கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 35,367 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In India 18 09 2021
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 35,367 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் தொற்றிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 285 ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,44,563-ஆக உயர்ந்துள்ளது.
இது போக நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 33,850 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று தான் இந்தியாவில் மீட்பு விகிதத்தை விட பாதிப்பு விகிதம் அதிகமாய் காணப்பட்டது. தடுப்பூசி உபயோகத்தை பொறுத்த வரை இந்தியாவில் அது 78 கோடியை நெருங்கி உள்ளது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் அதிகபட்சமாக 2.28 கோடி பேர் இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
உலகளாவிய அளவில் எடுத்துக்கொண்டால் நேற்று ஒரு நாளில் மட்டும் 5,77,255 பேருக்கு புதிய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் உலக அளவில் தொற்றுக்கு 8,693 பேர் பலியாகி உள்ளனர். இதன் ஒட்டு மொத்த உலகளாவிய பலி எண்ணிக்கை 46.78 லட்சமாக உயர்ந்துள்ளது.
“ அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு சிறிய சிறிய நாடுகளை எல்லாம் மிரட்டிக்கொண்டிருக்கும் இந்த வல்லரசு நாடுகளைக் கூட, இந்த சின்னஞ் சிறிய கிருமி மிரட்டி வருவது தான் இங்கு வேடிக்கை “