கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 24,925 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In India 21 09 2021
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,925 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் தொற்றுக்கு 251 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,45,416 ஆக உயர்ந்துள்ளது.
இது போக நேற்று ஒரே நாளில் 34,470 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் 82 கோடியைக் கடந்துள்ளது. இந்தியாவில் தலா 100 பேருக்கு 60.37 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். ஒரு நாளுக்கு சராசரியாக 88 லட்சம் பேர் இந்தியாவில் தடுப்பூசியின் பயனை அடைகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை நேற்று ஒரு நாளில் 1,661 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 23 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தமிழகத்தில் 35,360 ஆக உயர்ந்துள்ளது.
” உலகளாவிய அளவிலும் கொரோனோ தொற்றின் விகிதம் பெரும்பாலும் குறைந்த வண்ணமே இருந்து வருகிறது. ஆனால் அக்கிருமி ஏற்படுத்திய ஒட்டு மொத்த உலகளாவிய உயிரிழப்புகள் மட்டும் 47 லட்சத்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது “