கேரளத்திலிருந்து வருபவர்களுக்கு RT-PCR பரிசோதனை கட்டாயம் – தமிழக அரசு

தொடர்ந்து கேரளத்தில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக கேரளத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு RT-PCR சோதனையை கட்டாயப்படுத்தி உள்ளது தமிழக அரசு. சில நாட்களாகவே கேரளத்தில் அதிகரித்து வரும் கொரோனோ தொற்று காரணமாக தமிழக-கேரள மாநில எல்லைகளில் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைவருக்கும் RT-PCR பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது ரயில் வழியாக விமானம் வழியாக மாநிலத்திற்குள் உள்நுழைபவர்களுக்கும் பொருந்தும் என்றும் இரண்டு தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு இந்த பரிசோதனை அவசியமில்லை என்பதையும் மாநில … Read more

இனி காவலர்களுக்கு வாராந்திர ஓய்வு – டி.ஜி.பி சைலேந்திர பாபு

பணிச்சுமை, மன அழுத்தம் ஆதியவற்றை இலகுவாக்கவும், உடல் நலனை பேணிக்கொள்ளவும் காவலர்களுக்கு வாராந்திர ஓய்வை கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு. தொடர்ந்து குற்றவாளிகளோடும் மன அழுத்தங்களோடும் ஓய்வில்லாமல் போராடிக்கொண்டு குடும்பங்களைக்கூட கவனித்துக்கொள்ள முடியாமல் பணியின் பிடியிலேயே இருக்கும் காவலர்கள் இனி வாரம் ஒரு முறை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார் சைலேந்திர பாபு. பிறந்தநாள், திருமண நிகழ்வுகள் ஆகியவற்றிற்கும் விடுமுறை கேட்பின் கட்டாய விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு. இத்தோடு வாராந்திரவிடுப்பு எடுக்க … Read more