கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,597 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In Tamilnadu 02 10 2021
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,597 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் தொற்றுக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தமிழகத்தில் 35,603 ஆக உயர்ந்து இருக்கிறது.
ஒட்டு மொத்த தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 90 கோடியைக் கடந்து இருக்கும் நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி உபயோகம் 4.75 கோடியாக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் முதியவர்கள் பெரும்பாலும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மறுத்தாலும், இளம் வயதினர் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுடன் முன்களப்பணியாளர்கள் போல செயல்பட்டு தடுப்பூசிகளை முன் வந்து எடுத்துக் கொள்கின்றனர்.
“ கொரோனோ தடுப்பு செயல்பாடுகளிலும் சரி, தடுப்பூசி செயல்பாடுகளிலும் சரி தமிழகம் ஒட்டு மொத்தமாக தனது சிறப்பான பங்களிப்பையும், செயல்பாடுகளையும் அளித்து வருகிறது “