பேருந்துகளின் மூலம் நடத்தப்படும் கடத்தல்களை தடுக்க இனி பயணிகள் பரிசோதனை கட்டாயம்!

Passenger And Their Parcels Must To Be Checked Before The Bus Travel TNSTC

அரசுப்பேருந்துகளின் வாயிலாக தடைசெய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க இனி பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருள்கள் கட்டாயம் சோதனைக்குட் படுத்தப்பட வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. கார்கள், பைக்குகளில் தடை செய்யப்பட்ட பொருள்களான கஞ்சா உள்ளிட்டவைகளை கடத்தினால் பிடிபட்டு விடுகிறோம் என்று ஒரு சில கும்பல்கள் அரசுப் பேருந்துகளில் பயணிப்பது போல ஒரு சில கடத்தல் பொருள்களை கை மாற்றுவதாக வந்த தகவல்களின் படி, இனி பயணிகள் மற்றும் பயணிகள் கொண்டு வரும் பொருள்கள் … Read more

தமிழகத்தில் 14 நாட்களில் 83 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ தொற்று!

83 School Students Confirmed Corono Positive In TamilNadu

தமிழகத்தில் பள்ளிகள் திறந்த நாளான செப்டம்பர் 1 முதல் நேற்றைய தினம் வரை, சுமார் 83 மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழக அரசு செப்டம்பர் 1-இல் இருந்து, 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு தகுந்த கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் மற்றும் பாடத்திட்டங்கள் செயல்படலாம் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் பள்ளிகள் திறந்ததிலிருந்து நேற்றைய தினம் வரை 83 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது … Read more

திருப்பூரில் 16 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ பாசிட்டிவ்!

TN Tiruppur 16 School Students Confirmed Corono Positive

திருப்பூரில் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 16 மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்திருக்கும் இந்த நிலையில், திருப்பூரில் இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 16 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. இதன் மூலம் மூன்றாவது அலை குறித்த பெரிய பயமும் மக்களிடையே நிலவி வருகிறது. நேற்று தான் மீதமுள்ள வகுப்புகளுக்கும் பள்ளிகளை எப்போது துவங்கலாம் என்று தமிழக … Read more

பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 ஆவது பிறந்த தினம் இன்று!

Anna Durai With Karunanidhi

ஆகச்சிறந்த பேச்சாளர், தீர அரசியல் மேதை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர்,திராவிடக் கழகத்தின் தலை சிறந்த தலைவர் மற்றும் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற மூன்றினை தாரக மந்திரமாகக் கொண்டு நன்னெறியுடன் செயல்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் 113-ஆவது பிறந்ததினம் இன்று! தமிழகத்தில் ‘அண்ணா’ என்கிற பெயரை அவ்வளவு எளிதில் யாராலும் மறைத்துவிடலாகாது. அவர் செய்த பணிகள் அவ்வளவு. இந்தியா குடியரசு நாடாக ஆனதிற்கு பிறகு காங்கிரஸ் தமிழகத்தில் வேரூன்றி நின்றது. அந்த வேரை அறுத்து எறிந்து திராவிட கழகத்தின் ஆட்சியை … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,591 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Covid Updates In TamilNadu 14 09 2021

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,591 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 27 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,217-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து 1,537 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். புதியதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உருமாறிய கொரோனோ மூன்றாவது அலையை எப்போது வேண்டுமானாலும் … Read more

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,580 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Update In TamilNadu 14 09 2021

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மட்டும் சுமார் 1,580 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 22-ஆக உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது 35,190-ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,509-ஆக உள்ளது. தடுப்பூசி உபயோகத்தை பொறுத்தவரை தமிழகம் நான்கு கோடியைக் கடந்துள்ளது.தற்போதெல்லாம் மக்கள் பயமின்றி தாமாகவே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருவதால் … Read more

தமிழகத்தில் நான்கு கோடியைக் கடந்திருக்கிறது தடுப்பூசி உபயோகம்!

Vaccination In TamilNadu Reached 4 Crores

தமிழகத்தில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 28 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசி பெற்றதன் மூலம் தமிழகத்தில் தடுப்பூசி உபயோகம் நான்கு கோடியைக் கடந்திருக்கிறது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தமிழக அரசு 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக நிர்ணயித்திருந்தது. ஆனால் அதையும் கடந்து ஒரே நாளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 28.91 லட்சம் பேர் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: முந்தைய அரசை எச்சரித்து அனுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

Madras High Court Warns Pre TamilNadu Government In Sterlite Gun Fire Issue

ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஒரு கார்பரேட் நிறுவனத்திற்காக பொதுமக்களின் மீது நடந்த துப்பாக்கி சூடு ’ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரிய வடு’ என்று சென்னை உயர்நீதிமன்றம் அரசை கடுமையாக சாடியுள்ளது. ஸ்டெர்லைட் எனப்படும் ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அன்றைய அரசை கடுமையாக சாடியுள்ளது. ஒரு கார்பரேட் நிறுவனத்திற்காக அதிகாரத்தில் இருப்பவர்கள் போராடிய பொது மக்களின் மீது துப்பாக்கி … Read more

அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிப்பு – தமிழக அரசு

Women Reservation Increased To 40 Percentage On Goverment Jobs

தமிழக அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 30 சதவிகிதத்திலிருந்து, 40 சதவிகிதமாக அதிகரித்து தமிழக சட்டபேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனிதவள வேளாண்மைத்துறை பிரிவு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தான் வெளியிட்ட அறிக்கையில், அரசுப்பணிகளில் இதுவரை இருந்த 30 சதவிகிதம் மகளிர் இட ஒதுக்கீடு இனிமேல் 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இனி தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் எனவும் அறிக்கை விடுத்துள்ளார். இது போக … Read more

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!

Neet Exemption Bill Tabled In TN Assembly

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதா தமிழக சட்டபேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நேற்று 19 வயதுடைய சேலம் மாணவர் தனுஷ் என்பவர், தனது மூன்றாவது முயற்சியில் நீட் தேர்வை எழுத விளைந்த போது, அதை எதிர் கொள்ள முடியாமல் பயத்தினால் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுக்க தீப்பொறியைக் கிளப்பியது. பல்வேறு தரப்பினரும் ஆளும் தற்போதைய கட்சியினை விமர்சித்து தங்கள் கருத்துக்களை … Read more