கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 22,618 பேருக்கு புதிய தொற்று!
Corono Updates In India 07 10 2021
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,618 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் கொரோனோ தொற்றுக்கு 315 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தேசத்தில் 4,49,883 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 24,628 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 92 கோடி என்ற இமாலய இலக்கை எட்டி இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 69 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர்.
தானாகவே முன்வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை தேசத்தில் வெகுவாக உயர்ந்து வருகிறது.
“ நாம் நம்மால் ஆகின்ற பரவலைத் தடுத்திடுவோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நாம் முன்னுதாரணமாய் இருந்திடுவோம், முறையாக தடுப்பூசி எடுத்துக்கொண்டு, கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளையும் முறையாக கையாண்டிடுவோம் “