சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கான முதல் 48 மணி நேர சிகிச்சை செலவை அரசு ஏற்கும் – தமிழக அரசு

Accident Person 48 Hours Free Treatment Scheme TN Government

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கான முதல் 48 மணி நேர அவசர அவசிய சிகிச்சை செலவை அரசு ஏற்கும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது தமிழக அரசு. நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களால் சாலை விபத்தும் பெருகி வருகிறது. இனி சாலை விபத்தில் சிக்கியவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் முதல் 48 மணி நேரத்திற்கான செலவை அரசு ஏற்பதாக அரசு சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 81 மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும் எனவும் … Read more

பிற மாநிலங்களில் இருந்து விமானத்தில் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் – தமிழக அரசு

E Pass Is Mandatory For State To State Air Travellers Tamil Nadu Government

பிற மாநிலங்களில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகம் வருவபவர்களுக்கு இ-பாஸ்சை கட்டாயப்படுத்தி இருக்கிறது தமிழக அரசு. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கே கட்டுப்பாடுகள், நெறிமுறைகள என்று இருந்து வந்த நிலையில், ஒமிக்ரான் பரவல் பிற மாநில பயணிகள் வழியாக ஊடுருவதை தடுக்க, பிற மாநிலங்களில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகம் வருகின்ற பயணிகளுக்கும் இ-பாஸ்சை கட்டாயப் படுத்தி இருக்கிறது தமிழக அரசு. “ இனி அருகில் இருக்கும் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு விமானம் வழியாக வந்தாலும் கூட … Read more

கோவையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 15 வயது சிறுமி!

15 Year Old Girl Child Karthika Killed Near Coimbatore

காணாமல் போனவராக கருதப்பட்ட கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த கார்த்திகா என்ற 15 வயது சிறுமி முட்புதரில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டு இருக்கிறார். கோவையில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி கார்த்திகா டிசம்பர் 11 அன்று வீடு திரும்பவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று முட்புதரில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டு இருப்பது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. “ தொடர்ந்து சிறுமிகள் கொல்லப்படுவது, வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவது போன்ற குற்றங்கள் … Read more

தமிழகத்தில் கொரோனோ இன்னமும் சமூகப்பரவலாகவே இருக்கிறது – சுகாதாரத்துறை

Corona Still Behave As Community Transmission In TamilNadu

தமிழகத்தில் கொரோனோவானது இன்னமும் சமூகப்பரவலாக தொடர்வதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 700 பேர் தொற்றுக்கு உள்ளாவதாகவும், அதில் 200 பேருக்கு தொற்று எப்படி பரவுகிறதே என்று தெரியாமல் இருக்கிறது என்றும் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இதன் மூலம் கொரோனோ இன்னமும் தமிழகத்தில் சமூகப்பரவலாகவே இருப்பது அறியப்படுகிறது. ஒரு மாநிலத்தில் Index Case அதிகமாகும் போது அது சமூகப் பரவலாக கொள்ளப்படும். பரவல் யார் மூலம், எப்படி வந்தது, என்று … Read more

TNPSC தேர்வாளர்களே, இணையத்தில் மெட்டீரியல் தேடி தேடி சோர்வோ? இதோ ஒரே இடத்தில் நீங்கள் தேடும் மொத்த மெட்டீரியலும்!

TNPSC Study Material 2022

தமிழ்நாடு தேர்வாணையத்தின் கீழ் நடக்கும் தேர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் மெட்டீரியல்களை அங்கும் இங்கும் என இணையத்தில் தேடிக் கொண்டு இருப்பீர்கள். இனி அந்த தேடல் வேண்டாம். உங்களுக்காகவே மொத்தமாக தொகுத்து ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கும்படி செய்துள்ளோம். பதிவிறக்கம் செய்து படித்து பயன்பெறுங்கள். குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களில் இருக்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு அரசு தேர்வாணையமே அறிவித்து இருப்பதால் இப்போதிருந்தே படித்து … Read more

மழை நிலவரம் | ’தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்’

Indian Meteorological Department Given Red Alert To Sevan Districts Of TN

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமெடுத்து வரும் நிலையில், ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டையும் அறிவித்து இருக்கிறது மண்டல வானிலை ஆராய்ச்சி மையம். திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,  சேலம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் கொடுத்து இருக்கிறது மண்டல வானிலை ஆராய்ச்சி மையம். ” ஆங்காங்கே … Read more

ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை – தமிழக அரசு

Due To Heavy Rains Two Days Holiday For 9 Districts School And College In TN

வடகிழக்கு பருவமழை தீவிரமெடுத்து வரும் இந்த சூழலில் சென்னை உட்பட ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஆங்காங்கே கொட்டித் தீர்த்து வரும் இந்த சூழலில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. “ இயற்கையின் பேரிடருக்கு மாநிலமே ஸ்தம்பித்து நின்றாலும் … Read more

மழைக்காலம் முடியும் வரை அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு – தமிழக அரசு

Free Food For All In Amma Unavagam In Rainy Days

தமிழகத்தில் மழைக்காலம் முடியும் வரை அனைத்து அம்மா உணவங்களிலும் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் எல்லா பகுதிகளும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. அதிலும் முக்கியமாக தலைநகரம் ஸ்தம்பித்து உள்ள இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. “ காயும் வயிறுகளை குறைந்த பட்ச விலையில் ஆற்றிய அம்மா உணவகம், தற்போது பேரிடரின் போது … Read more

அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

Heavy Rains To Continue For Next Two Days In Chennai 08 11 2021

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் நிலவும் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக நாளை முதல் சென்னையில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகம் முழுக்க ரெட் அலர்ட்டை அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவிக்கையில் வங்க கடலில் … Read more

நிரம்பும் மேட்டூர் அணை | காவிரி கரையோர மக்களுக்கு அரசு விடுக்கும் எச்சரிக்கை!

mettur dam reaching towards full capacity cauvery coastal warning

இன்னும் 48 மணி நேரத்தில் மேட்டூர் அணை நிரம்பி விடும் என்றும், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று எச்சரிக்கையுடன் இருக்கவும் அரசு சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது. பிலிகுண்டுவிலிருந்து வரும் 28,000 கனஅடி நீரும், பாலாற்றில் இருந்து வரும் 4000 கனஅடி நீரும் மொத்தமாக மேட்டூர் அணையை நோக்கி வந்து கொண்டு இருப்பதால் இன்னும் 48 மணி நேரத்தில் மேட்டூர் அணை 120 அடி என்ற அதன் முழு கொள்ளளவை எட்ட இருக்கிறது. இதனால் கரையோர … Read more