இலங்கையின் அருகே நிற்கும் சீன மற்றும் பாகிஸ்தான் உளவு கப்பல்கள், இந்தியாவை வேவு பார்க்கிறதா?

Chinese Spy Ship

Chinese Spy Ship

இலங்கை அம்பந்தொட்டா துறைமுகத்தின் அருகே சீனா மற்றும் பாகிஸ்தான் உளவு கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த வாரமே சீன உளவு கப்பல் ஒன்று இலங்கை அம்பந்தொட்டா துறைமுகத்திற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்தியா அதற்கு கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், சீன உளவு கப்பல் மட்டும் அல்லாது அதனுடன் பாகிஸ்தான் போர்கப்பலும் இலங்கைக்கு அருகே நின்று கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது இந்தியாவை உளவு பார்க்கும் வேலையோ, இல்லை இந்தியாவை சீண்டிப்பார்க்கும் வேலையோ எதுவாக இருந்தாலும், அது இலங்கையையே பாதிக்கும். ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருக்கும் இலங்கைக்கு இது மேலும் சிக்கலைத் தான் ஏற்படுத்தும்.

“ சமீபத்தில் கூட இலங்கைக்கு இந்தியா பெரும் அளவில் பொருளாதார உதவிகள் செய்து இருந்தது, செய்து கொண்டும் இருக்கிறது, அவர்களின் இந்த சீன விசுவாசம் என்பது அவர்களுக்கு சாதகமாக இருக்குமோ என்பதெல்லாம் தெரியாது. ஆனால் நிச்சயம் அவர்களுக்கே பாதகமாக அமையும் “

About Author