிய கொரோனா வழிகாட்டுதல்களின்படி இனி கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “ நீண்ட நாட்களாக இருந்து வந்த கொரோனோ கட்டுப்பாடுகள், கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருவதால் மக்கல் … Read more

தமிழகத்தில் 180 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது சிறார் தொழிலாளர்கள்!

Child Labor In Tamilnadu Increased 180 Percentage Compared To 2011

தமிழகத்தில் சிறார் தொழிலாளர்கள் பல மடங்கு பெருகி இருப்பதாக ஒரு நிறுவனம் அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த 2011 கணக்கெடுப்பின் போது சிறார் தொழிலாளர்கள் தமிழகத்தில் 39 சதவிகிதமாக இருந்தனர். ஆனால் சிஏசிஎல் என்ற நிறுவனம் 2021 ஆம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின் போது சிறார் தொழிலாளர்கள் விகிதம் தமிழகத்தில் 180 சதவிகிதமாக உயர்ந்து இருப்பதாக ஒரு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டு இருக்கிறது. “ கொரோனா என்னும் சூழல் ஏற்படுத்திய பாதிப்பே இதற்கான காரணம் … Read more

அரசு செவிலியர்கள் மற்றும் டாக்டர்களை கண்காணிக்க வருகிறது புதிய பறக்கும் படை!

Madras High Court Order To Setting Up Flying Squad To Monitoring Medical Activities

அரசு செவிலியர்கள் மற்றும் டாக்டர்களை கண்காணிக்க புதிய பறக்கும் படையை அமைக்கும் படி சென்னை ஹைகோர்ட் சுகாதாரத்துறைக்கு உத்தரவு இட்டு இருக்கிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நேரம் தவறி வருவதாகவும், வராமலே இருப்பதாகவும் புகார் எழுந்து வந்த நிலையில், அவர்களை கண்காணித்திட பறக்கும் படையை அமைக்க சொல்லி சுகாதாரத்துறைக்கு உத்தரவு இட்டு இருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். “ அரசு மருத்துவமனைகளில் பணி புரிபவர்கள், பெரும்பாலும் தனியார் … Read more

தமிழகத்தில் பெருகும் இன்ப்ளூயன்சா வைரஸ், இதுவரை 1,166 தொற்றுகள்!

Influenza Updates In Tamilnadu 27 09 2022

தமிழகத்தில் இன்ப்ளூயன்சா வைரஸ் தலைவிரித்து ஆடி வருகிறது. இதுவரை 1166 தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. இருமல், தொண்டை வலி, மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகளை இன்புளூயன்சா வைரஸ் மனிதர்களிடையே ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் தற்போது வரை 1,166 இன்புளூயன்சா வைரஸ் தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. நோயுற்றவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது பரவலை தடுக்கும். “ ஆண்டு தோறும் இன்புளூயன்சா வைரஸ்கான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் செலுத்திக் கொண்டு பரவலினால் வரும் பாதிப்புகளை தற்காத்துக்கொள்ளலாம் என … Read more

தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல், தொற்று முந்நூறைக் கடந்து இருக்கிறது!

H1N1 Virus Fever Numbers Increasing In India

கொரோனா சூழல் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பன்றிக்காய்ச்சல் வேகம் எடுக்க துவங்கி இருக்கிறது. கொரோனா என்னும் சூழல் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் விஸ்வரூபம் எடுக்க துவங்கி இருக்கிறது. தற்போது வரை தொற்று முந்நூறைக் கடந்து இருப்பதாகவும், பரவல் நீடிப்பதை தொடர்ந்து ஆங்காங்கே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்து இருக்க்கிறது. “ ஒன்னு போனா இன்னொன்னு பின்னாடியே திரும்ப வரும் போல, … Read more