’அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Aranmanai 3 Releasing Date Announced

ராகவா லாரன்ஸ்சின் ’காஞ்சனா’ சீரிஸ் போல, தற்போது சுந்தர் சி-யும் ’அரண்மனை’ படத்தின் மூன்றாவது பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தின் முழுமையான வேலைகள் முடிந்திருக்கும் நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. ’அவ்னி சினிமேக்ஸ்’ தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், சுந்தர் சி, ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஜெர்மியா, யோகி பாபு, குஷ்பு மற்றும் பலர் நடிக்கும் அரண்மனை 3 படத்தின் தியரிட்டிக்கல் ரிலீஸ் உரிமையை பெற்றிருக்கிறது உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் … Read more

பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியனின் புதிய படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Raame Aaandalum Raavane Aaandalum Trailer Released In Net

பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி மூலம் பெரிதும் புகழ்பெற்ற ரம்யா பாண்டியன் நடித்திருக்கும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பில், இயக்குநர் அரிசில் மூர்த்தி அவர்களின் இயக்கத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் மற்றும் பலர் நடிக்கும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் வாங்கியிருக்கும் நிலையில் … Read more

இந்தியாவில் 75 கோடியைக் கடந்துள்ள தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached 75 Crores

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 75 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் அறிவித்துள்ளது. தொடர்ந்து அரசு சார்பில் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் விளைவால் மக்கள் தற்போது தாமாகவே முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இதன் வாயிலாகவே இந்தியாவில் தற்போது தடுப்பூசி உபயோகம் 75 கோடியைக் கடந்துள்ளது. நாள் ஒன்றிற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் விகிதம் இந்தியாவில் 80.6 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 133 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட தேசத்தில் தடுப்பூசி … Read more

பேரறிஞர் அண்ணா அவர்களின் 113 ஆவது பிறந்த தினம் இன்று!

Anna Durai With Karunanidhi

ஆகச்சிறந்த பேச்சாளர், தீர அரசியல் மேதை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர்,திராவிடக் கழகத்தின் தலை சிறந்த தலைவர் மற்றும் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற மூன்றினை தாரக மந்திரமாகக் கொண்டு நன்னெறியுடன் செயல்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் 113-ஆவது பிறந்ததினம் இன்று! தமிழகத்தில் ‘அண்ணா’ என்கிற பெயரை அவ்வளவு எளிதில் யாராலும் மறைத்துவிடலாகாது. அவர் செய்த பணிகள் அவ்வளவு. இந்தியா குடியரசு நாடாக ஆனதிற்கு பிறகு காங்கிரஸ் தமிழகத்தில் வேரூன்றி நின்றது. அந்த வேரை அறுத்து எறிந்து திராவிட கழகத்தின் ஆட்சியை … Read more

இன்று இந்தியாவில் ‘தேசிய பொறியாளர்கள் தினம்’!

National Engineers Day In India

பொறியாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15 இந்தியாவில் தேசிய பொறியாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த சிவில் இன்ஜினியராக அறியப்படும் பாரத ரத்னா மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரயா அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையிலேயே ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15, இந்தியாவில் தேசிய பொறியாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.உலகளாவிய அளவிலான பொறியாளர் தினம் மார்ச் 4 அன்று அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுக்க இன்ஜினியர்கள் அவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்கிறார்களோ அதே துறையில் … Read more

விஜய் ஆன்டனியின் ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay Antony In Kodiyil Oruvan Release Date Announced

விஜய் ஆன்டனியின் ’கோடியில் ஒருவன்’ திரைப்படத்த்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது அப்படத்தின் படக்குழு. ’செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேசனல்’ TD ராஜா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, ஆத்மிகா, ராமச்சந்திர ராஜூ மற்றும் பலர் நடிக்கும் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் செப்டம்பர் 17 முதல் உலகமெங்கும் ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நான், சலீம், சைத்தான், பிச்சைக்காரன் போன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று அதில் அசாதாரணமாய் வெற்றியும் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 27,491 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 15 09 2021

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 27,491 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 281-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,43,528 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,982 ஆக உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதமே அதிகமாக இருக்கிறது. தாமாக முன்வந்து தடுப்பூசி … Read more

நாகா சைதன்யா நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Naga Saithanya Love Story Trailer Released In Net

நாகா சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் ’லவ் ஸ்டோரி’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி உள்ளது. நாராயண் தாஸ் மற்றும் கோகன் ராவ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சேகர் கம்முளா அவர்களின் இயக்கத்தில் நாகா சைதன்யா மற்றும் சாய்பல்லவி இணைந்து நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெயிலரை உற்று நோக்குகையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் நடனத்தின் மூலம் ஒன்றிணைகிறார்கள். அவர்களுக்குள் காதல் … Read more

ரெஜினா கேசன்ட்ராவின் ‘சூர்ப்பனகை’ படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Regina Casandra Soorpanagai Trailer Released In Net

ரெஜினா கேசன்ட்ரா அவர்கள் லீடிங் ரோலில் நடிக்கும் ’சூர்ப்பனகை’ படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிடப்பட்டது. ’ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ்’ ராஜ் சேகர் வர்மா அவர்களின் தயாரிப்பில், கார்த்திக் ராஜா இயக்கத்தில் ரெஜினா கேசன்ட்ரா, அக்‌ஷாரா கவுடா, மன்சூர் அலிகான், மைக்கேல், ரவி ராஜா, கவுசிக் யோகி மற்றும் பலர் நடிக்கும் ‘சூர்ப்பனகை’ படத்தில் ட்ரெயிலர் படக்குழுவினால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிடப்பட்டது. ட்ரெயிலரைப் பார்த்தவரையிலும் கொலை, பேய், இன்வெஸ்டிகேசன், ப்ளாஸ்பேக் என்ற நான்கு டெம்ப்ளேட்டுகளை மட்டுமே … Read more

தன் யார்க்கர்களுக்கு நிரந்தரமாக ஓய்வு கொடுத்த லசித் மலிங்கா!

Lasith Malinga Retired From All Form Of Cricket

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலர் மற்றும் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா அனைத்து தரப்பட்ட கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்த லசித் மலிங்கா, தற்போது டி20 பார்மட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனது இடத்தை நிரப்ப அணியில் ஒரு இளம் பவுலரை தேட வேண்டிய சூழல் உருவாகி இருப்பதால், இந்த சமயம் ஓய்வு எடுத்துக்கொள்வதை தாமே விரும்பி … Read more