கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 24,148 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In India 10 09 2021
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,148 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய ஒரே நாளில் இந்தியாவில் தொற்றுக்கு 264 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,42,046-ஆக உயர்ந்துள்ளது.
இது போக நேற்று ஒரு நாளில் இந்தியாவில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 24,109-ஆக உள்ளது. இதற்கு முந்தைய நாள் இருந்த தொற்றைக்காட்டிலும் நேற்றைய தொற்று எண்ணிக்கை பரவலாக குறைந்துள்ளது. தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 73 கோடியை கடந்துள்ளது.
உலகளாவிய அளவில் எடுத்துக்கொண்டால் நேற்று ஒரு நாளில் 4,92,011 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு உலகம் முழுக்க பலியானவர்களின் எண்ணிக்கை 7,481-ஆக உள்ளது. இதன் மூலம் உலகம் முழுக்க தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்தை கடந்துள்ளது.
” இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பித்த தொற்று இன்றளவும் ஓய்ந்தபாடில்லை, இந்த நிலையை இப்படியே கட்டுக்குள் வைத்திருக்காமல் உதாசினப்படுத்தினால் இன்னும் பல வருடங்களுக்கு நாம் கொரோனோவுடன் தான் வாழ வேண்டி வரும். ஆகவே இயல்பு நிலையை சிறிது காலத்திற்கு மறந்துவிட்டு சமூக பொறுப்புணர்வுடன் நமக்கு விதித்த கொரோனோ கட்டுப்பாடுகளை மீறாமல் கடைப்பிடித்து வாழ்ந்திடுவோம் “