மார்க் ஆண்டனி சென்சாருக்கு லஞ்சம் கேட்டவர்கள் மீது வழக்கு பதிவு!

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஹிந்தி சென்சாருக்கு லஞ்சம் கேட்டவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு.

நடிகர் விஷால் அவர்கள் சில தினங்களுக்கு முன் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பை சென்சார் செய்ய ஒரு சிலர் லஞ்சம் கேட்டதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். வீடியோ வைரலாகவே பிரச்சினை சிபிஐயிடம் சென்றது. இதனை விசாரித்த சிபிஐ, இதனுடன் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் 3 பேரின் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறது. மேலும் இதில் அதிகாரிகள் ஏதும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா எனவும் விசாரித்து வருகின்றது.

“ இது வழக்கமாகவே சென்சாரில் நடப்பதாக ஒரு சில தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். லஞ்சம் கொடுக்காவிட்டால் படத்திற்கு கேட்ட சர்ட்டிபிகேசனை சென்சார் போர்டு கொடுக்க மறுப்பதாகவும் தயாரிப்பாளர்கள் தற்போது பலரும் முன் வந்து சொல்கின்றனர் “

About Author