தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Covid Updates In TamilNadu 29 09 2021
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,624 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழக்த்தில் 24 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,550 ஆக உயர்ந்து உள்ளது.
இது போக இன்று ஒரு நாளில் 1,639 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 4.66 கோடியாக உயர்ந்து இருக்கிறது. நாளுக்கு நாள் தானாக வந்து தடுப்பூசி செலுத்துக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்து வருகிறது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
” குறிப்பாக மூன்று மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் மட்டும் 63 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கொரோனோ தடுப்பு செயல்பாடுகள் மிகவும் திருப்தி அளிப்பதாகவே இருக்கிறது. ”