கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,658 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

TamilNadu Covid Updates 16 09 2021

TamilNadu Covid Updates 16 09 2021

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,658 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு 29 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 35,246 ஆக உயர்ந்துள்ளது.

இது போக நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,542 ஆக உள்ளது. சில நாட்களாகவே பள்ளி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்படுவது அதிகமாகி வருகிறது. இது மூன்றாவது அலை குறித்த பயத்தை மக்களிடையே விதைப்பதாக உள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி உபயோகம் 4.02 கோடியாக உயர்ந்துள்ளது. மெகா தடுப்பூசி முகாம்களுக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இன்னும் சில நாள்களிம் மற்றுமொரு மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுக்க அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் என்று அரசு சார்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது.

“ மூன்றாவது அலை குறித்த பயம் தேசம் முழுக்க நிலவி வரும் நிலையில், நாம் நமக்கு விதித்த கொரோனோ கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிப்போம். நம்மால் ஆன பரவலை முடிந்த அளவுக்கு இந்த தேசத்திற்குள் தடுத்திடுவோம், கட்டுப்படுத்திடுவோம் “

About Author