16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சென்னை வாலிபர்!
16 years villupuram girl harrased by chennai pani poori seller
16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக சென்னை வாலிபர் ஒருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வீட்டில் கோபித்துக் கொண்டு சென்னை சென்றதாக கூறப்படுகிறது. சென்னை மெரினாவில் பானி பூரி விற்பனையாளர் ஆறுமுகம் (22) அந்த சிறுமியை பேச்சால் மயக்கி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியாக தெரிய வந்த நிலையில் ஆறுமுகம் கண்டறியப்பட்டு போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
“ சமீப காலமாக குழந்தைகள் மீது புணர்த்தப்படும் வன்புணர்வு தேசத்தில் அதிகரித்துக்கொண்டு வருகிறது. மரணமே தண்டனையாக கொடுக்கப்பட்டாலும் இப்படி தான் இருப்போம் எனப்படும் குற்றவாளிகளை என்ன தண்டனை கொடுத்து திருத்துவது என்றே தெரியவில்லை “