சென்னை நகரத்தில் பல்வேறு பகுதிகளில் முக்கியமாக, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், அடையாறு போன்ற பகுதிகளில் லேசான நில அதிர்வு இன்று 12.35 மணி அளவில் உணரப்பட்டதாக பலர் தெரிவிக்கின்றனர்.
இதைப்பற்றி மக்களும் பரவலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் லேசான அதிர்வு. இதுகுறித்த வந்த அதிகாரப்பூர்வ தகவல்கள்படி இந்த நில அதிர்வு 5.1 ரிக்டர் அளவு எனக்கூறப்படுகிறது.