கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 23,932 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In India 03 10 2021
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 23,392 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 233 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது இந்தியாவில் 4,48,605 ஆக உயர்ந்து உள்ளது.
இது போக நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 25,480 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 90 கோடி என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறது. தடுப்பூசிக்கு தகுதியான அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்றைய தினத்தில் மட்டும் 1,578 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றினால் உண்டான பலி எண்ணிக்கையும் தமிழகத்தில் 24 ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,627 ஆக உயர்ந்து உள்ளது.
“ பரவுவது கொரோனோவாக இருந்தாலும் இங்கு பரப்புகின்ற கருப்பொருளாக மனிதர்களாகிய நாமே இருக்கிறோம், நாம் கட்டுப்பாடுகளை மீறுகின்ற போது அது நம்மை பரவலுக்கு உபயோகப்படுத்திக் கொள்கிறது. ஆதலால் தொடர்ந்து கொரோனோ கட்டுப்பாடுகளை முறையாக கையாளுங்கள். தொடர்ந்து இந்த கொரோனோவிற்கு எதிராக போரிடுங்கள் “