இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,639 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Covid Update In TamilNadu 11 09 2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில், இரவு 8 மணி நிலவரம் வரை 1,639 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 27 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,146-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 1,517 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனோ சம்மந்தப்பட்ட எல்லா செயல்பாடுகளிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது தமிழக அரசு. எந்த சூழல் வந்தாலும் எதிர்கொள்ளும் அளவுக்கு திறன் தமிழகத்திடம் தற்போது இருப்பதாக உறுதிப்பூர்வமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் அறிவித்துள்ளது. இரண்டாவது அலையின் போது கிடைத்த அனுபவங்களை வைத்து தமிழக அரசு இனி வரும் பேரிடரை எதிர்கொள்ள முன்னதாகவே எல்லா நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
“ ஆக்சிஜன் உற்பத்தி, தடுப்பூசி விநியோகம், படுக்கை வசதிகள், கொரோனோ பிரிவுகள் என்று யாவினிலும் தன்னிறைவுடன் இருப்பதாகவும், மூன்றாவது அலை எப்போது வந்தாலும் அதை தமிழகம் திறம்பட எதிர்கொள்ளும் என்றும் தமிழக மக்கள் நல வாழ்வு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது “
About Author
Auto Amazon Links: No products found.