நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ வெளியாகும் தேதி அறிவிப்பு!
Etharkkum Thunindhavan Releasing Date Announced
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், வினய் ராஜ், சத்யராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம், மார்ச் 10 அன்று உலகளாவிய அளவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
“ வலைதளத்தில் வெளியாகுமோ என்று கவலையில் இருந்த ரசிகர்களுக்கு, திரையரங்கில் வெளியிட்டு காட்டுகிறோம் என்று தேதியை அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது படக்குழு “