தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை துவங்கியது!

2021-22 கல்வி ஆண்டில் தமிழக வேளாண் பல்கலைக்கழகத்திற்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 8 முதல் www.tnau.ac.in என்ற வேளாண் பல்கலைக்கழகத்திற்குரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை தமிழ்நாடு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பத்தின் மூலம் கோவை வேளாண் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் 14 உறுப்புக்கல்லூரிகள் மற்றும் 28 இணை கல்லூரிகளின் கீழ் இருக்கும் 11 துறை சம்மந்தப்பட்ட படிப்புகளுக்கு தகுதியுள்ள மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று பல்கலைக்கழக செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார். இந்த வருடம் … Read more

இனி கடைகளில் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை கட்டாயம் – தமிழக அரசு

நாள் முழுக்க நின்றே நின்று வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு இனி இருக்கை வசதி கட்டாயம் என்று தமிழக அரசு சட்ட திருத்த வடிவம் ஒன்றை சட்ட பேரவையில் தாக்கல் செய்துள்ளது. தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தமிழக சட்ட பேரவையில் ஒரு சட்ட திருத்த மசோதோ ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது இனி கடைகளில் நிறுவனங்களில் நாள் முழுதும் நின்று கொண்டு வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு … Read more

பெரியார் பிறந்தநாள் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17, தமிழகத்தில் இனி சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டபேரவை அறிவிப்பின் கீழ் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது பெரியார் அவர்கள் பிறந்த தினமான செப்டம்பர் 17 இனி தமிழகம் முழுக்க சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1562 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

தமிழகத்தைப் பொறுத்த வரை கடந்த 24 மணிநேரத்தில் 1562 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 20 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி தமிழகத்தில் 34,961-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 215 பேருக்கும் சென்னையில் 166 பேருக்கும் ஈரோட்டில் 132 பேருக்கும் புதிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 1684 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகள் … Read more

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,551 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,551-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21-ஆக உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 34,856-ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 230 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்ததாக சென்னையில் 182, செங்கல்பட்டில் 122, ஈரோடு மாவட்டத்தில் 115 தொற்றுகள் பதிவாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் … Read more

இனி சட்டப்பேரவையில் புகழ்ச்சியாரம் பேசுபவர்களின் மீது நடவடிக்கை பாயும் – மு க ஸ்டாலின்

சட்டசபையில் ஒரு திட்டமோ அல்லது மசோதாக்களோ நிறைவேற்றுவதற்கு முன் நேரயத்தை விரயமாக்கி புகழ்ச்சியாரம் பேசினால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது கட்சியை சேர்ந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பொதுவாகவே எப்போதும் ஒரு ஆளும் தரப்பு சட்டசபைகளில் திட்டங்களை நிறைவேற்றிடும் போதும் அறிவித்திடும் போதும், திட்டம் சம்பந்தமான அறிவிப்புகள் பத்து நிமிடம் பேசப்பட்டால் ஒரு மணிநேரம் ஆவது தங்கள் தரப்பு தலைவர்/தலைவி குறித்த புகழ்ச்சியாரம் இருக்கும். இது விவாதிக்கும் மற்றும் அறிவிப்புகள் நேரத்தை … Read more

ஒரு வயது குழந்தைக்கு நுரையீரல் மாற்று அறுவைச்சிகிச்சை புரிந்து உலகச்சாதனை படைத்த மருத்துவர்கள்!

சென்னையில் ஒரு வயது மட்டுமே நிரம்பிய குழந்தை ஒன்றுக்கு பிறப்பிலேயே நுரையீரல் குறைபாடு இருந்தது அறியப்பட்டது. தற்போது அக்குழந்தைக்கு நுரையீரல் மாற்று அறுவைச்சிகிச்சை மூலம் இரண்டு நுரையீரலையும் மாற்றி உலகச் சாதனை படைத்து இருக்கின்றனர் சென்னை மருத்துவக்குழுவினர். சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் ஒரு வயது குழந்தை ஒன்று பிறவியிலேயே ஆக்சிஜன் செறிவுத்திறன் குறைபாட்டுடன் அனுமதிக்கப்பட்டிருந்தது. பரிசோதித்ததில் இரண்டு நுரையீரல்களும் மாற்றினால் மட்டுமே குழந்தை பிழைக்க இயலும் என்ற நிலை இருந்ததாக கூறப்படுகிறது. பெரியவர்களுக்கே மாற்று அறுவைச்சிகிச்சைக்கு உடல் … Read more

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது மண்டல வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 30-களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்று சிவப்பு கம்பள எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம். சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 29 மற்றும் ஆகஸ்ட் 30 தேதிகளில் பரவலாக அதீத மழை பெய்யக்கூடும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திக்கொள்ளவும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஒரு சில ரெட் அலர்ட் மாவட்டங்களை … Read more

சக்தியை விரைவில் பிரிகிறேன் – உடுமலை கவுசல்யா

Udumalai Gousalya marriage breakup

சமூக ஆர்வலர் என்ற பிம்பத்தில் வலம் வரும் கவுசல்யா கடந்த 2015 ஆம் ஆண்டு மாற்று சாதிப்பிரிவை சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் மூன்று பேர் சேர்ந்த கும்பல் உடுமலை பேருந்து நிலையத்தில் சங்கரையும் கவுசல்யாவையும் சரமாரியாக வெட்டித்தீர்த்தது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அனுதாபத்தில் பல சமூக ஆர்வலர்களின் அபிமானம் கிடைக்கவே,கவுசல்யாவும் தன்னை ஒரு சமூக செயற்பாட்டாளராக மாற்றிக்கொண்டு அவர்களுடன் இணைந்தார். சங்கர் … Read more