தமிழகத்தில் வருகிறது 24 மணிநேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் – தமிழக அரசு

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, தமிழக அரசின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் மருத்துவம் மற்றும் மக்கள்நலவாழ்வு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழக அரசின் அறிவுறுத்தல்களின்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், புறநகர் மருத்துவமனைகள் என யாவற்றையும் கூட்டாக ஒன்றிணைத்து 55 தடுப்பூசி மையங்கள், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டமைக்கப்படும் என்று தமிழக அரசின் வழிகாட்டுதல்களின் படி இயங்கும், … Read more

பொறியியல் சேர்க்கை நிகர மதிப்பெண் கணக்கீட்டில் இருந்து வேதியியல் பிரிவு நீக்கம் – தமிழக அரசு

தமிழக அரசு, பொறியியல் சேர்க்கை குறித்த முக்கியமான அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது பொறியியல் சேர்க்கை நிகர மதிப்பெண்கள் கணிதம்,இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளின் மதிப்பெண்களின் மூலம் கணக்கீடு செய்யப்படும். தற்போது அந்த நிகர மதிப்பெண்ணில் இருந்து வேதியியல் பிரிவு நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொதுவாகவே பொறியியல் சேர்க்கை என்றால் கணிதம்,இயற்பியல்,வேதியியல் பாடப்பிரிவுகளில் ஒரு மாணவர் எடுத்த மதிப்பெண்ணிலிருந்து நிகர மதிப்பெண் கணக்கிட்டு அவர்களை கவுன்சிலிங் மூலம் வரிசைப்படி அழைத்து அந்த … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய 58 பேருக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை சம்மன் அனுப்பி உள்ளது. ஸ்டெர்லைட் எனப்படும் தாமிர உருக்காலை தொடர்ந்து சுற்று சூழலுக்கும் அந்த பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் உடல் நிலைக்கும் கேடு விளைவித்து வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து ஆலையை மூட சொல்லி பல்வேறு தரப்பினர் மனுக்கள் மூலம் பலரிடம் கோரிக்கை விடுத்த போதும் எந்த வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் தான் மே ,2018-இல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான … Read more

முதியவர்களுக்கு வீடு தேடிவரும் தடுப்பூசி – சென்னை மாநகராட்சி

80 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் விருப்பப்படின் அவர்களுக்கு வீடு தேடி வந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் பகுதிகளில் வசிக்கும் 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆசைப்பட்டால் வீடு தேடி வந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவர்கள் முறையாக 044-25384520 மற்றும் 044-46122300 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு … Read more

பள்ளி,கல்லூரிகள் திறக்க அனுமதி – தமிழக அரசு

கொரோனோ காலம் உலகத்திற்கே துன்ப காலம் என்றாலும் ஒரே ஒரு இனத்திற்கு மட்டும் அது இன்ப காலம். அது வேறு எந்த இனமும் அல்ல நம் மாணவர் இனம் தான். இணைய வழிக்கல்வி என்று கடந்த இரண்டு வருடங்களாக புத்தகங்களையே மறந்து இருக்கிறார்கள். தற்போது அவர்களுக்கு தலையில் அம்மிக்கல்லை தூக்கி தலையில் போட்டாற்போல ஒரு கசப்பான செய்தி வந்திருக்கிறது. அது தான் செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12 வகுப்புகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுழற்சி முறையில் வகுப்புகள் … Read more

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுன் கைது!

தான் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பட்டியலின மக்களை சாடும் வகையில் பேசியிருந்த மீராமிதுன்,சில நாட்களாகவே பதுங்கியிருந்த நிலையில் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் மீரா மிதுன் சில வாரங்களுக்கு முன் தான் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பட்டியலின மக்களை மிகவும் அவதூறாக பேசி இருந்தார். இது குறித்து சென்னை எம்.கே.பி.நகர் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். வழக்கு பதிவானது தெரிந்ததுமே தான் தங்கி இருந்த இடத்தை … Read more

தமிழகத்தில் இனி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

1970-இல் கலைஞர் கருணாநிதி அவர்கள் கொண்டு வந்த திட்டமான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் திட்டம் 51 வருடங்களுக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டது. ’அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டத்தை தொடர்ந்து, முறையாக அர்ச்சகருக்கு பயிற்சி பெற்று படித்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தி இருக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் மூலம் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 58 பேருக்கும் கபாலீஸ்வரர் கோவில் திருமணமண்டபத்தில் வைத்து பணி நியமன … Read more

இனி பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி அவசியம் – தமிழக வேளாண் துறை

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை, அமைச்சர் MRK பன்னீர் செல்வம் வாயிலாக தாக்கல் செய்யப்பட்டது. பனை மரங்கள் பற்றிய பிரிவில் அமைச்சர் பன்னீர் செல்வம் கூறுகையில் இனி ரேசன் கடைகளில் பனைவெல்லம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சாலையோரங்களில் இருக்கும் பனை மரங்களை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி அவசியம் என்றும் அறிவித்துள்ளார். மேலும் வேளாண் துறை, வேளாண்மை-உழவர் துறை என்று பெயர் மாற்றப்பட்டு அழைக்கப்படும் என்றும் … Read more

தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள் வேலைத்திட்டமாக மாற்றம் – தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 2021-22 அறிக்கையில் நூறு நாள் வேலைத்திட்டம் பற்றிய பிரிவில், இனி நூறு நாள் வேலைத்திட்டம் நூற்று ஐம்பது நாள் வேலைத்திட்டமாக மாற்றி அமைக்கப்படும் என்றும் 273 ரூபாயாக இருந்த தினசரி கூலி 300 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அறிக்கை விடுக்கப்பட்டது. கிராம மற்றும் குக்கிராமங்களில் நடைபெறும் சிறு குறு பணிகளுக்காக ஒரு குறிப்பிட்ட குழுவை அப்பணிதன் கீழ் அமைத்து சீரமைப்பதற்காக தொடங்கப்பட்ட ஒரு சீரிய திட்டமே இந்த நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம். … Read more

பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு – தமிழக பட்ஜெட்

சென்னை கலைவாணர் அரங்கில் காலை முதலே தொடங்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் பெட்ரோலியம் தொடர்பான அறிவிப்புகளின் கீழ், நடுத்தர ஏழை மக்களை கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை மீதான வரியை மூன்று ரூபாய் குறைப்பதாக அறிவித்துள்ளார். இதனால் ஆண்டுக்கு ரூபாய் 1160 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் அரசு சமாளித்துக்கொள்ளும் என்று அறிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே நூறு ரூபாய்க்கும் அதிகமாக … Read more