தமிழக காவல் துறையில் 14,317 காலி பணியிடங்கள்

தமிழக வரலாற்றில் இன்று முதல் முறையாக காகிதமில்லா முறையில் பட்ஜெட், தமிழக நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் காவல் பணிகள் பிரிவுகள் குறித்த அறிக்கையில் தமிழக காவல் துறையில் 14,317 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் விரைவில் அந்த காலி பணியிடங்கள் சீரூடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பபடும் என்றும் அறிவித்து இருக்கிறார். நீண்ட கொரோனோ இடைவெளியில் எந்த வித அரசு பணியிடங்களுக்கும் தேர்வுகள் நடக்காத நிலையில் தேர்வை எதிர் நோக்கி … Read more

இனி அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் தமிழ் ஆட்சி மொழி – தமிழக அரசு

தலைமைச்செயலகம் முதல் அனைத்து தமிழக அரசுத்துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் என்று தமிழக நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலில் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டபேரவையில் முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலின் போது மொழி மற்றும் மொழி சம்மந்தமான தொல்லியல் ஆய்வுகள் குறித்த அறிக்கையில் அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சிக்கு என்று 80.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தொல்லியல் ஆய்விற்கு ரூபாய் 5 கோடி … Read more

1 யூனிட் மின்சாரத்திற்கு 2.36 ரூபாய் இழப்பு, 1 கி.மீ பேருந்து பயணத்திற்கு 59.15 ரூபாய் இழப்பு – வெள்ளை அறிக்கை

தமிழகத்தில் அரசுப்பேருந்து 1 கிலோ மீட்டர் தூரம் ஓடினால் 59.15 ரூபாய், போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படுவதாகவும், மின்சாரத்துறையில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு தலா 2.36 ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து இன்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலமாக வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர், தமிழகத்தில் மின்சாரத்துறைக்கு ரூபாய் இரண்டு … Read more

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூபாய் 2,63,976 கடன் – வெள்ளை அறிக்கை

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மேலும், ரூபாய் 2,63,976 கடன் இருப்பதாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விடுத்த வெள்ளை அறிக்கையில்  தெரிவித்துள்ளார். இதற்கு முந்தைய அரசு மூல தன பொருள்களையும் திட்டங்களையும் உருவாக்குவதற்கு ஆக்கிய செலவை விட அரசை நடத்துவதற்கு உபயோகித்த செலவே அதிகம். அதுவே இத்தகைய நிதிச்சுமைக்கு தமிழகத்தை ஆளாக்கியதாக நிதி அமைச்சர் இதற்கு முந்தைய அரசை சாடியுள்ளார். இதற்கு முந்தைய அரசு மாநிலத்தின் ஒட்டு மொத்த உற்பத்திக்கு ஏற்ப வரியை வசூலிக்காமல் விட்டதாலும், … Read more

தன் மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி பப்ஜி மதன் உயர் நீதிமன்றத்தில் மனு

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டிற்கென ஒரு யூடியூப் சேனல் உருவாக்கி அதில் கொடிகட்டி பறந்தவர் பப்ஜி மதன். தொடர்ந்து தான் வெளியிடும் வீடியோக்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதோடு மட்டுமில்லாமல் பெண்களை இழிவான வார்த்தைகளோடு பேசியும் வந்தார். இதனால் நீதிமன்றம் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டது. கடந்த ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்ட மதன் தற்போது தன் மீது சுமத்தப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றை … Read more

இரண்டு நாளில் 13,247 பேரை சென்றடைந்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

வயது முதிர்வின் காரணமாக தங்களுடைய அத்தியாவசிய மருத்துவ தேவைக்காக மருத்துவமனையை நாட முடியாமல் பலரும் இன்று வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் பயன் பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் கொண்டு வரப்பட்ட திட்டமான ‘ மக்களைத் தேடி மருத்துவம் ‘ இரண்டு நாட்களுக்குள் 13,247 பேரை சென்றடைந்திருக்கிறது என்று மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனோ சூழல்  மற்றும் வயது முதிர்வின் காரணமாக நடக்க முடியாமல் எத்தனையோ சர்க்கரை நோயாளிகளும் இரத்த அழுத்த நோயாளிகளும் … Read more

தமிழகத்தில் செப்டம்பர் 1-இல் பள்ளிகள் திறப்பா…?

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் 50 சதவிகிதம் மாணவர்களுடன் பள்ளிகள் இயங்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-இல் இருந்து ஒன்பது முதல் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் முறையான கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை எல்லா பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் 50 சதவிகித மாணவர்களுடன் மட்டுமே பள்ளிகள் இயங்க வேண்டும் என்றும் தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. “ இரண்டு வருடங்கள் … Read more

தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் ஒலித்த மந்திரங்கள்!

தமிழக அரசு கொண்டு வந்த ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இந்து அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் 47 கோயில்களில் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி சமஸ்கிருத மந்திரங்கள் மட்டுமே ஒலித்த இராஜ இராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலின் கருவறைக்குள் இன்று முதல், தமிழில் மந்திரங்கள் ஒலித்தன. அர்ச்சனை என்று நீட்டியவுடன் புரியாத மொழியில் அர்ச்சகர் செய்யும் மந்திரங்கள் எல்லாம் இனி தமிழில் ஒலிக்கும் என்பதால் பக்தர்களிடையே … Read more

மக்களைத்தேடி மருத்துவம் இன்று முதல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

’மக்களைத்தேடி மருத்துவம்’ திட்டம் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சகம் மூலம் இன்று முதல் தமிழகம் முழுக்க ஏழு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்படுகிறது. தொற்றாத நோய்களான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மாத்திரை மருந்துகளுக்காக மருத்துவமனைகளைத் தேடி தொடர்ந்து அலைய முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நோயாளிகளுக்கு பயனளிக்கும் பொருட்டு ’மக்களைத்தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக கோவை,சென்னை,சேலம்,மதுரை,தஞ்சாவூர்,திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஏழு மாவட்டங்களில் … Read more

தன் மேல் வைத்த கிண்டல், கேலிகளை சாதனையாக மாற்றி காவல் ஆய்வாளர் ஆகிறார் திருநங்கை சிவன்யா

பொதுவாகவே திருநங்கை என்றாலே அவர்கள் மீது பல்வேறு தரப்பினர் கேலி கிண்டல்களை புரிந்து அவர்களை அவமானப்படுத்துவது வழக்கமாகி வருகிறது. அவ்வாறு தன் மீது வைக்கப்பட்ட கேலி, கிண்டல்களை எல்லாம் சாதனைகளாக மாற்றி இருக்கிறார் திருவண்ணாமலையை சேர்ந்த திருநங்கை சிவன்யா. திருவண்ணாமலை மாவட்டம் பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்த திருநங்கை சிவன்யா(30), சமீபத்தில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் ஆணையம் நடத்திய காவல் ஆய்வாளர் தேர்வின் எல்லா படிநிலைகளிலும் வெற்றி பெற்றிருந்தார். இதன் மூலம் தலைமைச்செயலகத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பணிநியமன … Read more