மும்பை பெண் கொடூரமாக கொலை! – பிறப்புறுப்பில் இரும்பு கம்பியைப் புகுத்தி தாக்கி பயங்கரம்

Mumbai Women Brutally Raped And Killed

Mumbai Women Brutally Raped And Killed

மும்பை சாகி நாகா பகுதியைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவர் டெம்போ ஒன்றிற்குள் இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் இருந்த காவலாளி ஒருவர் இது குறித்து போலிசிடம் தகவல் தெரிவிக்கவே, விரைந்து வந்த போலிஸ் அந்த பெண்ணை கைப்பற்றி அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அந்த பெண்ணின் உடலை ஆராய்ந்ததில், அந்த பெண்ணின் பிறப்புறுப்புகள் இரும்பு கம்பியைப் புகுத்தி சிதைக்கப்பட்டிருப்பதாகவும், நீண்ட நேரம் அப்பெண் பாலியல் துன்புறுத்துதல்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவதாக மருத்துவர்கள் தங்களது மருத்துவ அறிவிக்கையில் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு நடைபெற்ற போலிஸ் விசாரணையில் ஒரு சில சிசிடிவி தடயங்கள் சிக்கியதாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த பெண் அந்த டெம்போவில் வைத்து சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டது அந்த சிசிடிவியில் பதிவாகி இருப்பதாகவும், வழக்கில் சம்மந்தப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க மோகன் என்பவர் காவல் துறையினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மும்பை போலிஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். இது போக பாலியல் வன்புணர்வு, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

” கடந்த 2012-இல் நடந்த நிர்பயா சம்பவம் போலவே, தற்போதும் கொடூரமாக இப்படி ஒரு செயல் மும்பையில் அரங்கேறி இருப்பது நாட்டையே உலுக்குவதாக உள்ளது. உயிர்பயம் இல்லாத இந்த கொடூர மிருகங்களை தூக்கிலிட்டாலும் ஒரு ப்ரோஜனமும் இல்லை என்பதே உண்மை “

About Author