போதைப் பொருள் வழக்கில் சிக்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன்!

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன் மிதக்கும் கப்பலில், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பாலிவுட் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

மும்பையின் உல்லாசக்கப்பலாக இரண்டு வாரங்களுக்கு முன் தான் அறிமுகமான ‘எம்பிரஸ்’ கப்பலில் போதைப்பொருள் உபயோகம் நடப்பதாக கிடைத்த தகவலின் படி ஆய்வாளர்கள் அந்த கப்பலை சோதனைக்குட்படுத்தினர். சோதனையில் கொகைன், ஹஷிஷ், எம்.டிஎம்.ஏ உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருள்களைன் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு வந்த ரகசிய தகவலின் படி, மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குநர் சமீர் வான்கடே அவர்களின் தலைமையில் நடைபெற்ற சோதனையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

“ உல்லாசக் கப்பலில் போதைப்பொருளுடன் சிக்கியுள்ள ஷாருக்கானின் மகன் ஆர்யனால் பாலிவுட் களமே அதிர்ச்சியில் உள்ளது “

About Author