7 வருடங்கள் ஆனாலும் கூட இன்னமும் ஆறா காயங்களுடன் ரக்‌ஷித் ஷெட்டி!

Rashmika And Rakshit Shetty The Saddest Love Story Idamporul

Rashmika And Rakshit Shetty The Saddest Love Story Idamporul

ரக்‌ஷித் ஷெட்டி – ராஷ்மிகா இந்த காதல் ஜோடி பிரிந்து ஏழு வருடங்கள் ஆனாலும் கூட, இன்னமும் ரக்‌ஷித் ஷெட்டி அதில் இருந்து மீளவில்லை என்பது உண்மை தான் என்கின்றனர் ரக்‌ஷித் ஷெட்டியோடு நெருங்கி இருக்கும் ஒரு சிலர்.

2016 ஆம் ஆண்டு, கிரிக் பார்ட்டி என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா அறிமுகம் ஆகிறார், அந்த படத்தின் ஹீரோ ரக்‌ஷித் ஷெட்டி, இருவருக்கும் படப்பிடிப்பு தளத்திலேயே காதல் மலர்கிறது, அதற்கு பின்னர் இருவரும் பொதுவெளியில் ஒன்றாக தென்பட்டதெல்லாம் பல மீடியாக்களில் கிசு கிசுவாக எழுதப்பட்டது. ஒரு கட்டத்திற்கு பின் இருவரும் காதலை ஒப்புக் கொண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் நிச்சயிக்க முற்பட்டனர்.

2017 ஆம் ஆண்டு ரக்‌ஷித் ஷெட்டி, ராஷ்மிகா இருவருக்கும் குடும்பத்தார்களின் சம்மதத்துடன், பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. அப்போது ராஷ்மிகாவிற்கு வயது 21, ரக்‌ஷித் ஷெட்டிக்கு 34, அதற்கு பின்னரும் கூட இருவரும் பல மேடைகளில் ஒன்றாகவே தென்பட்டனர். இந்த நிலையில் ஒரு பக்கம் ராஷ்மிகாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இன்னொரு பக்கம் ரக்‌ஷித் ஷெட்டி – ராஷ்மிகாவின் காதல் முறிந்தது.

இருவரும் மியூச்சுவலாக தான் பிரிந்தாலும் கூட பிரிவிற்கு என்ன தான் காரணம் என்று இருவருமே அறிவிக்கவில்லை, ஆனாலும் கூட ராஷ்மிகா தான் இந்த காதல் முறிவிற்கு 70 சதவிகிதம் காரணம் என்று கூறப்பட்டது. இந்த முறிவு ரக்‌ஷித் ஷெட்டியின் மனதை ரணமாக்க சமூக வலைதளங்களில் இருந்தும், சினிமா துறையில் இருந்தும் கிட்ட தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் ஓய்வு எடுத்துக் கொண்டார். ஆனால் இந்த இரண்டு வருடங்களுக்குள் ராஷ்மிகா பான் இந்தியா ஸ்டார் ஆக உருவெடுத்து விட்டார். அதே சமயத்தில் ரக்‌ஷித்தின் நிலை ரசிகர்களுக்கு என்னவென்றே தெரியாமல் போனது.

கிட்டதட்ட இரண்டரை வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ரக்‌ஷித் ஷெட்டி சினிமாவிற்குள் காலடி எடுத்து வைக்கிறார். இந்திய திரையுலகமே திரும்பி பார்க்கும் வகையில் 777 சார்லி என்றதொரு மிகப்பெரிய ஹிட்டைக் கொடுக்கிறார். தான் மீண்டு வந்ததையும், தன்னால் இப்போதும் கூட வெற்றியை கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்கிறார். இன்னமுமே ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளுக்கும், படங்களுக்கும் பொதுவெளியில் வாழ்த்து தெரிவித்து தான் வருகிறார். பிரிந்தாலும் கூட தன் முன்னாள் காதல் ஆன ராஷ்மிகாவின் வெற்றியை தன் வெற்றி போல இன்னமும் கொண்டாடி தான் தீர்க்கிறார். அது தானே காதலாகவும் இருக்க முடியும்.

” இருந்தாலும் இன்னொரு பக்கம் ரக்‌ஷித் குறித்து ராஷ்மிகாவிடம் கேட்கும் போது அந்த கேள்வியையே தவிர்த்து விடுகிறாராம், இதில் இருந்தே தெரிகிறது பிரிவிற்கு யார் காரணமாக இருந்து இருப்பார் என்று, ராஷ்மிகா இன்று எவ்வளவு பெரிய ஸ்டார் ஆகவும் இருந்து விட்டு போகட்டும், தன்னை உதறித் தள்ளியவரின் வெற்றியை கூட கொண்டாடி தீர்க்கும் ரக்‌ஷித் தான் ஒரு சக மனிதனுக்கு மிகப்பெரிய ஸ்டார் “

About Author