தலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் பஞ்சஷேர் மாகாணம்!

அமெரிக்க படைகள் வெளியேறிய ஏழு நாட்களுக்குள் தலிபான்கள் வரிந்து கட்டி அனைத்து மாகாணத்தையும் கைப்பற்றிய போதும் ஒரு மாகாணம் மட்டும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறது. அது தான் பஞ்சஷேர் மாகாணம். ஆப்கானிஸ்தானின் அனைத்து மாகாணங்களும் தலிபான்களுக்கு அடிபணிந்து விட்ட நிலையில் பஞ்சஷேர் எனப்படும் ஒரு மாகாணம் மட்டும் தலிபான்களை சிங்கம் போல எதிர்த்து நிற்கிறது. தன் பேரிலேயே ஐந்து சிங்கங்களைக் கொண்டிருக்கும் பஞ்சஷேர் மாகாணம் இதுவரை எந்த போருக்கும் அடிபணிந்தது இல்லை. 70,80 களில் சோவியத் … Read more

20 பேருக்கும் மேலானவர்களை காவு வாங்கிய ஆப்கானிஸ்தான் விமான நிலையம்

அமெரிக்க படைகள் வெளியேறிய ஒரு வாரத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதும் கைப்பற்றி விட்டனர். அதிபர் அஸ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் மக்களும் தொடர்ந்து ஆப்கனை விட்டு வெளியேறும் நோக்கோடு விமான நிலையத்திலேயே தங்கி போராடி வருகின்றனர். உயிரை கையில் பிடித்துக்கொண்டு எப்படியாவது நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என்ற நோக்கோடு விமான நிலையத்தின் நெரிசல்களிலும், பாதுகாப்பின்றி விமானத்தின் இறக்கைகளிலும் இதர பாகங்களிலும் அமர்ந்து கொண்டு பாதுகாப்பின்றி பயணம் செய்தவர்கள் என்று 20-க்கும் மேற்பட்டவர்களை காவு … Read more

சிறுபான்மை இனத்தவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கும் தலிபான்கள்!

அமெரிக்க படைகள் வெளியேறிய ஏழு நாட்களுக்குள் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முண்டாரக்ட் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றிய போது ஷியா பிரிவைச் சேர்ந்த சிறுபான்மையினர் 9 பேரை படுகொலை செய்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. கடந்த 2001-இல் அல்கொய்தா அமைப்பு இரட்டை கோபுர தாக்குதலை அமெரிக்காவில் நிகழ்த்தி இருந்திருந்தது. அன்றைய தலிபான்கள் அதை ஆதரித்தும் அல்கொய்தா அமைப்பின் தலைவர் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தும் வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா தலிபான்கள் … Read more

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள்!

சில நாட்களாகவே ஆப்கானிஸ்தானில் ஆப்கன் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினத்தில் ஆப்கனின் தலைநகர் காபூலை தலிபான்கள் நெருங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றிவிட்டதாக தலிபான் செய்தி தளம் தனது இணையதளத்தில் அறிவித்து வருகிறது. கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு தலிபான்களுக்கு எதிராக போராடி வந்த அமெரிக்க படை ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் … Read more

இலங்கையை புரட்டி போடும் டெல்டா வகை கொரோனோ வைரஸ்!

தொடர்ந்து சில நாட்களாகவே இலங்கையில் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாதிப்புக்குள்ளானவர்களில் 75 சதவிகிதம் பேருக்கு டெல்டாவகை கொரோ வைரஸ் தொற்று இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு 160 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 5,935-ஆக உயர்ந்துள்ள நிலையில், வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனோ வைரஸ் தொடர்ந்து மாகாணங்களுள் பெருக்கெடுக்க … Read more

ஆப்கானிஸ்தான் தலைநகரை நெருங்கிய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு மாகாணங்களாய் தலிபான்கள் கைப்பற்றி வரும் நிலையில் தற்போது தலைநகர் காபூலை குறி வைத்து நகர்ந்து வருவதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே ஆப்கன் படைகளின் அசைக்க முடியாத நகராக கருதப்படும் மசார்-இ-ஷெரீப் மற்றும் ஜலாலாபாத் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தற்போது தலைநகர் காபூலை கைப்பற்றும் முனைப்பில் இறங்கி உள்ளனர். ஆப்கன் முழுவதையும் கைப்பற்றும் நோக்கில் தொடர்ந்து தலிபான்கள் முன்னேறி வரும் நிலையில், ஆப்கன் படைகள் எதிர்த்து போராடினாலும் தாக்குப்பிடிக்க முடியாது நிலைகுலைந்த … Read more

ரஷ்யாவில் வலுமை பெறுகிறது டெல்டா வகை கொரோனோ வைரஸ்!

ரஷ்யாவில் கடந்த ஒரு நாளில் மற்றும் புதியதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 22,277-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தொற்று பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 815 ஆக உள்ளது. தொடர்ந்து மூன்று நாளாக தினசரி தொற்று பலி ரஷ்யாவில் உயர்ந்த வண்ணமாகவே உள்ளது. இதன் மூலம் ரஷ்யாவில் டெல்டா வகை கொரோனோ வலுமையடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. மாஸ்கோவில் மட்டும் அதிகபட்சமாக 2,529 பேருக்கு தொற்று புதியதாக பதிவாகி உள்ளதாக … Read more

அல்ஜீரியாவில் காட்டுத் தீ – 28 ராணுவ வீரர்கள் உட்பட 69 பேர் பலி

அல்ஜீரியாவின் கைபல் பிராந்தியந்தில் தொடங்கிய காட்டுத்தீ தொடர்ந்து மூன்றாவது நாளாக எரிந்து பல்வேறு இடத்திற்கும் பரவி வருகிறது. பல்லாயிரக்கணக்கோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வரும் நிலையில் 28 ராணுவ வீரர்கள் உட்பட 69 பேர் அந்நாட்டில் பலியாகி உள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்கு காட்டுத்தீ பரவி வருவதால் பல்லாயிரக்கணக்கோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் அமற்றப்பட்டு வருகின்றனர். வெப்ப நிலையும் 50 டிகிரி செல்சியசை அல்ஜீரியாவில் தொட்டுள்ளதால் காட்டுத்தீயை அணைப்பதில் … Read more

ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனோவிற்கு 808 பேர் பலி – இது தினசரி பலியில் புதிய உச்சம்

ரஷ்யாவில் தினசரி கொரோனோ பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 808 பேர் கொரோனோவிற்கு பலி ஆகி உள்ளதாக ரஷ்யன் பெடரல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,68,049 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே அதிகபட்ச இறப்பை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது ரஷ்யா. ரஷ்ய ஊடகங்கள் கொரோனோ இறப்பை பற்றி தெரிவிக்கையில் ரஷ்யாவில் ஒட்டு மொத்த இறப்பு மூன்று லட்சத்தை தாண்டி இருக்கும் என்றும் … Read more

ஆப்கானிஸ்தானில் அமைதி வேண்டும் – உலக தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்த கிரிக்கெட் வீரர் ராஷித் கான்

ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளை தலிபான்கள் அரசிடம் இருந்து கைப்பற்றி வரும் நிலையில் அங்கு அமைதி சீர்குலைந்து பொது மக்கள் கொல்லப்படும் நிலையும் நிலவி வருகிறது. இதனைக்குறித்து ஆப்கன் கிரிக்கெட் வீரர் ராஷித்கான் தனது ட்விட்டரில் “ உலக தலைவர்களே எங்களுக்கு அமைதி வேண்டும் இங்கு எங்கள் உரிமை பறிக்கப்பட்டு நிலம் பறிக்கப்படு உடைமைகள் பறிக்கப்பட்டு கொல்லப்படுகிறோம் எங்களை காப்பாற்றுங்கள் “ என்று கோரிக்கை விடுத்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் தங்கி தலிபான்களுக்கு எதிராக போர் புரிந்து … Read more